பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில், தேசத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத குருமார்களில் சார்பில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அவரவர்கள் (இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள்) முறைப்படி இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள் செய்தனர்.

மேலும் ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல்களும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் கோவில் தேவராயமன்பேட்டை மச்சபூரீஸ்வரர் ஆலயத்தின் அர்ச்சகர் கண்ணன் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தின் இணை பங்குத்தந்தை தார்திஸ், பண்டாரவாடை சாலை பள்ளிவாசலின் இமாம் உபயதுல்லா உட்பட அனைத்து மதத்தினரும், சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எஸ்டிபிஐ கட்சியினர் செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *