ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி விபத்துக்குள்ளானது.இந்திய மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இது ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதயத்தில் ரத்தத்தை உரையும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுமென்று 03.06.2023மாலை 7:00 மணி அளவில் காமராஜர் சிலை அருகில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவருமான
G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி அஞ்சலி் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை தமிழர் களம் அழகர் முன்னிலை வகித்தார். தமிழ் மீனவர் விடுதலை வேங்கை இரா.மங்கையர் செல்வம். மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ. சுகுமாரன். திராவிடர் கழகம் திரு.அன்பரசன். புதுச்சேரி தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ்,ராஜா, கலாம் விதைகளின் விருச்சம் ராஜா, அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், புதுச்சேரி எழுத்தாளர் கழகம் தமிழ் நெஞ்சன், எஸ் டி பி ,ஐ கட்சி அப்துல்லா, புதுச்சேரி மக்கள் உரிமை கட்சி மணிமாறன், பி போல்ட் பஷீர், மக்கள் மன்றம் மாறன், மாணவர் பெற்றோர் சங்கம் நாராயணசாமி,புதுச்சேரி தன்னுரிமை கழகம் சடகோபன், தமிழ் தேசிய பேரியக்கம் வேலுச்சாமி, மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த இளைஞர் அணி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு நிகழ்வில் அஞ்சலி செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *