வடக்குத்தோப்பு புளியக்குடியில் பகுதி நேர அங்காடி அமைத்து தர வலியுறுத்தி திருவோடு ஏந்தி உடைத்து, தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.



தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் புளியக்குடி ஊராட்சியில் வடக்கு தோப்பு புளியக்குடியில் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் தற்போது உள்ள அங்காடியில்ரேஷன் பொருட்கள் வாங்க 3 கிலோமீட்டர் தூரம் ரயில்வே இருப்புப் பாதையை கடந்து நடந்து செல்ல வேண்டி உள்ளது,இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது வடக்கு தோப்பு புளியக்குடியில்பகுதி நேர அங்காடி அமைத்து தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்து வருகின்ற நிலையில் இன்று வரை மேற்படி கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது உடன் பொதுமக்கள் நலன் கருதி பகுதி நேர அங்காடி அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புளியக்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பி. சுசீந்திரன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார் உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர். செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன். ஒன்றியக்குழு உறுப்பினர் சி. மணிகண்டன் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கோரிக்கை மனுவை வழங்கி திருவோடு ஏந்தியும் உடைத்து போராட்டம் நடைபெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *