மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தலைமை
அலுவலகமாக கொண்ட தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பாக மாநிலம், மாவட்டம், ஒன்றியம்,
நகரம், பேரூராட்சி, நகராட்சி, உள்ளிட்ட. பகுதிகளில் நடக்க இருந்த சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு மரக்கன்று நடும் விழா அனைத்தும் ஒடிசா இரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு
அஞ்சலி செலுத்தும் விதமாக நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்படுகிறது.
மேலும் தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் இரயில் விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு தங்களது
ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மாநிலத் தலைவர் ஜி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் ஓடிசா இரயில் விபத்து அனுசரிக்கும் விதமாக இரண்டு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தமிழ்நாடு இயற்கை சுற்றுச்சூழல் அலுவலகங்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.