- சவாலான கல்லீரல் மாற்று அறுவை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை!சவாலான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை 1.5 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக செய்து கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை! குழந்தைகளுக்குக் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும் பிலியரி அட்ரேசியா எனப்படும் பிறவி நோயால் பாதிக்கப்பட்ட 1 1/2வயது குழந்தைக்கு ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை” கோவை ஆவாரம்பாளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையானது, வெற்றிகரமாக செய்து மருத்துவத்தில்புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்,… Read more: சவாலான கல்லீரல் மாற்று அறுவை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாதனை!
- கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சப்போர்ட் குரூப் மீட்டிங் குழு சந்திப்புகோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பாக சப்போர்ட் குரூப் மீட்டிங் நடைபெற்றது.இதில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுப.வங்களை பகிர்ந்து கொண்டனர்.. கோவை பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சைத் துறையின் பத்தாவது ஆதரவு குழு சந்திப்பு (சப்போர்ட் குரூப் மீட்டிங்) மருத்துவமனை வளாகத்தில் உள்ள B -பிளாக் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உடல் பருமன்… Read more: கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சப்போர்ட் குரூப் மீட்டிங் குழு சந்திப்பு
- தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வுதென்காசி மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு;- தென்காசி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பதட்டமான மற்றும் பிரச்சனைக்குரிய வாக்குச்சாவடி மையங்களைமாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் நேரில் கள ஆய்வு மேற்கொண்டு தேர்தலை அமைதியாக நடத்த அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
- கோவையில் ஒரே நேரத்தில் ஆறு பைக்குகள் அறிமுகம்கோவை ஜெய்கிருஷ்ணா பஜாஜ் சார்பில் அதன் முப்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஒரே நேரத்தில் ஆறு புதிய பைக்குகள் அறிமுக விழா டாடாபாத் சத்யநாராயணா ஹாலில் நடைபெற்றது. விழாவில் ஆல் இந்தியா மோட்டார்சைக்கிள் சேம்பியன் .ரஜினிகிருஷ்ணன், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் விற்பனை பிரிவு துணைத்தலைவர் .நரசிம்மன், தமிழ்நாடு மண்டல விற்பனை மேலாளர் .ஹனுமத்பிரசாத், தமிழ்நாடு மண்டல சர்வீஸ் மேலாளர் .சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பல்சர் என் மற்றும் என் எஸ் வகையில் ஆறு புதிய பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு… Read more: கோவையில் ஒரே நேரத்தில் ஆறு பைக்குகள் அறிமுகம்
- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வுதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு விருதாச்சலம் நேற்று 28.03.24 வியாழன் இரவு 9:45 க்கு மேல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டம் முடப்பள்ளி பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் வான் நோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்டத் துணைத் தலைவர் தனலட்சுமி வானியல் பற்றி பல்வேறு தகவல்களை கூறினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அருள்மொழி தலைமையில் 60-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள்… Read more: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு
- ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சிதென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் தாங்களாகவே’ அறிவியல் மாதிரி களை உருவாக்கி காட்சிபடுத்தி அதற்கு விளக்க உரையும் பார்வையிட்ட பெற்றோர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறினர். அறிவியல் மாதிரிகளை உருவாக்கிய மாணவ, மாணவியர்களை பள்ளியின் தாளாளர் மருத்துவர் செந்தில் குமரன், நிர்வாக இயக்குநர் நித்யதாரணி, முதல்வர், துணை முதல்வர், அறிவியல் கண்காட்சியின் பொறுப்பாளர் சுஜாதா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வுதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். முருகப்பா அறக்கட்டளை பயிற்சியாளர்கள் அரங்குவளன் மற்றும் ஜெய்கணேஷ் ஆகியோர் மாணவர்களுக்கு சோதனைகளை செய்து காண்பித்து விளக்கினார்கள். பறக்கும் யானை,தராசு,காற்றின் அழுத்தம்,மடிக்கணினி,நீரின் அடர்த்தி,வெப்ப சலனம்,ஊசி துளை கேமிரா,ஒளியின் பாதை,நீர் பாயும் தன்மை போன்ற அறிவியல் சோதனைகளை நேரடியாக மாணவர்களே செய்து காண்பித்து விளக்கம் அளித்தனர்.நிகழ்விற்கான… Read more: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு
- திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக கருத்தரங்குஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நேதாஜி கல்லூரியில் கருத்தரங்குதிருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக மாணவ. மாணவிகளுக்கு ஒரு நாள் கருத்தரங்க (Natural language processing) இயற்கை மொழி செயலாக்கம் என்ற தலைப்பில் நடைபெற்றது கருத்தரங்கிற்கு கல்லூரி கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டில் துறை தலைவி ( பொ) ஆர் ரேணுகா வரவேற்றார் கல்லூரியின் தாளாளர் தலைவர் முனைவர்… Read more: திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் துறை சார்பாக கருத்தரங்கு
- கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம்கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும்கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம். கும்பகோணம் இஸ்லாமிய சமூக நல சங்கம் மற்றும் கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து மருத்துவ முகாம்கும்பகோணம் அல் அமீன் பள்ளி வளாகத்தில் நடைப் பெற்றது. முகாமிற்க்கு கிஸ்வா தலைவர் பி.எஸ்.யூசுப் தலைமை தாங்கினார்.செயலாளர் ஜாஹிர் உசேன்,திட்ட தலைவர் சதக்கதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தாளாளர் கமாலுத்தீன்மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். மகப்பேறு துறை டாக்டர் நித்யா குன்னோத்,குழந்தைமருத்துவ துறை டாக்டர்… Read more: கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம்
- விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம்சென்னை மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது… மொபைல் போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் சென்னை மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது. புதிய மொபைல் போன்களை அறிமுகம் செய்வதில் தனி சிறப்புடன் செயல்பட்டு வரும் சென்னை மொபைல்ஸ் இந்தியாவின் முன்னனி நிறுவனங்களின் புதிய வகை மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து… Read more: விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம்
- ஜைனோ பிளிக்ஸ் புதிய செயலி கோவையில் அறிமுகம்கல்வி,மருத்துவம்,சமையல் குறிப்புகள் குறும்படங்கள் என அனைத்து துறை சார்ந்து,சமூக வலைதளங்களில் வீடியோக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக (ZYNO FLIX) எனும் ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய செயலி கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது… யூடியூப், பேஸ்ஃபுக்,இண்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் என பல்வேறு செலிகளின் வாயிலாக வீடியோவை பதிவேற்றம்,மற்றும் பதிவிறக்கம் செய்வது உலக அளவில் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இதே போல வீடியோக்களை பதிவேற்றம் செய்து அதில் கணிசமான வருவானத்தை ஈட்டும் வகையில், கோவையை சேர்ந்த உதயபிரகாஷ் எனும்… Read more: ஜைனோ பிளிக்ஸ் புதிய செயலி கோவையில் அறிமுகம்
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஜல்லிக்கட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் ஆகியவை செய்து வருகிறது .முதல் கட்ட பணியாக ஜல்லிக்கட்டு வாடிவாசல் மற்றும் காளைகள் சேகரிக்கும் (கலெக்ஷன் பாயிண்ட்) இடம் ஆகியவை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது .காளைகளை சேகரிக்கும் இடமான தென்னந் தோப்பு பகுதியில்… Read more: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம்
- கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்ப தொழிற்சாலைகோவை தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலக முதலீர் மாநாட்டால், இந்தியாவில் முதன் முறையாக கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது உலக அளவில் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் சீனாவை விட இந்தியாவுக்கு அதிகம் வந்துகொண்டிப்பதாக ஜப்பானை சேர்ந்த மக்கினோ நிறுவன அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கின்றனர் நாட்டிலேயே முதன் முறையாக, ”ஃபிக்சர் மேனுஃபேக்சரிங்” என்ற அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஜப்பானை சார்ந்த மகினோ என்ற தொழிற்சாலை கோவை கருமத்தம்பட்டியில் நிறுவப்பட்டது . ஜப்பானில் 85 வருடங்களாக இயங்கும் மகினோ… Read more: கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்ப தொழிற்சாலை
- திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுகுடவாசல் அருகே பூந்தோட்டத்தில் நடைபெற்ற 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 23 கட்டுரைகள் மண்டல மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நன்னிலம் ஒன்றியம், பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் லலிதா ராமமூர்த்தி மாநாட்டை துவங்கி வைத்தார், பள்ளி முதல்வர் முத்துராஜ் வரவேற்றார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக்… Read more: திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில் 31- வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
- ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயல் வேளாண் வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வுவலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர், பெருங்குடி, ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயலை வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அவளிவ நல்லூர், பெருங்குடி, அரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயலை நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய தொழில் நுட்ப வல்லுநர்கள் தனுஷ்கோடி, கருணாகரன் ஆகியவுடன் வலங்கைமான் வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்து, நெல் வயலில் பாசிகளில் வளர்ச்சியை… Read more: ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயல் வேளாண் வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வு
- ஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆர்த்தடான்டிக்ஸ் துறைஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்ஆர்த்தடான்டிக்ஸ் துறை, தேசிய ஆர்த்தடான்டிக்வாரக் கொண்டாட்டமான “ஆர்த்தோடோன்டிக் ஒடிஸி”யில் பங்கேற்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், இதன் மூலம் ரூ.9 லட்சத்துக்கும் குறைவானவிலையில் அகற்றக்கூடிய ஆர்த்தடான்டிக் உபகரணங்களை இலவசமாக வழங்குவதன் மூலம்ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளோம். இந்தச் செயலை இந்தியாவின் உலக சாதனை பவுண்டேஷன் அங்கீகரித்துள்ளது.விஜயஸ்ரீ, டாக்டர் கே.வி.குப்புசாமிஅவர்களின் ஆசியுடன் இந்த சாதனை,சிறந்த ஆர்த்தடான்டிக் சிகிச்சையை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பைப் பிரதிபலிப்பதுமட்டுமல்லாமல், எங்கள் நோயாளிகளுக்கு நம்பிக்கையான,அழகான புன்னகையை உருவாக்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.… Read more: ஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆர்த்தடான்டிக்ஸ் துறை
- தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சிதெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி மற்றும் மாநாடு ரெஃப்கோல்டு இந்தியா 2023,2023 அக்டோபர் 12 முதல் 14 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இது ISHRAE (தி இந்தியன் சொசைட்டி ஆஃப் ஹீட்டிங் ரிப்ஃரிகேட்டிங் அண்ட் ஏர் கண்டிசனிங் இன்ஜினியர்ஸ்) மற்றும் இன்ஃபார்மா மார்கெட்ஸ் இன் இந்தியா வின் ஒரு முன்முயற்சி ஆகும். குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி உபகரணங்களுக்கான தென்பகுதி சந்தைகளின் தேவைகளை ஈடேற்றும் வகையில் நடைபெறும் இக்கண்காட்சி,… Read more: தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி
- சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சிஎஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி. மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் தங்கள் படைப்புகளுடன் பங்கேற்பு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி துவங்கியது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் ராஜ்கமல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மாவட்ட… Read more: சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி
- உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் விண்வெளி அறிவியல் கண்காட்சிஉலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் கண்டு ரசித்தனர்… ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல் 10 ந்தேதி வரை உலகளவில் உலக விண்வெளி தினம் கொண்டாடப்படுகிறது… இந்நிலையில் உலக விண்வெளி வார விழாவை முன்னிட்டு சதீஷ் தவான் விண்வெளி மையம், இஸ்ரோ,மற்றும் கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரி ஆகியோர் இணைந்து விண்வெளி கண்காட்சி மற்றும் போட்டிகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. மூன்று நாட்கள்… Read more: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் விண்வெளி அறிவியல் கண்காட்சி
- அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புஅச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் மார்வார்அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த மாணவ மாணவியர் சந்தித்துக் கொண்டனர். அப்போது முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பள்ளிக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். மேலும் மாணவ மாணவியர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு தங்களின் குழந்தைகளை நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அவரவருக்குரிய… Read more: அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம்வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம் செய்தியாளர் ஜி.பி.மார்க்ஸ். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம் இராட்டிணமங்கலம் கிராமத்தில் விஐடி வேளாண்துறை மாணவர்கள் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து ” நெற்பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை “ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் முக்கிய பயிற்சியாளராக விஐடி உழவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பிரதீஷ் குமார் அவர்கள்… Read more: வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்- டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம்
- மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறைமனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை. மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட அகத்தியை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் என கால்நடை துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.அகத்தி இலைக்கு உள்ள மிக முக்கியமான ஒரு பண்பு உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்கும் வல்லமை கொண்டது. இதனால் வாரம் ஒரு முறை மட்டும் கால்நடைகளுக்கு தீவனத்தில் அகத்திக் கீரையை கலந்து கொடுக்க வேண்டும். நாமும் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ எடுத்துக் கொள்வது நமது… Read more: மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை
- கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம்கோவை கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட் 2023” எனும் தலைப்பில் இந்தியாவில் இருதய மாற்று அறுவை சிகிச்சையின் தற்போதைய நவீன நுட்பமான வசதிகள், விளைவுகளை பாதிக்கும் காரணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு கண்காணிப்பு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இருதயம், நுரையீரல் சார்ந்த நெஞ்சக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான பயிற்சி வகுப்பும் நடைபெற்றது. இதில் இந்தியாவில் உள்ள… Read more: கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம்
- திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சிவிழுப்புரம்:- திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவாசியகள் மற்றும் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஸ்வ யுவக் கேந்திரா மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ரீட்ஸ் நிறுவனம் இணைந்து விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சியை திண்டிவனம் சார் ஆட்சியர் கட்டா ரவி தேஜா துவக்கி வைத்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும்… Read more: திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி
- கோவையில் ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழாமின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர்:MSME துறை அரசு செயலாளர் வி. அருண் ராய் பேச்சு கோவை, செப் 8- மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் இருக்கும் சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர் என MSME துறை அரசுச் செயலாளர் வி. அருண் ராய் கூறினார்.ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழா கோவையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று,… Read more: கோவையில் ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழா
- கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சிகோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறவுள்ளதாக கோவை உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் இன்று அக்மா அமைப்பின் தென்னிந்திய செயளாளர் சரவணன் பேட்டி, கோவை உப்பிலிபாளையம் அடுத்த ஆடிஸ் வீதி பகுதியில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்ததில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய, ஆட்டோமோட்டிவ் ஆப்டர் மார்க்கேட் கண்காட்சியின், 2ம் பதிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்மா அமைப்பின், தென்னிந்திய செயளாளர் சரவணன், அகில இந்திய தலைவர் வீன்னி… Read more: கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
- மல்லிகை மலர் பயிர் மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம்தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அறிவிப்பு தென்காசி மாவட்ட தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அவரது செய்தி கூறிப்பில் கூறியுள்ளவாறு;- தென்காசி மாவட்டத்தில்சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மல்லிகை ஒரு சிறந்த மலர் பயிர் ஆனால் பூச்சி மொட்டு புழு தாக்குதல் மல்லிகை சாகுபடிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம் (மண்ணைப் பறித்தல், பூச்சிகள் தாக்கிய பூக்களை வாரத்திற்கு ஒரு முறையாவது சேகரித்து அழித்தல்,… Read more: மல்லிகை மலர் பயிர் மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம்
- ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்துவாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜி, கருங்காலகுடி சந்துரு, தேவகி அம்மா, மீனா, ப்ரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் சந்திரயான் 3 மாபெரும் வெற்றி பெற்றது பற்றி இந்தியாவிற்கே பெருமை என்று கூறி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாய் இருந்தார்கள். அனைவருக்கும் தேசிய கொடி வழங்கப்பட்டது.
- சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டுசந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். சந்திராயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம்… Read more: சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
- கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம்கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம், 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றியடைந்ததை, நேரு விமானவியல் கல்லூரியின் மாணவ மாணவியர்கள் நேரு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்கில் மிகப்பெரிய திரையில் இஸ்ரோ சார்பில் ஒளிபரப்பப்பட்ட நேரடி காட்சிகளை கண்டு மகிழ்ந்தனர். மாலை 5.00 மணிக்கு துவங்கிய இந்த ஒளிபரப்பு கடைசி 15 நிமிடங்கள் திக்திக் அனுபவத்தை மாணவ… Read more: கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம்
- வேலையின் எதிர்காலம் புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடுகோவை “வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு” கோவையில் நடைபெற்றது. ஸ்பேஸ்பேசிக், EdTech SaaS யின் புகழ்பெற்றநிறுவனமாகும். இது பல்கலைக்கழகம் மற்றும் மாணவர் குடியிருப்பு சமூகங்களை தானியங்குபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. G20 இந்தியாவின் இளைஞர் பிரிவான Y20 உடன் இணைந்து “வேலையின் எதிர்காலம் புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டு திறன்கள் தலைப்பில் உரையாடல் நிகழ்ச்சி ரத்தினம் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷனில் நடைபெற்றது. இது நாடு முழுவதும் உள்ள “a”… Read more: வேலையின் எதிர்காலம் புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு
- கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டெபன்ஸ் கான்கிலேவ் 2023 எனும் சிறப்பு கருத்தரங்கம்கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (“defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் ஃபார் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் அகாடமி என்ற தலைப்பு முன்வைக்கப்பட்டு ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் துறைகளில் உள்ள தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் சார்ந்த பங்களிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏரோப்ளேன் இண்டஸ்ட்ரி டெவலப் மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு தலைவர்… Read more: கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டெபன்ஸ் கான்கிலேவ் 2023 எனும் சிறப்பு கருத்தரங்கம்
- சென்னை வைஷ்ணவா கல்லூரியில் ஆராய்ச்சி துறையில் சார்பாக நாளைய தலைவர்களை உருவாக்கும் விழா.கொளத்தூர் செய்தியாளர் அகமது அலி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி துறை மாணவர்கள் மோன்டிரிக்ஸ் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து பதவி பொறுப்புக்களை அளிக்கும் நிகழ்வு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய தேசிய ராணுவம் மற்றும் இந்திய சுதந்திர லீக் அமைப்பின் உறுப்பினர் சுதந்திர போராட்ட தியாகி வி. கே. செல்வம் மற்றும் திரைப்படக் கலைஞர் நடிகர் ஜெமினி பாலாஜியையும் கலந்து கொண்டு பொறுப்பாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கி… Read more: சென்னை வைஷ்ணவா கல்லூரியில் ஆராய்ச்சி துறையில் சார்பாக நாளைய தலைவர்களை உருவாக்கும் விழா.
- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரியான் – 3 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டுதேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது. இது 3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும். சந்திரயான்-3 விண்கலம் 14 ஆய்வு கருவிகள்,… Read more: தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரியான் – 3 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு
- தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான் ஆற்றுக்கும் இடையில் உள்ள நல்லூர், இனாம்கிளியூர், கோவிந்தகுடி, சந்திரசேகரபுரம், பூண்டி,ஆதிச்ச மங்கலம், விருப்பாட்சிபுரம்,வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புஞ்சையில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேங்காய் சில்லறை விற்பனை ரூ. 10லிருந்து குறைந்து 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேங்காய் பறிப்பதற்கான போதிய… Read more: தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்
- விவசாய துறையில் நெப்டியூன் மாடல் ட்ரோன் தொழில் நுட்பம்-விவசாயிகள் வரவேற்புகோவையில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் சிபி நிறுவனத்தின் நெப்டியூன் வகை நவீன நீர்ப்பாசன முறைகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது… கோவை கொடிசியா வளாகத்தில்,21 வது பதிப்பாக நடைபெறும் விவசாய கண்காட்சியில் கொரியா, இஸ்ரேல்,, ஜப்பான், ஸ்வீடன் , பிரான்ஸ்,ஆகிய நாடுகளில் இருந்தும் , மகாராஷ்டிரம்,குஜராத்,பஞ்சாப்,மத்தியப் பிரதேசம், ஆந்திரம்,சத்தீஸ்கர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நவீன தொழில் நுட்பம் சார்ந்த வேளாண் சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர்.. சுமார் 450 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்… Read more: விவசாய துறையில் நெப்டியூன் மாடல் ட்ரோன் தொழில் நுட்பம்-விவசாயிகள் வரவேற்பு
- கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ்கோவைக்கு மற்றொரு பிரமாண்டம் ! கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை அறிமுகம் செய்தனர்! இந்த 70 அடி அகல திரை கொண்ட அரங்கு தான் தமிழகத்தின் மிகப்பெரிய திரையரங்கு ஆகும் கியூப் சினிமா மற்றும் பிராட்வே சினிமாஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து கோவையில் உள்ள பிராட்வே மெகாப்ளக்ஸ் வளாகத்தில் தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை கோவையில்… Read more: கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ்
- பீம் எனும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது.இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது வருடங்களாக மோட்டார் உற்பத்தியில் ஈடுபட்டு வந்த பரதன் ஒசோடெக்ஸ் எனும் புதிய நிறுவனம் வாயிலாக பரதன் என்பவர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.விவசயம்,குறுந்தொழில்,உள்ளிட்ட அனைத்து வணிக துறைகளில் பாரங்கள் ஏற்றி செல்லும் வகையில் உருவாக்கி உள்ள எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி… Read more: பீம் எனும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்
- புதிய மொபைல் செயலி கோவையில் அறிமுகம்கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை கே. ஜி. மருத்துவமனையின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர். பக்தவச்சலம் பேசும் போது :- ஈஸ்ட் ஆர் வெஸ்ட் கோயம்புத்தூர் ஈஸ் பெஸ்ட். விஜய் யின் இந்த புராடக்ட் உலகம் முழுவதும் வைரலாக வேண்டும். பில்கேட்ஸ் போல இவர் புகழ் பெறுவார் என வாழ்த்துகிறேன் என்றார். மேலும் விழாவில் ஸ்ரீவாரி… Read more: புதிய மொபைல் செயலி கோவையில் அறிமுகம்
- கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கான ஆகாய நடைபாலம்வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. ஜூலை மாதத்துக்குள் பஸ் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் தென்மண்டலங்களில் இருந்து 65 ஆயிரம் பயணிகள் இந்த பஸ் நிலையத்துக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் வரை… Read more: கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கான ஆகாய நடைபாலம்
- கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சிகோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு துறையினர் ஸ்டால்களை அமைத்திருக்கின்றனர். இதனை வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் பார்வையிட்டனர். இதில் வீட்டுமனை வர்த்தகம் தொடர்பாக அனைத்து தகவல்களும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட findmyplots.com வெப்சைட் டிஸ்பிளே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அந்த இணையதளத்தின் இயக்குநர் ஆதித்யன் கூறுகையில், findmyplots.com என்ற இணையதளத்தில், எம்ப்ளாயி மேனேஜ்மெண்ட், லே அவுட்… Read more: கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி
- கோவையில் புதிய, ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் உற்பத்தியகத்தை எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் தொடங்கியுள்ளதுஎல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட சாயர் கம்ப்ரஸர்ஸ் குரூப் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமான எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள கல்லப்பாளையத்தில் ஒரு புதிய உற்பத்தியகத்தைத் திறந்துள்ளதன் மூலம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. ஏறக்குறைய 400 மில்லியன் ரூபாய் முதலீட்டில், 50,000 சதுர அடியில் ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் ஹைபிரஷர் கம்பிரஸர்கள், பிரஷர்-ரெட்யூசிங் ஸ்டேஷன்கள், மற்றும் போர்ட்டபிள் பிரீத்திங் ஏர் கம்ப்ரஸர்களை இண்டஸ்ட்ரியல், கமர்ஷியல் ஷிப்பிங், நேவல் மற்றும் ஆஃப்ஷோர் மார்கெட்டுகளுக்கு… Read more: கோவையில் புதிய, ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் உற்பத்தியகத்தை எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் தொடங்கியுள்ளது
- இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவிசிறுவயதிலேயே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு உடலிலேயே இருந்து கொண்டு இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவியை இதயங்கள் அறக்கட்டளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.. டைப் ஒன் எனும் முதல் வகை நீரழிவு நோய் காரணமாக குழந்தைகளுக்கு சிறுநீரகம் பாதிப்பு செயலிழப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருதி இதயங்கள் அறக்கட்டளையினர் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எட்டு மாதம் முதல் 18 வயது வரையிலான முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கு… Read more: இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவி
- திருச்செங்கோடு எஸ்.பி.கே .ஜெம்ஸ் பள்ளியில் ரோபோடிக்ஸ் நவீன ஆய்வகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்நாமக்கல் மே. 13 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுஎஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளியில்அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடத்தை இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்துமாணவ மாணவிகளின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சியை பார்வையிட்டு நிகழ்ச்சி யில் சிறப்புரையாற்றினார் அப்போது பேசியஇஸ்ரோ முன்னாள் தலைவர் டாகடர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:- எஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள நவீன கண்டுபிடிப்பு ஆய்வகத்தில்,ஏ.ஆர் / வி.ஆர் தொழில்நுட்பம்,ரோபோடிக்ஸ் லேப், ஸ்டெம் லேப் மற்றும் அடல் டிங்கரிங் லேப் மற்றும் 3டி… Read more: திருச்செங்கோடு எஸ்.பி.கே .ஜெம்ஸ் பள்ளியில் ரோபோடிக்ஸ் நவீன ஆய்வகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்
- அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சி-மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வுதிருவாருர் செய்தியாளர் ஜெ.சிவகுமார் மன்னார்குடி வட்டம் கோட்டூர் தட்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சி பிரிவுகள் குளிர்சாதன பழுதுநீக்கப்பிரிவு பிட்டர்இ வெல்டர்இ பேஷன் டிசைன் டெக்னாலஜி, டர்னர்இ வொயர்மேன் ஆகிய தொழிற்பிரிவுகளை பார்வையிட்டு மாணவ மாணவிகளுடன் உரையாடினார்அங்கு புதிதாக அமைக்கப்பட்டு வரும் பயிற்சி கூடத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்… Read more: அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சி-மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
- சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனைமதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த துருவா என்ற ஐந்து வயது சிறுவனுக்கு பிறந்த முதல் சிறுநீரக பிரச்சனை இருந்து வந்த நிலையில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் இரண்டு வயதுப் பிறகு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு சிறுநீரக மாற்று செய்யப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது துருவ என்ற ஐந்து வயது சிறுவன் என்பதால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… Read more: சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
- முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதுமுதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ரூ.20,000 கோடி முதலீட்டிலான பணிகள் தொடர்பாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனால் ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.… Read more: முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
- புற்றுநோய் சிகிச்சைக்கு புதுமையான மருத்துவ சிகிச்சை-தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகம்புற்றுநோய் மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அவ்வப்பொழுது அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய மருத்துவ உபகரணம் தென்னிந்திய அளவில் முதல் மருத்துவமனையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. .ஐஸ் க்யூர் நிறுவனத்தின் புரோசென்ஸ் கிரையோ அப்லேஷன் சிஸ்டம் எனும் இந்த புதிய மருத்துவ கருவி அறிமுக விழா கே.எம்.சி.எச்.மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நல்லா ஜி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மருத்துவமனையின்செயல் இயக்குனர்… Read more: புற்றுநோய் சிகிச்சைக்கு புதுமையான மருத்துவ சிகிச்சை-தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகம்
- மருத்துவப் பொருள்களை வணிகமயமாக்கத் திட்டம்கோயம்புத்தூர் தாய்மார்கள் ஆரோக்கியம் & சிறுநீரக மருத்துவப் பொருள்களை இந்தியாவில் வணிகமயமாக்க ஃபெர்ரிங்க் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் கொரோனா ரெமெடீஸ் நிறுவனம் கைக்கோர்த்துள்ளது. கொரோனா ரெமெடீஸ் நிறுவனமும், சுவிட்சர்லாந்து பன்னாட்டு உயிரி மருந்து குழுமமான ஃபெர்ரிங்க் ஃபார்மாசூடிகல்ஸ் நிறுவனமும் செய்து கொண்ட கூட்டாண்மை ஒப்பந்தம் அடிப்படையில், வித்தியாசமான மற்றும் புதுமையான தாய்மார்கள் ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக மருத்துவப் பொருள்களை வணிகமயமாக்கத் திட்டமிட்டுள்ளன.. இது குறித்து கொரோனா நிறுவனரும், செயல் இயக்குனருமான நீரவ் மேத்தா கூறுகையில் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்ட… Read more: மருத்துவப் பொருள்களை வணிகமயமாக்கத் திட்டம்
- திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் எலெக்ட்ரானிக் வாகனங்கள் கண்காட்சிவெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகள் மற்றும் ஏ ஆர் 4 டெக் பிரைவேட் லிமிடெட் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் இயற்கை விளைவுகளை விளக்கியும், அதற்கு மாற்றான எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மற்றும் அதனுடைய விழிப்புணர்வுகளை விளக்கும் விதமாக மாபெரும் எலக்ட்ரிக் வாகன கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பிஎஸ்என்ஏ கல்லூரி மாணவர்கள் பலவிதமான இரண்டு மற்றும்… Read more: திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் எலெக்ட்ரானிக் வாகனங்கள் கண்காட்சி
- சீர்காழி பகுதிகளில் கரும்பினை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கரும்பு விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்புஎஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அகலப்பார் முறையில் கரும்பு சாகுபடி செய்திருக்கும் விவசாயிகளுக்கு மேலாண்மை இயக்குனர் சதீஷ் அவர்களின் உத்திரவின்படி தலைமை கரும்பு அலுவலர் அவர்களின் ஆலோசனைப்படி கரும்பு வெட்டும் இயந்திரம் வர வைக்கப்பட்டு கரும்பானது அறுவடை செய்யப்படுகிறது . இந்த அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்வதன் மூலம் கரும்பினை அடியோடு வெட்டுவதால்… Read more: சீர்காழி பகுதிகளில் கரும்பினை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கரும்பு விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு
- குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் – டீம் ஸீ சக்திஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி படகு சவால் (MEBC) 2023க்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குமரகுரு வளாகத்தில் அணியான குமரகுருவை சேர்ந்த 10 மாணவர்களைக் கொண்ட குழு நாட்டிலேயே முதல் முறையாக ஹைட்ரஜன் கொண்டு இயங்கும் YALI 2.0 என்ற படகை வடிவமைத்துள்ளனர். இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு குமரகுரு கல்லூரியில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த பேராசிரியர் கிரண், MEBC ஆனது புகழ்பெற்ற Yacht Club De Monaco (YCM) ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது… Read more: குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் – டீம் ஸீ சக்தி
- ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச்,நெக் பேண்ட்,பவர் பேங்க் உள்ளிட்ட அக்சரீஸ்களை கோவையில் அறிமுகப்படுத்தியதுகுஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய கீ பேட் மொபைல் போன்களை விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் தனது விற்பனை சேவையை துவங்கி ஒரு வருடம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, ,ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய மொபைல் அக்சரீஸ் அறிமுக விழாவை கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடத்தியது. .இதில் ஜே மேக்ஸ் நிறுவனத்தின் துணை… Read more: ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச்,நெக் பேண்ட்,பவர் பேங்க் உள்ளிட்ட அக்சரீஸ்களை கோவையில் அறிமுகப்படுத்தியது
- இந்திய அளவிலான ஹீல் பாக்ஸ் (Healboxx) எனும் செயலியை உருவாக்கம்கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை ஆர்.எஸ் புரத்தில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரது இளைய மகன் மேத்யூ உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த போது, அங்கு ஏற்பட்ட ஏற்பட்ட போர் சூழல் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு இடையே நாடு திரும்பி உள்ளார். இந்தியா திரும்பிய அவர், உக்ரைனில் நாடு திரும்ப முடியாமல் இருந்த… Read more: இந்திய அளவிலான ஹீல் பாக்ஸ் (Healboxx) எனும் செயலியை உருவாக்கம்
- கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கம்யூட்டர் மையம்கன்சாலிடேடெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்னெடுப்புத் திட்டத்தில், கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் “கம்யூட்டர் மையம்” நிறுவியுள்ளது. இந்த அரசு பள்ளியின் 500 மாணவர்களுக்கு உதவும் வகையில் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கம்ப்யூட்டர்கள், தடையில்லா மின்சார சாதனம் மற்றும் கம்ப்யூட்டர் மையத்திற்கான அடிப்படை வசதிகள் டேபிள், சேர் என அனைத்தும் வழங்கப் பட்டுள்ளது. மாறிவரும் காலத்திற்கேற்ப மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கல்வி பயின்று,… Read more: கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கம்யூட்டர் மையம்
- அரியலூரில் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டுபா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளி கொண்டுவரும் வகையில் தமிழக அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான வானவில் மன்றம் அறிவியல் கண்காட்சி போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து மாநில அளவில் வெற்றி பெற்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் மாணவர்… Read more: அரியலூரில் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டு
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீச்சல் குளத்தில் கோவில் யானை பார்வதி உற்சாக குளியல்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.23.5 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை பார்வதி உற்சாக குளியல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ரூ.23.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் யானை உற்சாகமாக குளியல் போட்டது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தினமும் சுவாமி தரிசனத் திற்காக வந்து செல்லும் பக்தர்களுக்கு கோவில் யானை பார்வதி ஆசி வழங்குகிறது. இந்நிலையில், மீனாட்சியம்மன் கோவில்… Read more: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீச்சல் குளத்தில் கோவில் யானை பார்வதி உற்சாக குளியல்
- தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்-Kissflow நிறுவனர் திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்கள், “தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்” என்கிறார். சேலம் ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற விழாவில் சிறப்புரை! உலகளவில் சுமார் 1,00,000 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட DreamDaa, தனது கனவை நனவாக்கும் முயற்சியின் ஒரு மைல்கல்லாக சேலத்தில் உள்ள ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தங்களது நிறுவனத்தின் சேவையைத் துவங்கியுள்ளது. முதற்கட்டமாக 1,000 மாணவர்கள் ஒரு வருட காலத்தில்… Read more: தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்-
- திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு-4வது சர்வதேச கருத்தரங்கம்நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி துறையின் சார்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய 4வது சர்வதேச கருத்தரங்கம் இன்று நடைபெற்றது . இவ்விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார் மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர் . துணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரர் இணைச்செயலாளர் டாக்டர்… Read more: திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு-4வது சர்வதேச கருத்தரங்கம்
- ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் 75வது உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 3-நாள் இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் துவக்கம்உலக சுகாதார அமைப்பு (WHO) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் 75-வது ஆண்டு விழா வாக இருப்பதால் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த் கேர் & மாஸ்டர் ஹெல்த் செக் அப் மையம் சார்பில் 3-நாள் இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் தொடங்கப்பட்டது. இந்த முகாமை, ஏஜிஎஸ் ஹெல்த்… Read more: ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் 75வது உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 3-நாள் இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் துவக்கம்
- மாதந்தோறும் 1000 ரூபாய் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் “அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM)” திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சிகள் அளிக்கும் வகையில், 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறி தேர்வு என்ற புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால் அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாகப்… Read more: மாதந்தோறும் 1000 ரூபாய் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்
- குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு!தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு! காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த தென்னந்தோப்பில் வாளி பொறி பற்றிய செயல்விளக்கம் செய்தோம்.வாளி பொறி 1எக்டாருக்கு 5-6 என்ற எண்ணிக்கையில் பரிந்துரை செய்தோம். கோபி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ருகோக்ஷ் சுருள் வெள்ளை பூச்சி பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது. அப்பூச்சினை கட்டுப்படுத்த மஞ்சள் நிற அட்டையை பரிந்துரை செய்தோம்.1 ஏக்டாருக்கு 6-8 என்ற எண்ணிக்கையில் பரிந்துரை செய்தோம். இதனுடன் ஒட்டுனியையும் பரிந்துரை… Read more: குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு!
- இந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்
வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசுஇந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதுசத்தியமங்கலம் எஸ்ஏஇ இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும்டிசிஎஸ் கம்பெனிகள் இணைந்து பெங்களுரில் எலக்ட்ரிக் வாகனகண்டுபிடிப்புக்கான ரீவ் போட்டியை நடத்தியது. இதில் இந்தியாமுழுவதும் இருந்து வந்திருந்த கல்லூரிகள் மற்றும்பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டு பிடிப்பை சமர்ப்பித்தனர். இந்த போட்டில் பண்ணாரிஅம்மன் கல்லூரியைச் சேர்ந்த மனுபேக்சரிங் மற்றும்பேப்ரிக்கேசன் லேப்பைச் சேர்ந்த 25 மாணவர்கள் கலந்துகொண்டு டைனமிக் பேஸ் பிரிவில் வடிவமைக்கப்பட்ட எலக்ரிக்வாகனத்தை… Read more: இந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்<br>வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசு - தொழில் நேர்மை – வாடிக்கையாளருக்கு நண்பர்வாகன பேட்டரியில் ப்ரோ வாரன்டி – புதிய தகவல் உள்ளதை உள்ளபடி சொல்லி வியாபாரம் செய்யும் விற்பனையாளர் காரைக்குடி – நண்பர்களே சமீபத்தில் இரு சக்கர வாகனத்திற்கு பேட்டரி வாங்கி எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்திருந்தேன். ஒரு மெக்கானிக் கடையின் மூலமாக எனது வாகனத்திருக்கு பேட்டரி வாங்கினேன். நேர்மையான கடை உரிமையாளருக்கு வாழ்த்துகள் வாழ்த்துக்களுடன் எம் எஸ் லட்சுமணன், காரைக்குடி.
- எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னணு கழிவுகள்கோயமுத்தூர்பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி சார்பாக சமூகம் சார்ந்த பணிகளை மகிழ்வித்து மகிழ் எனும் நோக்கத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி யின் சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக மின்னனு கழிவுகளை சேகரித்து மறு சுழற்சி செய்வது தொடர்பான திட்ட துவக்க விழா கோவை கோ இண்டியா அரங்கில் நடைபெற்றது..அமைச்சரவை செயலாளர்கள் ராஜ் மோகன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324… Read more: எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னணு கழிவுகள்
- கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்துகர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டது 40 சதவீத கமிஷன் அரசின் விளைவு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. கர்நாடகாவில் பெங்களூரு நகரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரெயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாகவரா பகுதியில் காலை 11 மணி அளவில் மெட்ரோ ரெயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து… Read more: கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து
- பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கும்மி அடித்து உற்சாக கொண்டாட்டம். தமிழர் திருநாள் பொங்களை முன்னிட்டு பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தோரணங்கள் அமைத்து சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து வழிபாடு செய்தனர்,கொரோனா நோய் தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கும்மியடித்தும் கயிறு இழுக்கும் போட்டியில் ஈடுபட்டனர், மாணவிகள் கூறுகையில் கடந்த இரண்டு வருடங்களாக… Read more: பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.
- தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து வந்துள்ளனர்- முதல்வர் மு.க. ஸ்டாலின்உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது :- தமிழக அரசின் மீது நம்பிக்கை வைத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி. தொழில்துறையில் 13வது இடத்திலிருந்து முதலிடத்திற்கு வந்துள்ளோம். தொழில் தொடங்க உகந்த இடம் என்ற இடத்தில் தமிழகம் முன்னேறியுள்ளது. பெண்கள் தொடங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படுகிறது.… Read more: தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து வந்துள்ளனர்- முதல்வர் மு.க. ஸ்டாலின்
- மூன்றாம் கட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்
மயில்சாமி அண்ணாதுரை பேட்டிபொள்ளாச்சி அருகே உள்ளகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனரும்தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற துணை தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி ,முன்னாள் மாணவர் சங்க கல்வெட்டையும் திறந்து வைத்து, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் . பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளிக்கையில் ககன்யான் திட்டம் குறித்து கூறியதாவது ககன்யான் திட்டம் கொரோனாவிற்கு முன்பு மூன்றடுக்கு திட்டமாக செய்யப்பட்டது .அதன்… Read more: மூன்றாம் கட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்<br>மயில்சாமி அண்ணாதுரை பேட்டி - நெல்லை களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சி.சி.டி.வி. காமிராக்கள்ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது சொந்த நிதியில் இருந்து களக்காடு போலீஸ் நிலையத்திற்கு 6 சி.சி.டி.வி. காமிராக்களை, களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சனிடம் வழங்கினார்.இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமநாதன், அமலன் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, களக்காடு தெற்கு வட்டாரம், நகராட்சி, நாங்குநேரி மேற்கு… Read more: நெல்லை களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சி.சி.டி.வி. காமிராக்கள்ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்தியஅரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த நவ.26-ஆம் தேதி நிலவரப்படி 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் இந்த 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கடந்த அக்.1-ஆம் தேதி முதல் 5ஜி சேவையைத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.மற்றய நகரங்களில் விரைவில் 5ஜி சேவை வழங்கும்… Read more: இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்தியஅரசு அறிவித்துள்ளது.