மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள நாகப்பன்சிவல்பட்டியில் மிக பிரசித்திபெற்ற அருமிகு ஸ்ரீஉலகமாதா திருக்கோவில் அதிகார கண்மாய் நடுவே அமைந்துள்ளது.
இக்கோவிலில் 12 ஆண்டுக்குப் பிறகு நேற்று மகா கும்பாபிஷேக விழா அதி விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று கோவில் அருகே யாகசாலைகள் அமைக்கப்பட்டு யாகங்கள் வளர்க்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க வானத்தில் வருனை பகவான் வட்டமிட கும்பத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.. பின் அம்மன்னுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனை நடைபெற்றது.
இந்த விழாவினைக்கான சுற்றுவட்டாரப் பகுதிகளான பூதமங்கலம், ஒத்தப்பட்டி நெல்லுக்குண்டு பட்டி மூவன்செவல்பட்டி கச்சிராயன்பட்டி கொடுக்கம்பட்டி,மணியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.