யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கோவை அவினாசி சாலை கிளையில் யூனியன் முஸ்கான் திட்டத்தில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு யூனியன் முஸ்கான் மற்றும் சேமிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஓவிய போட்டி நடைபெற்றது.
இதில் சுமார் நான்கு வயது முதல் 10 வயது வரையிலான மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..இது குறித்து வங்கியின் பிராந்திய தலைவரும்,துணை பொது மேலாளரும் ஆன ரெஞ்சித் சுவாமிநாதன் கூறுகையில்,கோவை மாவட்டத்தில் உள்ள அறுபது கிளைகளிலும் யூனியன் முஸ்கான் திட்டம் துவங்கப்பட்டு அதில் வாடிக்கையாளர்கள் இணைந்து வருவதாகவும், வயதுடைய குழந்தைகளுக்கான சேமிப்புக் கணக்காக உள்ள இந்த யூனியன் முஸ்கான் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி கல்லூரி செல்வது வரை அவர்களது கல்வி கடன், இன்சூரன்ஸ், உள்ளிட்ட பல்வேறு வங்கிச் சேவைகள் இதில் கிடைப்பதாக தெரிவித்தார்..
இந்நிகழ்ச்சியில்,துணை பிராந்திய தலைவர்கள் மற்றும் உதவி பொது மேலாளர்கள் கோபால் ராவ்,ரவீந்திரன் உட்பட வங்கி அதிகாரிகள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…