எல்.தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம்

ராசிபுரம் வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

சிலம்பாட்டம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்றவற்றில் தேசிய அளவிலான போட்டிகள் புதுடெல்லி குருகிராம் டோ தேவிலால் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். சிலம்பாட்டப் போட்டியில் தொடும்புள்ளி விளையாட்டில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் கே.ராகுல், பி.ஆகாஷ், என்.பிரனேஸ்கார்த்திக், ஜே.ஹித்தேஸ்பாலாஜி, ஜி.வி.நதீஸ், எம்.எழிலன், எஸ்.பரத்குமார், பி.ராஜசேகர் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். கே.அஸ்விக் வெள்ளிப்பதக்கம் பெற்றார். வில்வித்தைப் போட்டி ஜூனியர் பிரிவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எம்.எழிலன் தங்கப்பதக்கம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பி.ராஜசேகர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.
ஸ்கேட்டிங் போட்டியில், சப் ஜூனியர் பிரிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல், அப்துல்லா ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர். பதக்கம் பெற்றவர்களை வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைமை பயிற்சியாளர் அ.பன்னீர், உதவித்தலைவர் ஆர்.சீனிவாசன், செயலர் பி.சிவக்குமார், உதவிச் செயலர் எஸ்.பத்மநாபன் ஆகியோர் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *