திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அமைந்துள்ள பகுதிநேர ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார். திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட தண்டலை இலவங்கர்குடி அகரத் திரு நல்லூர் ஊராட்சிகளில் அமைந்துள்ள பகுதிநேர நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பணியில் இருந்த பணியாளர்களிடம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி பருப்பு சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் தேவையான அளவுக்கு உள்ளதா எனவும் கேட்டறிந்தார். ஆய்வின்போது திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் உள்பட சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்