வேண்டாம் சாதி வெறி ! கவிஞர் இரா .இரவி .

மனிதனை விலங்காக்கும் சாதி வெறி வேண்டாம் !
மனிதனைக் கொல்லும் கொலைவெறி வேண்டாம் !

விலை மதிப்பற்ற மனித உயிர்களை
வீண் சண்டை இட்டுப் பறிப்பது முறையோ ?

எந்த உயிரும் உயர்ந்ததுதான் உலகில் !
எந்த உயிரும் மலிவானது அல்ல !

அன்பு செலுத்துவது மனிதன் குணம் !
வம்பு செய்வது விலங்குகள் குணம் !

உன்னுயிர் போல மற்ற உயிர் நேசி !
உயிரைப் பறிப்பது மடமை நீ யோசி !

கனிவோடு நடந்திட்டால் சண்டை வராது !
கணினியுகத்தில் காட்டுமிராண்டி ஆகலாமா ?

சாதியின் பெயரால் கலவரம் ஏனோ ?
சாதிக்கும் வயதில் மோதல் சாவு ஏனோ ?

வெட்டியும் குத்தியும் வீழ்வது ஏனோ ?
வேதனையை குடும்பத்திற்கு தருவது ஏனோ ?

சிந்தித்துப் பார்த்து செயலினை மாற்று !
சிந்திப்பவன்தான் மனிதன் மனிதனாக மாறு !

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *