எல்.தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

ராசிபுரம் நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம், ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள சுகம் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமினை ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் அரசு மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் ராசிபுரம் கிளை, சுகம் மருத்துவமனை இணைந்து நடத்தின.

இதில் 25 பேர் இம் முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இம் முகாமில் ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கே .எஸ் .கருணாகர பன்னீர்செல்வம், செயலாளர் ஜி .தினகர், ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு திட்ட சேர்மன் இ.என். சுரேந்திரன் ,கோ கிரீன் திட்ட சேர்மேன் மஸ்தான் , டி.பி.வெங்கடாஜலபதி, மாவட்ட மராத்தான் திட்டச் சேர்மன் ஜே.கே .சுரேஷ் சுகம், மருத்துவமனை நிர்வாகி டாக்டர் ஹேமலதா சுகவனம், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் செந்தில்குமார், செயலாளர் ரமேஷ் பொருளாளர் டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *