தமிழ்நாடு

  • பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்துக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
    கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை கடந்த 2013 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது.  இதன்  விசாரணை இன்று நடைபெற்றது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில்,  எத்தனை பேருந்துகளில் படிகட்டுகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டு உள்ளது? எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்படாமல் உள்ளது? என்பது குறித்து தமிழக உள் துறை செயலாளர்,  போக்குவரத்து துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. இளைஞர்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் அரசு,  தனியார் பேருந்துகளில் படிகட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து பேருந்துகளின் படிகட்டுகளிலும் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
  • 10 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தர்ணா
    10 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தர்ணா… கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் அம்மாசைப்பன் (வயது 80). மோட்டார் கம்பனி நடத்தி வந்துள்ளார். இவருக்கு செந்தில்குமார், ரவிக்குமார் ஆகிய இரண்டு மகன்களும், மகேஸ்வரி, சூர்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தனக்கு சொந்தமான சுமார் 10 கோடி மதிப்பிலான சொத்துகளை மகன்கள் மோசடியாக எழுதி வாங்கிவிட்டு விரட்டியடிததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.பல முறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலிசார் மனு அளிக்க அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். இது குறித்து பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது குழந்தைகள் தனக்கு சொந்தமான சுமார்… Read more: 10 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தர்ணா
  • மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு
    ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவதுஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் “என் கல்லூரி கனவு” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்விக்கு சரியான வழியை ஏற்படுத்தித்தருவதற்காக அமைக்கப்பட்டுள்ளது இத்துறையின் மூலம் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வருகை தந்துள்ளனர். மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற. மாணவிகள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள் பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன என்பதையும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை… Read more: மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு
  • தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
    கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கே பிறகே அனுமதிக்கப்படுகிறது. கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் இருப்பதால் அந்த காய்ச்சல் தமிழகத்துக்குள் பரவுவதை தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கின்றனர். அத்துடன் சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. அதுபோன்று கேரளாவில் இருந்து பொருட்கள் ஏற்றி வந்தால் அவை என்ன பொருட்கள் என்று வாகனம் முழுவதுமாக சோதனை செய்யப்படுகிறது.இந்த நிலையில், தமிழக – கேரள எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கால்நடைத்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வரும் கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழக-… Read more: தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு
  • காட்டுமன்னார்கோயில் மலையாள அக்னி கருப்புசாமி வடவாறு ஆற்றில் இறங்கும் திருவிழா
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேஷண்டன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து ஆட்சி செய்யும் மலையாள அக்னி கருப்புசாமி சுவாமி சித்ரா பௌர்ணமி திரு விழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக கள்ளழகர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் பெண்கள் விளக்கு வைத்து வழிபாடு செய்து சிறப்பு ஆராதனை செய்தனர் தொடர்ந்து சுவாமி கள்ளழகர் தெருக்கள் வழியாக வாணவெடிகள் ஒளிக்க வடவாறு ஆற்றுக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றுவடவாறு ஆற்றில். இறங்கி புனித நீராடினார் பின்னர் ஆற்றில் வைக்கப்பட்ட கள்ளழகருக்கு அபிஷேகம் செய்தும் மழை வேண்டியும் இப்பகுதியில் விவசாயம் செழுமையாக விளையவும் பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் சிறப்பு பூஜை நடத்தி அபிஷேகம் செய்தனர்பின்னர் ஒருவருக்கு ஒருவர் கள்ளழகர் மேலே தண்ணீரை பீச்சி அடித்து மகிழ்ந்தனர் பின்னர் கள்ளழகர் ஊர்வலத்தின் போது அங்கிருந்த பெண்கள் சிறுமிகள் நடனமாடி தெருக்கள் வழியாக வரவேற்று பின்னர் சுவாமி சன்னதியை வந்து அடைந்தது முன்னதாக சுவாமிக்கு அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வர்ர்… Read more: காட்டுமன்னார்கோயில் மலையாள அக்னி கருப்புசாமி வடவாறு ஆற்றில் இறங்கும் திருவிழா