வள்ளியூர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், பழவூர் கிராம விவசாயிகளுக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் உழவர் பேரணி நடத்தப்பட்டது.

இவ்விழாவிற்கு திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுப செல்வி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்ந்த தொழில்நுட்ப செய்திகளான மண் பரிசோதனை செய்து உரமிடுதல் மற்றும் மண்வளத்தை காத்தல், சிறுதானியங்களின் முக்கியத்துவம் மற்றும் அதனை பயிரிடுதல், இயற்கை வேளாண்மை ஆகியவற்றை குறித்து விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்து மரக்கன்று நடப்பட்டது. மேலும் மரம் நடுவோம் மழை பெறுவோம் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

கால்நடை துறையை சார்ந்த கால்நடை மருத்துவர் அனிதா கலந்துகொண்டு கால்நடை துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் கால்நடை களுக்கு வரும் நோய்கள் அதன் மேலாண்மை குறித்து எடுத்துரை த்தார்.

வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஆமினி நெல் விதையில் விதை நேர்த்தி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து செயல் விளக்கமாக செய்து காண்பித்தார். உதவி தொழில் நுட்ப மேலாளர் திரிசூலம் மற்றும் உதவி வேளாண் அலுவலர் மாரி செல்வம் ஆகியோர் இவ் விழாவிற்கான ஏற்பாடு செய்தி ருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *