அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை புதுச்சேரி கிளை சார்பில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் காட்டு மலர்களின் கூட்டுமணம் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் வில்லுப்பாட்டு இசை விழா நடைபெற்றது. விழாவை புதுவைத் தமிழ் சங்கத் தலைவர் முத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்ச் சங்க செயலாளர் சீனு.மோகன்தாஸ், பொருளாளர் அருள்செல்வம் துணை தலைவர் திருநாவுக்கரசு, துணைச் செயலாளர் தினகரன் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், ராசா, வேந்திரன் ஆனந்தராசு ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.