தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் உலக ஓசோன் தினத்தினை முன்னிட்டு ஓசோனை பாதுகாப்போம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஓசோனை பாதுகாப்பது தொடர்பான பல்வேறு தகவல்கள் மாணவர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது. ஓசோன் பாதுகாப்பு தொடர்பான ஓவியப் போட்டி பள்ளி அளவில் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியரை மரங்கள் நட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. ஆசிரியர் ஸ்ரீதர்  நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *