ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வெங்கடாசலம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார் ஆகியோர் முன்னிலையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வின் போது நகர்மன்ற உறுப்பினர்களும், பணியாளர்களும் கலந்து கொண்டனர்