திருவள்ளூர்
பொன்னேரி அரிமா சங்கம் சார்பில் நூறாவது வாரமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணிகளுக்கு மதிய வேளையில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்காவிற்கு உட்பட்ட காட்டூர், மீஞ்சூர், அத்திப்பட்டு, பொன்னேரி, ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் கர்ப்பிணிமார்களுக்கு பொன்னேரி அரிமா சங்கம் சார் பில் மதிய வேளையில் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. அதன் படி இந்நிகழ்வானது 100 வது வாரமாக நடைபெற்று வருகிறது.
இதனையடுத்து காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடை பெ ற்ற கர்ப்பிணிகளுக்கு மதிய வேளை அறுசுவை உணவளிக்கும் நிகழ்ச்சியில் அரிமா சங்க முதல் துணை மாவட்ட ஆளுநர் ரவிச்சந் திரன், இரண்டாவது துணை மாவ ட்ட ஆளுநர் மணி சேகர், முன்னாள் மாவட்ட ஆளுநர் சுரேஷ்குமார், மாவட்டத் தலைவர் சரவணன், மண்டல தலைவர் எஸ்.சரஸ்வதி, மற்றும் காட்டூர் அரசு மருத்துவர் மதுசுதர்சனன், பொன்னேரி பகுதி அரிமா சங்கத் தலைவர் ராஜா, செயலாளர் சுகுமார், பொருளாளர் கோபி, நிர்வாகிகள் வினோத், சந் திரசேகர், பிரவீன்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கர்ப்பிணி களுக்கு மதிய வேளை அறுசுவை உணவு வழங்கினர்.
முடிவில் அரசு மருத்துவர் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஜெனரேட்டர், இசிஜி உள்ளிட்ட பொருட்கள் வேண்டுமென அரிமா சங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தார்.