அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே சதீஷ்குமார், நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்து கலந்து கொண்ட அனைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மலர் மாலை மற்றும் கைத்தறி ஆடை அணிவித்தனர்

பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பெரியஊர் சேரி ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டியன், திமுக நிர்வாகிகள் தியாகு, அருள், மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பிரதாப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் 11 காளைகளும்.100 வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் அரசு வழிகாட்டுதலின் பேரில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற காளைக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பீரோ கட்டில் அண்டா குத்துவிளக்கு உள்ளிட்ட சிறப்பு பரிசுகளும் ரொக்க பணமும் வழங்கப்பட்டது.. அப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறும் முதல் நாளே அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் வீரர்கள் மற்றும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வண்ணம் தண்ணீர் குடிக்க நான்குக்கும் மேற்பட்ட சின்டெக்ஸ் தொட்டிகள் அப்பகுதியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்தது.

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை சின்னஊர்சேரி எஸ்.கே. சதீஷ்குமார், நண்பர்கள் செய்து இருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.. இதில் பேரூராட்சித் துறை வருவாய்த்துறை சுகாதாரத் துறை உள்ளிட்ட பணியாளர்களும் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *