இலக்கிய சங்க விழா
முகையத் ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி சுயநிதிப்பிரிவு ஆங்கிலத்துறையின் 7 வது *இலக்கிய சங்க விழா இனிதாக நடைபெற்றது.
விழாவில் ஆங்கிலத்துறையின் தலைவர் முனைவர் S. சபி அகமது அவர்கள்
வரவேற்புரை நல்க, கல்லூரியின் முதல்வர்
முனைவர் A. முகமது அஸ்லம் அவர்கள் சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புச் செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியை ஆங்கிலத்துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பரிசு பெற்ற மாணவன்
கலசலிங்கம் பல்கலைக்கழகமும் ஆனந்த் இன்ஸ்டியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி சென்னை மற்றும் ஆனந்த் ரேடியோ 89.6 இணைந்து, வானொலி உலக தினத்தை முன்னிட்டு நடத்திய RJ Hunt இல், முகையத் ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறையின் மூன்றாமாண்டு மாணவர். சா. ஜாகிர் உசேன் கலந்துகொண்டு, மூன்றாம் பரிசினைப் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவரை, கல்லூரியின் முதல்வர் A. முகமது அஸ்லம் அவர்கள் பாராட்டினார்கள். அருகில் சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் செ . சிராஜூதீன்.