வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பழைய முத்தனம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமராஜ் (28) என்பவரை போக்சோ வழக்கில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் எஸ்.பி.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் அமுதா ஆகியோரின் சீரிய முயற்சியால், திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி, ராமராஜுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.2,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *