புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் மு.நாராயணசாமி அவர்களால் உதவும் உள்ளம் கொண்ட நல்ல நண்பர்கள் உதவியால் மூன்று மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில் பார்த்திபன், மிஸ்சஸ் பார்த்திபன், குளங்கள் காப்போம் கார்த்திகேயன், ஆசிரியர் சசி குமார் உடனிருந்தனர்.
கீழ்கண்டவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது
- தாய், தந்தையை இழந்து படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு 9-ஆம் வகுப்பு முதல் பணம் கட்டி படிக்க வைத்து வருகின்றோம் மாணவி இந்த ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்க முதல் பருவ கட்டணம் 21-ஆயிரம் கல்வி கட்டணம் மற்றும் பாடபுத்தகம் அளிக்கப்பட்டது.
- 10-ஆம் வகுப்பில் 470-மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்கும் கனவில் உள்ள மாணவன் வறுமையின் காரணமாக 11-ஆம் வகுப்பில் சேர முடியாமல் வீடு வீடாக பேப்பர் போடும் மாணவனுக்கு 11-ஆம் வகுப்பு படிக்க ஆண்டு கட்டணம் 50-ஆயிரம் பாடபுத்தகம் மற்றும் சீறுடை ஆகியவற்றை அளிக்கப்பட்டது மேலும் மருத்துவம் படிக்க ஸ்காலர் ஸ்பெக்ட்ரா கோச்சிங் சென்டரில் இரண்டாண்டு இலவசமாக படிக்க உதவி செய்யப்பட்டது.
3.கடந்த 2022 ஆண்டு 12-ஆம் வகுப்பு முடித்து கல்வி கட்டணம் கட்டி TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்ககி மேல்படிப்பு படிக்க முடியாமல் வீட்டு வேளை செய்து வந்த மாணவிக்கு 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வி கட்டணம் 58-ஆயிரம் கட்டி மாணவி உயர் கல்வி படிக்க TC மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வாங்கி கொடுத்து மேல்படிப்பு படிக்க உதவி செய்யப்பட்டது