தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில்
40 ஆண்டுகளுக்கு பிறகு துத்திகுளம் சாலையில் ஏடிஜே மஹாலில்
ஆலங்குளம் டி.ட்டி டி.ஏ நடுநிலைப் பள்ளியில் 1983-84 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் மாணவிகள் மறுசந்திப்பு விழா நடைப்பெற்றது.
டி ட்டி.டி ஏ. பள்ளியில் பணியாற்றி ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் லில்லி , சகுந்தலா, ஜானி பொன்னையா, நளினி , ஆகியோர்
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் மாணவர்கள் டி.பி.வி வைகுண்டராஜா, தேவதாஸ், ஒரியாண்டர் சண்முகசுந்தரம், முத்துக்குமார், தமிழ்மணி, ஆறுமுகம், தங்கராஜ், ரூபன், சொக்கலிங்கம், பால்ராஜ், மற்றும் முன்னாள் மாணவிகள் எப்சி கார்த்திகேயேன், பூங்கொடி, கண்ணகி, மேரி, மாரியம்மாள், முன்னாள் மாணவ மாணவிகள் அனைவரும் பாடம் கற்ப்பித்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து பரிசு பொருட்கள் வழங்கியும் பாதம் தொட்டு ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சியடை ந்தனர்.
அதனையடுத்து முன்னாள் ஆசிரியர்கள் பேசும்போது
மாணவ மாணவிகளாக பள்ளியில் பயின்று தற்போது தொழில் அதிபர்களாகவும், ஆசிரியர்களாக உயர்ந்த நிலையில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கடந்த காலங்களில் பள்ளியில் பள்ளிபருவத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை எடுத்து
நெகிழ்ச்சியடை ந்தனர்.
இந்த நிகழ்வில் முடிவில் முன்னாள்
மாணவர்களும் மாணவிகளும் குடும்பத்துடன் கலந்துகொண்டு குரூப் புகைப்படம் எடுத்து கொண்டு ஒருவரை ஒருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.