நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 75 நீர் நிலைகளை மேம்படுத்தி பாதுகாக்க அம்ரித் சரோவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுவை அரசு வட்டார வளர்ச்சி அலுவலகம் அரியாங்குப்பம் வட்டார அலுவலகம் சார்பில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதி தவளக்குப்பம், பூரணாங்குப்பம், ஆண்டியார் பாளையம் அபிஷேகப்பாக்கம் டி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பொங்கல் வைக்கும் விழா நடைபெற்றது. சபாநாயகர் செல்வம் பொதுமக்களோடு இணைந்து பொங்கல் வைத்து மரக்கன்றுகளை நட்டார். நிகழ்ச்சியில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணி, விரிவாக்க அதிகாரி கார்த்திகேயன், இளநிலை பொறியாளர் சிவஞானம் பணி ஆய்வாளர் நற்குணன் கிராம சேவாக் செந்தில், அரசு வட்டார வளர்ச்சி லட்சுமணன், சாந்தமூர்த்தி மற்றும் அப்பகுதியை முக்கிய பிரமுகர்கள் லட்சுமிகாந்தன், சக்திபாலன், சுகுமார், ஆறுமுகம், செல்வி, குமாரசாமி, மணி, தண்டபாணி, அய்யனார், சுப்பிரமணி, தமிழ், விஜி, திருஞானம், பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *