பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அண்ணா சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தோழர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை கண்டித்தும் பெண் காவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் பாபநாசம் நகரத்திற்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலர்களை நியமிக்க கோரியும் , பாபநாசம் பகுதிகளில் கைப்பற்றப்பட்ட திருட்டு மணல் பற்றி லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் பாபநாசம் ஊரக காவல் நிலையங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநில குழு தலைவர் டெல்லி பாபு தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சிவகுரு காதர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *