கந்தர்வக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான விரிவுபடுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி கந்தர்வகோட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கணிதம் மற்றும் அறிவியல் பாட பயிற்சியினை மாவட்டக் கல்வி அலுவலர் ( இடைநிலை) ரமேஷ் அவர்கள் பார்வையிட்டு ஆசிரியர்கள் பயிற்சியில் கருத்தாளர்கள் வழங்கக்கூடிய கருத்துக்களை வகுப்பறைக்கு கொண்டு சேர்க்கவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பள்ளியில் உள்ள கற்றல் வளங்களை முழுமையாக பயன்படுத்தி மாணவர்களை முன்னேற்ற வேண்டும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளிக்கு வரும் ஆர்வத்தை அதிகரிக்கவும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கேட்டுக் கொண்டார்.
பார்வையின் போது முதுநிலை விரிவுரையாளர் ஆனந்தராஜ் வட்டாரக் கல்வி அலுவலர் நரசிம்மன் பள்ளித் துணை ஆய்வாளர் குருமாரிமுத்து ஆகியோர் உடனிருந்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்கள் ஜெயக்குமார், வாசுகி, கார்த்திகேயன் , ஜெயலட்சுமி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் செய்திருந்தார்.