தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக திருப்பாலைத்துறை கம்பியடித்துறை குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து கோயிலை வந்து அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தீபராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சி வடைபெற்றது.

இதில் திருப்பாலைத்துறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலைத்துறை மற்றும் நாட்டான்மைகள், கிராமவாசிகள், இளைஞர்கள், விழா குழுவினர்கள் நிகழ்ச்சிகாண ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *