நாலுகோட்டை அருள்மிகு ஶ்ரீ அதிகுந்த வரத ஐயனார் திருக்கோவில் புரவி எடுப்பு விழா

சிவகங்கை மாவட்டம் சோழபுரம் அருகே உள்ள நாலுகோட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பூரண புஷ்கலா சமேத ஶ்ரீ அதிகுந்த வரத அய்யனார் திருக்கோவிலில் புரவிஎடுப்பு விழா கிராம கமிட்டி தலைவரும் நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் மற்றும் ஆறூர் வட்டகை நாடு நாட்டு அம்பலம் அழ.ஒய்யணன் அவர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது
அய்யனார் சுவாமிக்கு காப்பு கட்டி விழா துவங்கியது மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய நிகழ்வான புரவி எடுப்பு விழா நடைபெற்றது
முன்னதாக கிராம விநாயகர் கோவிலில் இருந்து களிமண்ணால் செய்யப்பட்ட மண் குதிரைகளை விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் தொழில் சுமந்து மங்கள வாத்தியங்களுடன் கிராமத்தை சுற்றி வலம் வந்தனர் தொடர்ந்து கோவில் சென்றடைந்து அய்யனார் சுவாமிக்கு புரவிகளை சமர்ப்பித்து வழிபட்டனர் நிறைவாக மூலவர் அய்யனார் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யனார் சுவாமியை வழிபட்டனர்.