தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா
ஒடிசா ரயில் விபத்து காரணமாக எளிமையாக நடைபெற்றது. அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு ஆலங்குளம் ஒன்றிய தலைவர் எம் திவ்யா மணிகண்டன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், தொழிலதிபர் மணிகண்டன்,
மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்.
வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சண்முகராம் தட்டாப்பாறை ரமேஷ், மற்றும் திராவிடமணி.சந்தனசுப்பிரமணியன். புதுப்பட்டி ஆசிர்வாதம், மருதம்புத்தூர் தொழிலாளர் நலவாரியம் இணை செயலாளர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.