வலங்கைமான் வைத்தீஸ்வரார் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் குடவாசல் சாலையில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தீஸ்வரார் கோயிலில் வைகாசி விசாகம் பிரம்மோற்சவம்விழா பத்து நாட்கள் நடைபெற்றது.

விழா நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் கணபதி ஹோமம், கோ பூசை, ஜபம், சுவாமி புறப்பாடு, அபிஷக ஆராதனைகள், பஞ்ச மூர்த்தி அபிஷேகம், ஸ்ரீ சோமாஸ்கந்தருக்கு 108 சங்க அபிஷேகம்,முசுகுந்தார்ச்சனை, திருக்கல்யாண உற்சவம், மற்றும் 16கால
யாகசாலை பூஜையும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், சுவாமி மற்றும் அம்பாளுக்கும் கலசாபிஷேகமும் நடைபெற்றது. இரவில் பஞ்ச மூர்த்தி வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்ப்பாடுகளை உபயதாரார்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *