மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் திருச்சி
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி அதிகாலை வந்த அரசு பேருந்து அதன் எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் முன்பு மோதி பேருந்தின் முன்பகுதி கீழ் சிக்கி இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில்இருசக்கர வாகனத்தில் வந்த கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சங்கர் என்பவர் உடல் கருகி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்தில் பலியானார்.
மேலும் பேருந்து முன் பகுதியிலும் தீ பற்றியது உடனே தீயணைப்பு வீரர்கள் வந்து தீயணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் வந்தவர்களுக்கு எந்த வித காயமும் இல்லை இந்த சம்பவம் குறித்து அச்சிறுப்பாக்கம் போலீசார்
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.