விளையாட்டு

  • தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கிரிக்கெட் போட்டி
    திருவிடைமருதூரில் தேர்தல் பணி முடிந்து இன்று சொந்த ஊர் திரும்ப உள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துணை ராணுவத்தினருடன், தஞ்சை மாவட்ட காவல்துறையினர் இணைந்து கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் தலைமையிலான அணியும், திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் நிலையிலான அணியும் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டன. இதில் திருவிடைமருதூர் இன்ஸ்பெக்டர் அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறப்பாக விளையாடிய சோழபுரம் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துணை ராணுவத்தினருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
  • சென்னை அணியுடன் பலப்பரிட்சையில் மேற்கொள்ள சென்னை வந்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி
    கே எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற சென்னை அணிக்கும் லக்னோ அணிக்கும் இடையிலான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிவுடன் ஆன போட்டியிலும் பங்கேற்று மீண்டும் வெற்றி பெறும் முனைப்பில் சென்னை வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது கே எல் ராகுல் அவர்களை கண்டவுடன் ரசிகர்கள் ஆரவாரம் இட்டு வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி வாகனம் மூலம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.
  • ஆலந்தூரில் 41வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
    ஆலந்தூரில் உள்ள மான்போர்ட் பள்ளியில் தமிழ்நாடு மாநில கராத்தே டோ அசோசியேஷன் கேடட்கள், ஜூனியர்ஸ், 21 வயதுக்குட்பட்டோர் மற்றும் மூத்த தடகள வீரர்களுக்கான 41வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப்பை நடத்துகிறது, 2024 மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 30 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவியர், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். . பதக்கம் வென்றவர்கள் தேசிய சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப், தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் மற்றும் உலக கராத்தே சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தொடர்ந்து பங்கேற்கின்றனர். இந்தியாவில் கராத்தேவின் உச்சம் மற்றும் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். KIO ஆனது ஆசிய கராத்தே கூட்டமைப்பு (AKF) மற்றும் உலக கராத்தே கூட்டமைப்பு (WKF) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் WKF சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (IOC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவிலுள்ள கராத்தே விளையாட்டின் நலனுக்காக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உதவுமாறு மாண்புமிகு தமிழக… Read more: ஆலந்தூரில் 41வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
  • லக்னோவில் இருந்து சென்னை வந்த சிஎஸ்கே டோனியை கண்டவுடன் காதை கிழித்த சத்தம்
    நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் கடந்த 19ஆம் தேதி லக்னோ அணியுடன் மோதிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து அடுத்த போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 39 ஆவது போட்டியானது நடைபெற உள்ளது இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் மோத இருப்பதும் குறிப்பிடத்தக்கது இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ருத்ராச் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது சென்னை விமான நிலையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் வெளியே வரும்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர் தோனியை கண்டவுடன் ரசிகர்கள் சத்தத்தால் விமான நிலையமே அதிரத் தொடங்கியது சத்தம் அதிகரித்ததால் காதை கிழிக்கும் அளவில் சத்தமானது பெருக்கெடுத்தது இதனை அடுத்து தோனியை பாதுகாப்பாக அழைத்து வந்து… Read more: லக்னோவில் இருந்து சென்னை வந்த சிஎஸ்கே டோனியை கண்டவுடன் காதை கிழித்த சத்தம்
  • சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கால்பந்து போட்டி
    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம்தொழுப்பேடு ஊராட்சியில்சட்டமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழா முன்னிட்டுமாபெரும் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற BLUE TIGER’S FCTHOZUPEDU அணி வெற்றிபெற்றனர்.இதனை பாராட்டும் விதமாக தொழுப்பேடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்தினை வலைதளம் மற்றும் நேரில் சென்று பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
  • சேலத்தில் செல்வி ஈஸ்வரி மற்றும் ஜெனிபர் சாஃப்ட் பால் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
    சேலத்தில் கடந்த (13.04.24) & (14.04.24) ஆகிய இரு நாட்கள் நடைபெற்ற அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டியில் செல்வி ஈஸ்வரி மற்றும் ஜெனிபர் SBIOA matric & hr Sec School Trichy ஆகியோர் தமிழக சார்பில் தென் இந்திய அணியில் பங்கு பெற்று அகில இந்திய அளவிலான சாஃப்ட் பால் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு இந்திய சாஃப்ட் பால் கழகத் தலைவர் சேர்மன் தமிழக சார்பில் கழகத்தின் தலைவர் ஆகியோர் பரிசளித்து பாராட்டினர். சேலத்தில் சென் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களாக நடைபெற்று முடிந்தது இப்போட்டிக்கு கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு மண்டல அளவிலான அணிகள் அனைத்தும் பங்கு பெற்றன.
  • மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு
    கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட இருபத்தைந்து பதக்கங்கள் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.. கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் கராத்தே பயிற்சி மையத்தில் ஐந்து வயது முதல் கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர்கள் வரை தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது..இந்த மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவ,மாணவிகள் மாவட்ட, மாநில,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், சப்- ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகியோருக்கு பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.. கோவை,பொள்ளாச்சி,காரமடை,என பல்வேறு… Read more: மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு
  • சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா
    பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் தஞ்சாவூர் தஞ்சாவூரில் பள்ளி மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் சிலம்ப கலைகளை வெளிக்காட்டி, மாராயப் பட்டைகளை பெற்றனர் தஞ்சாவூர் வின்னர் மல்டி மியுரல் அகாடமி தற்காப்பு கலை பன்னாட்டு பயிற்சி பள்ளி மற்றும் ரெங்கநாயகி கல்வி மற்றும் கொண்டு அறக்கட்டளை, அருள்மொழி கலை இளையோர் மன்றம் நேரு யுவகேந்திரா இணைந்து நடத்தும் சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா தஞ்சை அன்னை சத்யா உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது, தஞ்சாவூர் சிலம்ப சங்க செயலாளர்ராஜேஷ்கண்ணா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சுப்ரீம் கிராண்ட் மாஸ்டர் அருணாச்சலம், ஸ்டார் லயன் கல்வி நிறுவன முதல்வர் மில்டன் ராஜ், ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் மாராயப் பட்டைகளை வழங்கினர், முன்னதாக இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வாள்வீச்சு,ஒற்றைவாள், இரட்டைவாள், சுருள்வீச்சு,மான்கொம்பு,சக்கர பானம், ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு,… Read more: சிலம்பம் அரங்கேற்றம் மற்றும் மாராயப் பட்டைகள் வழங்கும் விழா
  • கீழசின்ணனம்பட்டி ஊராட்சியில் செல்வராஜ் அம்பலம் கருப்பணன் அம்பலம் நினைவு கையுந்த போட்டி
    அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளகீழசின்ணனம்பட்டியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்செல்வராஜ் அம்பலம், மற்றும் ராஜேந்திரன் என்ற கருப்பண்ணன் அம்பலம், நினைவாக கையுந்த போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டியினை ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் சன்செல்வராஜ், தலைமை தாங்கினார் துணை தலைவர் தர்மராஜா, முன்னிலை வகித்தார். இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு அணியினர் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் முடிவில் கோபி பிரண்ட்ஸ் கொடைக்கானல் அணியினர் முதல் பரிசையும்.. பாலமேடு விக்கி நினைவுக் குழு இரண்டாவது பரிசையும். தட்டிச் சென்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், மாவட்ட பொதுச் செயலாளர் பெருமாள் , அலங்கை வடக்கு மண்டல தலைவர் தங்கதுரை, தெற்கு மண்டல தலைவர் இருளப்பன், தொழிலதிபர் எஸ்.டி.எம். செந்தில்குமார், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அம்மா மக்கள்… Read more: கீழசின்ணனம்பட்டி ஊராட்சியில் செல்வராஜ் அம்பலம் கருப்பணன் அம்பலம் நினைவு கையுந்த போட்டி
  • சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டி பாராட்டு விழா நிகழ்ச்சி
    பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில்.. மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் மாநில அளவிலான கலைத்திருவிழா, சிலம்பம், திறனாய்வுதேர்வு, உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு முஹம்மது நஜிப், அக்பர், நூர் முகம்மது, மில்டன்ராஜ் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி சிறபப்புரையாற்றினர். இதில்அய்யம்பேட்டை சுற்றியுள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களை சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் என பலர் கலந்து கொண்டனர் இதில் ஆட்டம் பாட்டங்களுடன் மாணவ மாணவிகள் நடத்திய பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சி காண்போரை கவரும் வண்ணம் இருந்தது.
  • மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு..
    மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.. மாநில அளவிலான பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி புதுக்கோட்டையில் நடைபெற்றது. மகளிர்க் காண 14 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்ட போட்டியில் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகள் பங்கேற்று விளையாடினர். இதில் மாநில அளவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தூயவளனார் பெண்கள் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதில் வெற்றி பெற்ற கால் பந்தாட்ட வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா இப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு கோப்பைகளையும் சான்றிதழ்களையும் , பரிசு பொருட்களையும் வழங்கி வாழ்த்தி பேசினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெபமாலை, உடற்கல்வி ஆசிரியர்… Read more: மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு..
  • யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரம் நடும் விழா
    யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் 151 வது வார மரம் நடும் விழா மதுரை யானைமலை ஒத்தக்கடை காவல் நிலையம் எதிரில் நடைபெற்றது. நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கல்வித்தாய் கொடிக்குளம் பள்ளியை தரம் உயர்த்த கோடிக்கணக்கான மதிப்பிலான நிலத்தினை வழங்கிய ஆயி என்ற பூரணம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். விழாவில் தங்க மகள் ஜனனி விருது பூரணம் அம்மா விற்கு வழங்கப்பட்டது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பசுமை ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், காவல்துறை நண்பர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள், பெற்றோர்கள், ஊர் பெரியவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
  • காவல்துறை மற்றும்  பொதுமக்கள் இணைந்து நல்லுறவு ஏற்படும் வகையில் விளையாட்டு போட்டிகள்
    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை மற்றும்  பொதுமக்கள் இணைந்துநல்லுறவு ஏற்படும் வகையில்இரண்டு நாள் விளையாட்டு போட்டிகள் நடந்தது. நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கிய ம் கல்லூரி மைதானத்தில்  கிரிக்கெட் போட்டியும், ஆலடிப்பட்டி மாணவர் பேரவை மைதானத்தில் வாலிபால் போட்டியும் ஆலங்குளம் காவல் நிலையம் கீழ்புறம் உள்ள மைதானத்தில் கபாடி போட்டியும் நடைபெற்றது. 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் மாவட்டம் முழுவதுமிருந்து 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடினார்கள் அதில் மடத்தூர் அணியினர் முதல் பரிசும், தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலக காவலர்கள் அணியினர் இரண்டாவது பரிசும், ஆலங்குளம் உட்கோட்டகாவலர்கள் அணியினர் 3 -வது பரிசும் பெற்றனர். இதில் வாலிபால் போட்டியில் 80 அணியினர் கலந்து கொண்டு விளையாடினார்கள் அதில் கன்னியாகுமரி அணியினர் முதல் பரிசும், தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலக காவலர்கள் அணியினர் 2-வது பரிசும், ஆலடிப்பட்டி அணியினர் 3 -வது பரிசும், ஆலங்குளம் உட்கோட்ட காவலர்கள்… Read more: காவல்துறை மற்றும்  பொதுமக்கள் இணைந்து நல்லுறவு ஏற்படும் வகையில் விளையாட்டு போட்டிகள்
  • ஆலங்குளம் காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய நல்லுணர்வு விளையாட்டு போட்டி
    தென்காசி மாவட்டம் நல்லூர் சி.எஸ்.ஐ ஜெயராஜ் அன்ன பாக்கியம் கல்லூரியில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய நல்லுணர்வு விளையாட்டு போட்டிகளில், கிரிக்கெட் இறுதிச் சுற்று போட்டி நடைபெற்றது. காவல் துறை சார்ந்த கிரிக்கெட் அணியினரும், மடத்தூர் கிரிக்கெட் கிளப் அணியினரும் பங்கேற்றனர். நல்லூர் சேகரத் தலைவரும், மேற்கு சபை மன்ற தலைவர் ஆன அருட்திரு. அறிவர். பிரே எஸ் ஜேம்ஸ் துவக்க ஜெபம் செய்தார் ஆலங்குளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்னபாஸ் தலைமை வகித்தார். நல்லூர் கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஜேசு ஜெகன் மற்றும் ஆலங்குளம் கூடுதல் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் முனைவர். வில்சன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் கூடுதல் செயலாளரும், தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆன ஆர் கே காளிதாஸ் கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்.… Read more: ஆலங்குளம் காவல் துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து நடத்திய நல்லுணர்வு விளையாட்டு போட்டி
  • வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
    டென்னி காய்ட் போட்டியில் வெற்றி பெற்ற வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு. பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாகை- புதுச்சேரி மண்டல அளவிலான பெண்களுக்கான டென்னி காய்ட் போட்டி ஆரிபா பாலிடெக்னிக் கல்லூரி ஈசணூரில் வைத்து நடைபெற்றது. இப் போட்டியில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி அணியினர் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி இரண்டாம் பரிசை தட்டி சென்றனர். இதே போல பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையே நாகை- புதுச்சேரி மண்டல அளவிலான பெண்களுக்கான வாலிபால் போட்டி விழுப்புரம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இப் போட்டியில் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பலவகை தொழில்நுட்ப கல்லூரி அணியினர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி முதல் பரிசை தட்டிச் சென்றனர். அவர்களை கல்லூரியின் முதல்வர் ஜான் லூயிஸ், முதல்வரின் நேர்முக உதவியாளர் வேல்முருகன், துறை தலைவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞானராஜ் ஆகியோர் வாழ்த்து… Read more: வலங்கைமான் தொழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டு
  • கேலோ இந்தியா விளையாட்டு போட்டி- வெற்றியாளர்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் பாராட்டு
    தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு இடங்களில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் சென்னையில் கேலோ இந்தியா இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் (50 – 3 பொசிசன் ரீபிள் ஈவென்ட்) போட்டியில் மெல்வினா ஏஞ்சலின் வெள்ளிப்பதக்கமும், ஹித்தேஸ் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். மேலும், தடகளத்தில் பமிலா வர்ஷினி வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர்கள் மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்தனர். அப்போது வெற்றி பெற்றவர்களை ஆட்சியர் சங்கீதா பாராட்டினார். மதுரை மண்டல முதுநிலை மேலாளர் செந்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
  • தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டி- பதக்கம் வென்ற மதுரை வீரர்களுக்கு பாராட்டு விழா
    தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மதுரை வீரர்களுக்கு பாராட்டு விழா. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மூலமாக டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா இந்தியா பாரா கேம்ஸ் மற்றும் கோவாவில் நடைபெற்ற 22 வது தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று தமிழ்நாட்டுக்கும் மதுரைக்கும் பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்கள் மனோஜ் F41 பிரிவில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்றார். பிரசாந்த் F35 பிரிவில் குண்டு எறிதலில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலம் பதக்கம் பெற்றார். சந்தோஷ் குமார் F44 பிரிவில் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். கணேசன் f41 பிரிவில் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும், முனிசாமி F53 பிரிவில் குண்டு எறிதலில் வெண்கல பதக்கமும்,பெற்று சாதனை புரிந்த வீரர்களுக்கும் பயிற்சி கொடுத்த மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித்… Read more: தேசிய பாரா தடகள சேம்பியன்ஷிப் போட்டி- பதக்கம் வென்ற மதுரை வீரர்களுக்கு பாராட்டு விழா
  • பாபநாசத்தில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி
    பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் மாநில அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்க போட்டி.. 30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர் பங்கேற்பு. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் தனியார் திருமண மண்டபத்தில் சிவஞான முதலியார் நினைவாக பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாநில அளவிலான சிறுவர்களுக்கான 11-ஆம் ஆண்டு சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் சென்னை, கோயமுத்தூர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட 30-மாவட்டங்களில் இருந்து 300-சிறுவர், சிறுமியர்கள் சதுரங்க போட்டியில் பங்கேற்றனர். 9,11,13,17 வயது அடிப்படையில் நடைபெறும் சதுரங்க போட்டியில் வெற்றி பெறும் முதல், இரண்டு மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் நபர்களுக்கு சான்றிதழ்கள் கேடயங்களும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
  • பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா
    பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் 53 வது விளையாட்டு போட்டியின் ஆண்டு விழா… தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின் 53 வது விளையாட்டு ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் சேசுராணி மற்றும் கல்லூரி செயலர் அருட்சகோதரி முனைவர் குயின்ஸிலி ஜெயந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக மதுரை ஜேசி குழுமத்தின் செயல் இயக்குனர் ரிஷ்வந்த் கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றினார். முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கீதா அந்துவானேத் வரவேற்புரையாற்றினார்.கோ-கோ, கபடி, ஓட்டப்பந்தயம், டேபிள் டென்னிஸ், வாலிபால், செஸ் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளர் பாராட்டி பரிசுகள் வழங்கினார். கல்லூரி அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த கேடயத்தை வணிகவியல் துறை மாணவிகள் பெற்றனர். சுழற்ச்சி கேடயத்தை வணிகவியல் (CA) மாணவிகள் பெற்றனர். கல்லூரி விளையாட்டு… Read more: பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியில் ஆண்டு விழா
  • மாநில அளவில் ஒற்றை சிலம்பம் போட்டி- பதக்கம் பெற்ற அரசு மேல்நிலை பள்ளி குழந்தைகளுக்கு ஆலங்குளத்தில் திவ்யா மணிகண்டன் தலைமையில் உற்சாக வரவேற்பு
    மாநில அளவில் ஒற்றை சிலம்பம் போட்டி இராணிபேட்டை மாவட்டத்தில் நடைப்பெற்றதுஇப்போட்டியில் பதினான்கு வயதிற்குட்பட்டோர் பிரிவில் தென்காசி மாவட்ட அளவில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவன் கிசோர்குமார். முதல்பரிசு பெற்று தங்கபதக்கம் பெற்றார் மேலும் அதே பள்ளியில் எழும்வகுப்பு பயிலும் மாணவி பாக்கியவதி 2-வது பரிசு பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார். இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வருகை புரிந்தனர் இவர்கள் இருவருக்கும் ஆலங்குளம் ஒன்றியம் சார்பில் அங்குள்ள காமராஜர் சிலை அருகே ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் தலைமை யில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்ப்பட்டது. நிகழ்வில் தொழில் அதிபர் மணிகண்டன், சிறப்பு நிலைப் பேருராட்சி தலைவர் சுதா மோகன்லால்,அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் பத்தக்கம் வென்ற குழந்தைகளின் பெற்றோர்கள், மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
  • பொங்கல் விளையாட்டுப் போட்டி-ஆலங்குளம் ஒன்றிய தலைவர் எம் திவ்யா மணிகண்டன் பரிசுகளை வழங்கி பாரட்டினார்
    தென்காசி;- தமிழர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரணபுரம், புதுப்பட்டி, ஆ.மருதப்பபுரம், சிவகாமியாபுரம், காசியாபுரம், ஆலங்குளம், நல்லூர், ஊத்துமலை, காவலாகுறிச்சி ஆகிய கிராமங்களில் நடைப்பெற்ற பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் ஆலங்குளம் ஒன்றிய தலைவர் எம் திவ்யா மணிகண்டன் கலந்து கொண்டு, போட்டிகளை தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கி பாரட்டினார். அதனையெடுத்து சிறப்புறை வழங்கினார் அவர் பேசியதாவது;-தமிழர் திருநாளாம் பொங்கல் ஆர்வமாக பண்டிகை உங்களுடன் கலந்து கொண்டு போட்டிகளை கண்டு களிக்க வந்துள்ளேன்.பெரும்பாலும் பொங்கல் தினத்தில் கிராமக்களிடையே சமூக நல்லுணர்வு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்து வதில் இம்மாதிரியான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது முக்கியபங்கு வகிக்கின்றனபொங்கல் பண்டிகையை யொட்டி நடத்தப்படும் விளையாட்டு பெரும்பாலான ஊர்களில் இன்றைய தினத்தில் தான் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி நடைப் பெறுகின்றன ஆண்களுக்கான வீர விளையாட்டுகள் பெண்களுக்கான சில பிரத்யேக போட்டிகள் நடைப்பெறுவது கான முடிகிறது.கிராமப் பகுதிகளிலும் விளையாட்டில் ஆர்வமாகஇருக்கும் நபர்கள் இந்த விளையாட்டு… Read more: பொங்கல் விளையாட்டுப் போட்டி-ஆலங்குளம் ஒன்றிய தலைவர் எம் திவ்யா மணிகண்டன் பரிசுகளை வழங்கி பாரட்டினார்
  • காவலாக்குறிச்சியில்பொங்கல் விளையாட்டு விழா
    தேவேந்திர பேனாக்கள் நிறுவனர் பாலசுந்தரம். பங்கேற்பு;- தென்காசி மாவட்டத்தில் , ஆலங்குளம் அருகே காவலாக்குறிச்சி கிராமத்தில் பொங்கல் திருநாள் விழா மற்றும் ஏர் உழவர் திருநாள் நாடெங்கும் சிறப்பாக நடந்து வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே காவலாக்குறிச்சி கிராமத்தில் ஊர் நாட்டாமைகள் தலைமையில் பொங்கல் விழா நடைப்பெற்றது இவ் விழாவில் தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் டி.சி.பாலசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கியும் இனிப்புகளை வழங்கி எழுச்சி உரையாற்றினார். இவ்விழாவில் நாட்டாமைகள், ஊர் பொதுமக்கள்,மற்றும் தேவேந்திர பேனாக்கள் இயக்கத்தை சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் சாம்பை பாஸ்கர், கடையம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கரநாராயணன்,தென்காசி ஒன்றிய தலைவர் திருக்குமரன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் மணிகன்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  • திருவலஞ்சுழி பொங்கல் வீர விளையாட்டு விழா
    பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன். பொங்கல் வீர விளையாட்டு விழா மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் தொடங்கி வைத்தார் … தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கீழத்தெருவில் தை திருநாளாம் தமிழர் திருநாளை முன்னிட்டு ஸ்ரீ சியாமளாதேவி இளைஞர் நற்பணி மன்றம் நடத்தும் 50 ம் ஆண்டு பொங்கல் வீர விளையாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும் குடந்தை ஒன்றிய மேற்கு திமுக செயலாளருமான எஸ்.கே. முத்துச்செல்வன் தலைமை வகித்து ஒலிம்பிக் ஜோதியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் . விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முல்லைவளவன், கும்பகோணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சுவாமிமலை போலிஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், திருவலஞ்சுழி ஊராட்சி மன்ற தலைவர் திவ்யா காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பு அறிவழகன் , ஊராட்சி மன்ற உறுப்பினர் தமிழரசன் , மன்றத் தலைவர் ரூபன்ராஜ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு… Read more: திருவலஞ்சுழி பொங்கல் வீர விளையாட்டு விழா
  • மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி
    அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள 66,மேட்டுப்பட்டி கிராமத்தில் தை திருநாளை முன்னிட்டு சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாபெரும் மூவர் கைப்பந்து போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டியை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ் அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்து போட்டியில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேட்டுப்பட்டி ரூபன்&கோ மோகன் சார்பில் முதல் பரிசு ரூபாய் 6,001 வழங்கப்பட்டது மேட்டுப்பட்டி திமுக கிளை செயலாளர் விஜயன் சார்பில் இரண்டாவது பரிசாக 5,001 வழங்கப்பட்டது. ஊராட்சி செயலர் தெய்வேந்திரன் சார்பில் 4,001 மூன்றாவது பரிசும் மேட்டுப்பட்டி ஊராட்சி மன்ற துணை தலைவர் கண்ணன் சார்பில் 3,001 நான்காவது பரிசும் வழங்கப்பட்டது மற்றும் மாணிக்கம்பட்டி ரத்னாஸ் சார்பில் கோப்பைகளும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை 66,மேட்டுப்பட்டி சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகாடமி… Read more: மேட்டுப்பட்டி கிராமத்தில் சந்திரபாண்டி ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மூவர் கைப்பந்து போட்டி
  • ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்- அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு
    ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வரும் 17ஆம் தேதியும் பாலமேட்டில் வரும் 16ஆம் தேதியும் அரசு வழிகாட்டுதலின் பேரில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடங்களில் நடைபெறும் கேலரி பணி வாடிவாசல் வர்ணம் பூசும் பணி பார்வையாளர்கள் அமருமிடம் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் சிறப்பு பார்வையாளர்கள் அமருமிடம் ஜல்லிக்கட்டு காளைகள் நிறுத்துமிடம் ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறி செல்லும் இடம் காளையை அடக்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் இடம் ஆகியவற்றை அமைச்சர் மூர்த்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தொடர்ந்து அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார். முன்னதாக தமிழக அரசு சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவருடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத், சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம், வாடிப்பட்டி… Read more: ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள்- அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு
  • கேலோ இந்தியா – 2023 விழிப்புணர்வு போட்டி
    தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுத்தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் .தி.வேல்முருகன் பங்கேற்பு நாமக்கல் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நாட்டிலுள்ள இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை வளர்பதற்கும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கும் மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் 2023-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு 2023-ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் 19.01.2024 முதல் 31.012024 வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளின் செய்தியையும் உணர்வையும் பரப்பிட… Read more: கேலோ இந்தியா – 2023 விழிப்புணர்வு போட்டி
  • கோவையில் மாநில அளவிலான வாள் வீச்சு சண்டை போட்டி
    கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு சண்டை போட்டியில், கலந்து கொண்ட வீராங்கனைகள் வாளை அசத்தலாக சுழற்றி விளையாடினர்.. தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் சார்பில், மாநில அளவிலான வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி,கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள கதிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.. அசாமில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தேர்வு போட்டிகளாக நடைபெற்ற இதில் கோவை, மதுரை,கன்னியாகுமரி,திருச்சி,என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இரு பாலருக்குமான இப்போட்டியில்,சீனியர் பிரிவில், , பாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ் போட்டிகள் நடைபெற்றன.இரண்டு நாட்கள் நடைபெற்ற இதில் முன்னதாக பெண்களுக்கான போட்டியில் . வாளை அசத்தலாக சுழற்றி சண்டையிட்டனர்.. முன்னதாக போட்டிகளை கல்லூரியின் தலைவர் கதிர்,செயலாளர் லாவண்யா கதிர்,முதல்வர் கற்பகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வாள் வீச்சு… Read more: கோவையில் மாநில அளவிலான வாள் வீச்சு சண்டை போட்டி
  • கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி சார்பாக கலப்பு தற்காப்பு கலை போட்டிகள்
    கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கலப்பு தற்காப்பு கலை போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.. கோவை குணியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியில் பாக்சிங்,ஜூடோ,கராத்தே,சிலம்பம் என பல்வேறு கலப்பு தற்காப்பு கலைகளை அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை கொண்டு மாணவ,மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்நிலையில்,மாநில அளவில் ஓபன் கலப்பு தற்காப்பு கலைகளுக்கான போட்டி கோவை நேரு தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது..முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் பிரேம் எம்.எம்.ஏ.பயிற்சி மையத்தின் நிறுவனர் பிரேம் மற்றும் செயலாளர் ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்கினர்.. சிறப்பு விருந்தினராக நேரு தொழில்நுட்ப கல்லூரியின் தலைமை செயல் அதிகாரியும்,செயலாளரும் ஆன கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,பிரேம் அகாடமியின் பிராங்க்ளின் பென்னி,கல்லூரியின் முதல்வர் சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் கலப்பு தற்காப்பு கலைகளாக கராத்தே,பாக்சிங்,ஜூடோ,மொயாத்தாய்,சிலம்பம்… Read more: கோவை பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி சார்பாக கலப்பு தற்காப்பு கலை போட்டிகள்
  • சிவகங்கையில் மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள்-காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி முதலிடம்
    22 அணிகள் பங்கேற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டி காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையுடன் ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பரிசை தட்டிச் சென்றது சிவகங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மூன்று தினங்கள் நடைபெற்றது. சிவகங்கை சேர்ந்த மாநில ஹாக்கி வீரர் ராஜேஷ்வரன் நினைவாக சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் ஹாக்கி கிளப் இந்த போட்டியினை சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது இந்த ஹாக்கி போட்டியில் தமிழக முழுவதும் இருந்து தலைசிறந்த 22 அணிகள் பங்கேற்கின்றன இதில் சென்னை, விழுப்புரம், இராஜபாளையம், கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, ஊட்டி, பாண்டிச்சேரி, காரைக்குடி, தர்மபுரி, மதுரை, புதுக்கோட்டை, ஆற்காடு, கோவில்பட்டி, போன்ற ஊர்களில் இருந்து அணிகள் பங்கேற்று விளையாடியது. இந்த போட்டிகள் நாக்அவுட் முறையில் நடைபெற்றது வெற்றி பெற்ற அணிகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும், ராஜேஸ்வரன்… Read more: சிவகங்கையில் மாநில அளவிலான ஆண்கள் ஹாக்கி போட்டிகள்-காரைக்குடி தியான் ஸ்கூல் ஆஃப் ஹாக்கி முதலிடம்
  • புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு
    புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான நட்பால் போட்டியில் கலந்து கொள்ள உள்ள நிலையில் அவர்களை வழி அனுப்பும் விழா ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. புதுடெல்லியில் இந்திய பள்ளிக்கல்வி குழுமம் நடத்தும் 67 வது தேசிய அளவிலான நெட்பால் போட்டியானது 03-01-2024 முதல் 10-01-2024 வரை நடைபெறுகிறது இதில் தமிழக அணி சார்பில் பங்கேற்கும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பரணீஸ்வரன், கிருத்திகா, கனிஷ்கா, கோபிசந்த், சின்னவளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரித்தீஷ், தளவாய் டிஎஸ்என் பள்ளி மாணவர்கள் சந்திப், முத்துக்குமரன் ஆகியோர் தமிழக அணிக்காக விளையாட உள்ளனர் இதில் தமிழக அணி பயிற்சியாளர் ஜெயங்கொண்டம் கார்த்திக், ராஜன் ஆகியோரை சின்னவளையம்… Read more: புதுடெல்லியில் தேசிய அளவிலான நெட்பால் போட்டி – மாணவர்களை வழியனுப்பும் சிறப்பு நிகழ்வு
  • தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டி
    தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை மாவட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கம்,வெள்ளி,வெண்கலம் பதக்கங்கள் வென்று சாதனை.. கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு கோவை மாவட்ட சிலம்பம் கமிட்டி சார்பாக பாராட்டு விழா. தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி சார்பாக 5 வது மாநில அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் தஞ்சையில் நடைபெற்றது. இதில்,கயகோவை,,மதுரை,திருச்சி,தஞ்சை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.மாநில அளவில் நடைபெற்ற இதில் கோவையில் இருந்து 5 வயது முதல் 21 வயது வரையிலான ,52 மாணவ,மாணவிகள் போட்டிகளில் பங்கு பெற்றனர். சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன… தொடுமுறை,ஒற்றை மற்றும் இரட்டை கம்பு என அனைத்து பிரிவிகளிலும் கோவையில் இருந்து சென்ற 52 மாணவ,மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். தங்கம்,வெள்ளி,வெண்கலம் என பதக்கங்களை குவித்து… Read more: தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டி
  • ஸ்கை அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் 14-வது மாநில போட்டி
    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்கை அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் 14 வது மாநில போட்டியில் முதலிடம் பிடித்த ஈரோடு மாவட்டம் 70 தங்கமும் பதக்கமும், 4 வெள்ளிப் பதக்கமும் வென்றது. ஸ்கை அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் 14 -வது மாநில போட்டி அளவில் 8 வயதுக்குள் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தங்கம் வெள்ளி ஆகிய பதக்கத்துக்கான ஸ்கை போட்டி கும்பகோணத்தில் 2 நாள்கள் நடைபெற்றன. இதில் ‘சென்னை, திருவள்ளுவர் செங்கல்பட்டு ,ஈரோடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 250 க்கு மேற்பட்ட மாணவ மாணவியர்கள்பங்கேற்றனர். நாராயண நிதி, நிறுவனர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் துவக்கி வைத்து37 ஆவது தேசியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் ,நினைவு பரிசை வழங்கி கௌரவப்படுத்தினார் சிறப்பு அழைப்பாளராக சோழராஜன், வழக்கறிஞர் திலீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து… Read more: ஸ்கை அசோசியேசன் ஆப் தமிழ்நாடு சார்பில் 14-வது மாநில போட்டி
  • சாதனை சிறுமி- பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை வாழ்த்து
    தலைநகர் டில்லியில் நடைபெற்ற உலக யோகா போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய சிறுமி சமந்தாவிற்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.. விமான நிலையத்தில் சாதனை சிறுமியை சந்தித்த பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை வாழ்த்து.. கோவை மாவட்டம், பொள்ளாச்சி,ஆனைமலை பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி சமந்தா காமாட்சி.அதே பகுதியில் உள்ள அன்னை மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் சமந்தா சிறு வயது முதலே யோகாவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். இந்நிலையில் , டில்லி காசியாபாத் நகரில் அண்மையில் யு,ஒய்,எஸ்.எஃப்.வேர்ல்டு கப் யோகா எனும் யோகா போட்டிகள் நடைபெற்றன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.. ஜூனியர் பிரிவு தனி பிரிவில் கலந்து கொண்ட சமந்தா காமாட்சி மூன்றாம் இடம் பிடித்து,வெண்கல பதக்கம் வென்றார்.இந்நிலையில்,கோவை விமான நிலையம் திரும்பிய சிறுமிக்கு, பள்ளியின் தாளாளர் முத்துலட்சுமி குப்புசாமி,மற்றும்ஆசிரிய,ஆசிரியைகள்,மற்றும்,அவரது பயிற்சியாளரும் ஃபிட் ஃபிரம் ஹோம்,மற்றும்… Read more: சாதனை சிறுமி- பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை வாழ்த்து
  • காவலர்களுக்கான மாநில அளவிலான திறனாய்வுப் போட்டி
    காவலர்களுக்கான மாநில அளவிலான திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டு: சென்னை தமிழ்நாடு காவல்துறை அகடமியில்‌ தமிழ்நாடு காவல்துறை சார்பாக 2023-ம்‌ ஆண்டிற்கான காவல் துறையினருக்கான மாநில அளவிலான திறனாய்வுப் போட்டி (கடமை சந்திப்பு)1) நாய் நிகழ்வு2) நாசவேலை எதிர்ப்பு3) கணினி விழிப்புணர்வை சரிபார்க்கவும்4) வீடியோகிராபி5) விசாரணைக்கு அறிவியல் உதவிகள்ஆகிய தலைப்புகளின்‌ கீழ்‌ நடைபெற்றது.இப்போட்டியில் மதுரை மாநகரைச் சேர்ந்த காவல்‌ அதிகாரிகள்‌ மற்றும்‌ காவல்‌ ஆளினர்கள்‌ இரண்டு தங்கப் பதக்கங்களும், மூன்று வெள்ளி பதக்கங்களும், மூன்று வெண்கல பதக்கங்களும் மூன்று கேடயங்களும் வென்றுள்ளனர்‌. குறிப்பாக மதுரை மாநகர்‌ துப்பறியும்‌ நாய்‌ பாண்டியன் போதை மருந்து துப்பறியும்‌ பிரிவில்‌ தங்கம்‌ வென்று மாநில அளவில்‌ முதலிடத்தை பிடித்து சாதனை பெற்றுள்ளது. மாநில அளவில்‌ பதக்கங்கள்‌ பெற்ற அனைவரையும்‌ மதுரை மாநகர காவல்‌ ஆணையர்‌ லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
  • கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் பதக்கங்கள் வென்றனர்
    பதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவர்கள்;- தென்காசி ஒன்றியம் பண்பொழி பேரூராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் யோகா போட்டியில் பங்கு கொண்டு பதக்கங்கள் வென்றனர். தமிழ்நாடு விளையாட்டு மற்றும் யோக அமைப்பின் சார்பில் செங்கோட்டை ட்ரெஸ்ஸர் ஐலேண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்ற யோகா போட்டியில் பங்கு கொண்டு முதல் மூன்று பரிசுகளை பெற்றனர். முதல் பரிசாக நவீன் கார்த்திக், இரண்டாம் பரிசாக பவானி, கர்தீஷா, ஆகிய இருவரும் மூன்றாம் பரிசாக மாதேஷ் மற்றும் கிருபாலினி ஆகியோரும் பரிசுகளை பெற்றனர். யோகா அமைப்பின் சார்பில் கேடயமும் பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் குத்தாலிங்கம், உதவி ஆசிரியர் ராஜ்குமார், யோகா கலை பயிற்சி ஆசிரியை உமா மகேஸ்வரி, பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் மாலா, ஊர் நாட்டாண்மைகள் நடராஜன், கருப்பசாமி, தங்கதுரை, மற்றும் ஊர் பெரியவர்கள் கல்வியாளர் சீதாராமன் ஆகியோர் பாராட்டினார்கள்.
  • பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு
    கோவை பூட்டானில் நடைபெற்ற பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு பாஜக கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரி பாலன் தலைமையில் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பூட்டன் நாட்டில் உள்ள திப்புவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா த்ரோபால் போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.இந்தியா -பூட்டான் இடையேயான நடைபெற்ற பாரா த்ரோபால் போட்டியில் தமிழ்நாடு,உத்திர பிரதேசம், மகாராஷ்டிரா ஹரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்றனர். இதில் தமிழகம் சார்பில் கோவையை சேர்ந்த சுபாஷ்,மோகன் குமார் சதீஷ்குமார்,சுமதி ஆகிய நான்கு பேர் பாரா திரோபாலில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளனர். கோவை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு ரயில் நிலையத்தில் பாஜக கோவை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சபரிபாலன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வீரர்கள், இது போன்று வெளிநாடுகளில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா போட்டிகளில் பங்கேற்பதற்கான போக்குவரத்து… Read more: பாரா த்ரோபால் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு
  • கோயம்புத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் எம் ஆர் சி கல்லூரி இரண்டாமிடம்
    கோயம்புத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் எம் ஆர் சி கல்லூரி இரண்டாமிடம்-கல்லூரியின் தாளாளர் 15000 ரூபாய் பரிசை அறிவித்தார் பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் தத்தனூர் எம் ஆர் சி உடல் கல்வியில் கல்லூரி மாணவர்கள் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது, வெற்றியின் காரணமாக கல்லூரியின் தாளாளர் பதினைந்தாயிரம் ரொக்க பரிசை அறிவித்தார். கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான டென்னிஸ் போட்டியில் தத்தனூர் எம் ஆர் சி கல்லூரி இரண்டாம் இடம் பிடித்தது தமிழ்நாடு விளையாட்டு மற்றும் உடற் கல்வியியல் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான டென்னிஸ் விளையாட்டு போட்டிகள் கோயம்புத்தூர் மாருதி உடற் கல்வியியல் கல்லூரியில் . அதில் முதல் சுற்றில் ஒய் சி எம் ஏ கல்லூரியை 6-0 என்ற கணக்கில் தத்தனூர் எம் ஆர் சி கல்லூரி வென்றது, இரண்டாவது சுற்றில் செயின்ட் ஜான்… Read more: கோயம்புத்தூரில் மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் எம் ஆர் சி கல்லூரி இரண்டாமிடம்
  • திண்டிவனத்தில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி
    திண்டிவனத்தில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி. ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் வெற்றி கோப்பை ணை தொழிலதிபர் E.N.S.சேகர் வழங்கினார். திண்டிவனத்தில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலாம் ஆண்டு கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் வெற்றி கோப்பைகளை தொழிலதிபர் E.N.S. சேகர் வழங்கி சிறப்புரையாற்றினார். திண்டிவனம் அய்யந்தோப்பில் இ.என்.எஸ் பிரதர்ஸ் சார்பில் மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 56 அணியிகள் கலந்து கொண்டனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டியில், சென்னை ராயபுரம் அணி வெற்றிக் கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற சென்னை ராயபுரம் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது பரிசு பெற்ற அய்யந்தோப்பு அணிக்கு 30 ஆயிரம் ரூபாயும், மூன்று மற்றும் நான்காம் இடம் பிடித்த விழுப்புரம் மற்றும் இஎன்எஸ் பிரதர்ஸ் பிரதர்ஸ்… Read more: திண்டிவனத்தில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி
  • மேட்டுப்பாளையத்தில் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி
    கோவை மேட்டுப்பாளையம் செய்தியாளர்சத்தியமூர்த்தி மேட்டுப்பாளையத்தில் தென் மண்டல அளவிலான நீச்சல் போட்டி 2500 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2500 CBSE பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் தென்மண்டல அளவிலான நீச்சல் போட்டி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த நீச்சல் போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் உட்பட 428 பள்ளிகளைச் சேர்ந்த 2500 மாணவ மாணவியர் பங்கேற்க உள்ளனர்.11 வயது 14 வயது 17 வயது 19 வயது என 4 பிரிவுகளாக நடக்க உள்ள நீச்சல் போட்டியின் இறுதிப் போட்டிகள் வருகின்ற 22-10-23 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. முதல் இரண்டு இடங்களை பிடித்து வெற்றி பெறுபவர்கள்தேசிய அளவில் நடைபெற உள்ள நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நீச்சல் போட்டிகளை பள்ளி தாளாளர் டாக்டர் மணிமேகலை மோகன்தாஸ் துவக்கி வைத்து உரையாற்றினார்
  • மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
    மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு சொந்த ஊரான காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளையார் கோயிலில் பிளஸ் டூ முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஜாய் நடாஷா. கோகோ போட்டி வீரரான இவர், கடின பயிற்சிக்கு பிறகு தனது திறமையை வெளிப்படுத்தி, இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் மலேசியாவில் உள்ள மலாக்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கோகோ போட்டியில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டு விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றனர். தங்கப்பதக்கம் என்ற கோகோ வீராங்கனை ஜாய் நடாஷாவிற்கு அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் காளையார் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பேண்டு வாத்தியங்கள் முழங்க அவர் படித்த பள்ளிக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள்… Read more: மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு
  • மதுரையில் மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி
    மதுரையில் மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி….மதுரையில்தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம் மூலம் தெற்கு மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி நடைபெற்றது. 10 மாவட்டங்களைச் சேர்ந்த மதுரை திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் திண்டுக்கல் சிவகங்கை தென்காசி தேனி தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியின் துவக்க விழாவிற்கு தேனி ஆனந்தம் நிர்வாக உயர் அதிகாரிகள் மணவாளன் மற்றும் பிரகாஷ் ,பளு தூக்கும் சங்கத்தை பேராசிரியர் ஆனந்தகுமார்,மற்றும் எஸ்.வி.எஸ் ஃபுட்ஸ் நிர்வாக மேலாளர் சூரத் சுந்தர சங்கரும் பங்கேற்றனர். போட்டியானது உடல் எடையின் அடிப்படையில் 10 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஜூனியர் சீனியர் என்ற அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை மாவட்ட நீதிபதி ரஜினி, உயர்நீதிமன்றத் தின் மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, வழக்கறிஞர் திலீப், நடுவர் ரூபேஷ் , பளுதூக்குதல், வலு தூக்குதல் சங்கத்தின்… Read more: மதுரையில் மண்டல அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான வலுத்தூக்கும் போட்டி
  • தேசிய அளவில் பள்ளி மாணவிகள் சாதனை-கிராம  மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி   வரவேற்பு
    மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். ” தேசிய அளவில் கால் பந்து போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சவளக்காரன் அரசு பள்ளி மாணவிகள்” ஒடிசா மாநிலம் ஜூனியர் நேஷனல் கால்பந்து போட்டியில்  மன்னார்குடி  அருகே  அரசு பள்ளி மாணவிகள்  ஆஷிகா , இனியா , ஆகியோர்  வெள்ளி பதக்கம் மற்றும்  தமிழக அரசு சார்பில் ரூ 1 லட்சம் ரொக்க பணம்  பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு கிராம  மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி   வரவேற்பு அளித்தனர். தேசிய அளவில் சவளக்காரன் பள்ளி மாணவிகள் சாதனை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே  சவளக்காரன் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசினர்  மேல்நிலைப் பள்ளியில்  ஏழை எளிய மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவிகள் கால்பந்து போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்து வருகின்றனர். இந்த பள்ளியின் மாணவிகள்  தற்போது ஒடிசா மாநிலம் ஜூனியர் நேஷனல் கால்பந்து போட்டியில் ஆஷிகா , இனியா… Read more: தேசிய அளவில் பள்ளி மாணவிகள் சாதனை-கிராம  மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி   வரவேற்பு
  • ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் நேரில் சென்று வாழ்த்து
    ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் நேரில் சென்று வாழ்த்து திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரளம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மூத்த மகன் ராஜேஷ் . இவர் சீனாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியில் 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி சார்பில் பங்கேற்று தங்கப் பதக்கத்தையும் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்து வீடு திரும்பிய ராஜேஷை பேரளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஆர் காமராஜ் சால்வை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தார் மேலும் வெள்ளி காமாட்சி விளக்கு பரிசளித்து உற்சாகப்படுத்தினார். வாழ்த்து தெரிவித்து உற்சாகப்படுத்திய முன்னாள் அமைச்சருக்கு ராஜேஷ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்நிகழ்வில் நன்னிலம் வடக்கு… Read more: ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற வீரருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் நேரில் சென்று வாழ்த்து
  • தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம்-பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
    கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆழியாறு பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி குழந்தைகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…. அண்மையில் கோவாவில் கோவா மற்றும் சர்வதேச யூத் யோகா பெடரேஷன் சார்பாக இரண்டாவது தேசிய அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றன.. இந்த போட்டியில் தமிழகம்,பாண்டிச்சேரி,ஆந்திரா,,தெலுங்கானா,கர்நாடாகா,மற்றும் கோவா என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள்,சிறு குழந்தைகள் கலந்து கொண்டனர். பொது பிரிவு, சிறப்பு பிரிவு மற்றும் ஆர்டிஸ்டிக் ரிதமிக் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வயது அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றன. இதில் தமிழகம் சார்பாக கலந்து கொண்ட கோவை மாவட்டம் பொள்ளாச்சி,கோட்டூர்,மலையாண்டிபட்டணம் பகுதியில் உள்ள பர்ப்பிள் டாட்ஸ் பள்ளியை சேர்ந்த மழலை குழந்தைகள் ஒட்டு மொத்தமாக அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றனர். இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய தலைமை பயிற்சியாளர் அகிலாண்டேஸ்வரி… Read more: தேசிய அளவிலான யோகா போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம்-பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி குழந்தைகளுக்கு உற்சாக வரவேற்பு
  • கோவையில் நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் போட்டி
    கோவையில் நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கலை சமர் எனும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது…. கோவையில் இரண்டாவது சீசனாக நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக கலை சமர் எனும் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ்.தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழா நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் நந்தகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக நடைபெற்ற போட்டி துவக்க விழாவில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி,கர்நாடகா,கேரளா,தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். சுமார் நான்கு வயது சிறுவர்,சிறுமிகள் முதல் 60 வயதான பெரியவர்கள் வரை கலந்து கொண்ட இதில் ஒற்றை சிலம்பம் இரட்டை சிலம்பம், நடு கம்பு, நெடு கம்பு,வாள் வீச்சு உள்ளிட்ட பல்வேறு… Read more: கோவையில் நேஷனல் சிலம்பம் மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக தேசிய அளவிலான சிலம்பம் போட்டி
  • சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன்
    மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன் சீனா வில் நடைபெற்ற ஆசியன் கேம்ஸ் 2023 மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்று சொந்த ஊரான சோனப்பேட்டை கிராமத்திற்கு வந்த பிரவீன் சித்திரவேலுக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஷோ நகரில் நடைபெற்றது இப்போட்டிகளில் 16 தங்கம், 27 வெள்ளி, 31 வெண்கல என மொத்தம் 74 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது. இப்போட்டிகளில் தடகளத்தில் டிரிபிள் ஜம்ப் பிரிவின் இறுதி சுற்று போட்டியில் , 17. 13 மீட்டர் தாண்டி சீன வீரர் தங்கப்பதக்கத்தையும், 16. 93 மீட்டர் தாண்டி மற்றொரு சீன வீரர் வெள்ளி பத்தகத்தையும், 16.68 மீட்டர் தாண்டி… Read more: சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன்
  • லிஸ்யு மெட்ரிக் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா
    லிஸ்யு மெட்ரிக் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா அக்டோபர் 7 ஆம் தேதி, சனிக்கிழமையன்று, மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும், நடைபெற்றது. இந்நாளின் சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் காவல் உதவி ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. ஏ. சந்திரசேகரன் அவர்கள் கலந்து கொண்டார். விழா நிகழ்வை சிறப்பு விருந்தினர் பள்ளியின் கொடியேற்றி துவக்கி வைத்தார். பள்ளியின் தாளாளர் அருட்தந்தை முனைவக ஜோஸ் பால், பள்ளியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் (வழக்கறிஞர்) ஜாய் அரக்கல், பள்ளியின் நிர்வாகி அருட்தந்தை ஆண்டனி வாழப்பில்லி, லிஸ்யு சர்வதேச பள்ளியின் நிர்வாகி அரக வர்கீஸ் சாக்கலக்கல், திருமதி. சுஜாதா, ஆசிரியர் குழுவின் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் திருமதி. சுகன்யா ஜெரோம் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா நிகழ்வை சிறப்பு விருந்தினர் புறா மற்றும் வண்ணமயமான பலூன்கள் பறக்கவிட்டு துவக்கி வைத்தார். பள்ளி விளையாட்டு வீரர்கள் விளையாட்டு விழா தீபம்… Read more: லிஸ்யு மெட்ரிக் பள்ளியில் 2023 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளின் பரிசளிப்பு விழா
  • துளசேத்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தும் சதுரங்கபோட்டி
    எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழியில் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்பு: சீர்காழி தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான துளசேத்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தும் சதுரங்கபோட்டி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் துளசேத்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தும் மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியானது 11 வயது, 14 வயது, 17 வயது, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகள் என்ற அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. இவர்கள் பல்வேறு தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் 12 பேர், மாணவிகள் 12 பேர், என 96 மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய குறுவட்ட பகுதிகளிலிருந்து சதுரங்க போட்டியில் கலந்து கொண்டார்கள். இந்த போட்டியானது சர்வதேச விதிகளின்படி கணினி மூலமாக 22 உடற்கல்வி… Read more: துளசேத்திரபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தும் சதுரங்கபோட்டி
  • (no title)
    மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் ” மன்னார்குடி அருகே பைங்கநாடு கிராமத்தில் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. “ மன்னார்குடி அருகே உள்ள பைங்கநாடு கிராமத்தில் T.ரெங்கராஜ் நினைவு கபாடி குழு நடத்தும் 4-ம் ஆண்டு கபடி போட்டி நடைபெற்றது. இதில் மூன்று நாட்கள் நடைபெற்று 35 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது இதில் இறுதி நாளான இன்று 55 கிலோ எடை பிரிவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப் பரிசும் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்கநாடு கிராமத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்களுக்கான கபடி போட்டியில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, மதுரை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 35 க்கும் மேற்பட்ட அணியினர் கலந்துகொண்டு விளையாடினார். இதில் வெற்றி பெற்ற அணிகள் இறுதி போட்டிகளில்… Read more: (no title)
  • மன்னார்குடி அருகே மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி
    மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். மன்னார்குடி அருகே மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார் . இதில் 33 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பைங்கநாடு கிராமத்தில் மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த கபடி போட்டியில் , நாகை, திருவாரூர் தஞ்சாவூர், கோவை, மதுரை, சென்னை ,திருவள்ளூர் , விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர்  , பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 33 க்கும் மேற்பட்ட பெண்கள் அணியினர் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர் . இந்த கபடி போட்டியை முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் விழா குழுவினர் தொடங்கி வைத்தனர் . இந்த கபடி போட்டியில் வெற்றி பெறும் பெண்கள் அணிக்கு முதல் பரிசு 40, ஆயிரம் , இரண்டாம் பரிசு 30 ஆயிரம் , மூன்றாம் பரிசு 20 ஆயிரம் மற்றும்… Read more: மன்னார்குடி அருகே மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டி
  • நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாரத்தான் போட்டி
    நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர (மாரத்தான்) ஓட்டப் போட்டி 2023 நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஓடினர் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளி -கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும், தமிழ்நாடு அரசின் சார்பில், அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டிகள் (மாரத்தான்) நடத்தப்படுகின்றன. அதன்படி, அறிஞர் அண்ணா நெடுந்தூர (மாரத்தான்) ஓட்டப் போட்டி 2023னை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. கே. பி . சின்ராஜ், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச. உமா உள்ளிட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருச்செங்கோடு சாலையில் (07.10.2023) இன்று காலை தொடங்கி வைத்தனர். 17 முதல் 25 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர், பெண்களுக்கு 5 கிலோமீட்டர் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பிரிவில் ஆண்களுக்கு 10 கிலோமீட்டர்,… Read more: நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாரத்தான் போட்டி
  • மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டி
    எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குடியரசு தின தடகள போட்டி சீர்காழி விவேகானந்தா பள்ளி மைதானத்தில் தொடங்கியது. மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பாக சீர்காழி தனியார் பள்ளி மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் விதமாக இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமையேற்றும், விவேகானந்தா பள்ளி குழுமங்களின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஒலிம்பக் கொடியை ஏற்றி போட்டியினை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டியானது 400 மீட்டர், 200 மீட்டர், 100 மீட்டர், ஜாவ்லின், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் போன்ற போட்டிகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தரங்கம்பாடி, மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த 700 மாணவ மாணவிகள் விளையாட்டில் கலந்து கொண்டார்கள்.
  • தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் நடத்திய மாநில அளவிலான வலு தூக்கம் போட்டி
    தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கம் போட்டி கோவையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் என்பவர் மகன் சுதர்சன் வயது 24 கல்லூரி மாணவன். 74 கிலோ எடை பிரிவில் 125 கிலோ தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். எளிமையான குடும்பத்தைச் சார்ந்த இந்த மாணவன் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு முடித்துள்ளார். மேலும் தற்போது ஆலங்குளம் தினசரி காய்கனி சந்தை மார்க்கெட்டில் இரவு நேரத்தில் வேலை பார்த்து கொண்டு வீரவநல்லூர் தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா கால கட்டத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக தினசரி காய்கனி சந்தையில் வேலை செய்து… Read more: தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் நடத்திய மாநில அளவிலான வலு தூக்கம் போட்டி
  • மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி-சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார்
    மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான விளையாட்டு போட்டி திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தொடங்கி வைத்தார்: மெஸ்ஸி விளையாட்டு கழகம் நடத்தும் மாநில அளவிலான பெத்தாங்கு விளையாட்டு போட்டி நடைபெற்றது .இதில் திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். விளையாட்டில் வெற்றி பெற பங்கு கொண்ட வீரர்களுக்கு வாழ்த்துக்களை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தெரிவித்தார், உடன் மார்க், கிளப் நிர்வாகிகள், உறுப்பினர் யாவரும் உடன் இருந்தனர். வரும் நாட்களில் இறுதி சுற்று பரிசளிக்க திமுக உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்களையே தலைமை தாங்கி நடத்தி பரிசுகளை அளிக்கும் வகையில் அழைப்பு விடுத்துள்ளனர்.
  • ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகல்வித்துறை சார்பில் தடகள போட்டி துவக்கவிழா
    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மத்தூர்தெற்கு ஒன்றியம், ஆனந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணகிரி பள்ளிகல்வித்துறை சார்பில் மத்தூர் சரக அளவிலான தடகள போட்டிகள் துவக்கவிழாவை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,MLA அவர்கள் ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டிகளை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்ககினார். உடன் தலைமை ஆசிரியர் தி.செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரிமற்றும் மாவட்ட கல்வி அலுவலர் மு.மணிமேகலை ,மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்ஜி.துரை பிடிஏ தலைவர் பிரபு(எ)துரைராஜ்பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோமதிமாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மணிமேகலைநாகராஜ் பள்ளி ஆசிரியர்கள், மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள்,பூத்கமிட்டிஉறுப்பினர்கள்,பள்ளிமாணவ,மாணவிகள் பொதுமக்கள் என் அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்.
  • கோவையில் தென்னிந்திய அளவிலான யோகா போட்டி
    கோவையில் நலம் யோகா மையம் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் ஆகியோர் இணைந்து தென்னிந்திய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது… கோவையில் சர்வதேச யோகா போட்டிகளில் கலந்து கொள்வதற்கான தேர்வு போட்டிகள் கோவை சரவணம்பட்டி நலம் யோகா மையம் மற்றும் இண்டர்நேஷனல் யூத் யோகா ஃபெடரேஷன் ஆகியோர் சார்பாக நடைபெற்றது. இந்த போட்டியில் ஆனைமலை,கருமத்தம் பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள்,ஓசோன் மற்றும் கமலி யோகா மையங்களில் பயிற்சி பெற்று வருபவர்கள் என சுமார் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஐந்து வயது முதல் ஐம்பத்து ஐந்து வயது வரையிலான போட்டியாளர்களுக்கு சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. நலம் யோகா மைய நிறுவனர் ராஜேஷ் குமார் ஒருங்கிணைப்பில் இதில்,விருட்சாசனம்,கூர்மாசனம், மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம்,சக்ராசனம்,என பல்வேறு ஆசனங்களை செய்து மாணவ,மாணவிகள் அசத்தினர்.. தொடர்ந்து… Read more: கோவையில் தென்னிந்திய அளவிலான யோகா போட்டி
  • கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற 44 வது ஆண்டு ஜூடோ போட்டி
    கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற 44 வது ஆண்டு ஜூடோ போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்று கோவை பெங்கலன் பப்ளிக் பள்ளி கோப்பையை கைப்பற்றியது..… கோயம்புத்தூர் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பாக 44 வது ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. சி.பி.எஸ்.இ.பள்ளி மாணவர்களின் கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்று வரும் தொடர்ச்சியாக,மாணவ,மாணவிகளுக்கான ஜூடோ போட்டிகள் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள பெங்கலன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில்,கோவை,திருப்பூர,உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 17 சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் பள்ளிகளை சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.. 11,14,17,19 வயதிற்கு உட்பட்ட நான்கு பிரிவுகளாக மாணவர்களுக்கு தனியே,மாணவிகளுக்கு தனியே நடைபெற்ற இதில் மாணவ,மாணவிகள் அசத்தலாக தங்கள் திறமைகளை நிருபித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் 11 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் போட்டியில் முதல்… Read more: கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற 44 வது ஆண்டு ஜூடோ போட்டி
  • பழனியில் மாநில அளவிலான யோகாசன சேம்பியன்ஷிப் போட்டி
    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம். மற்றும் திண்டுக்கல் மாவட்ட யோகா ஸ்போர்ட்ஸ் சங்கம். ஆகியவை இணைந்து மாநில அளவிலான யோகாசனம் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றன. இந்நிகழ்வில் மாணவர்கள் யோகாசன நிகழ்வில் தனி திறமையை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர். தொடர்ந்து 48வது தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் மற்றும் 33வது தமிழ்நாடு யோகா ரேங்கிங் சாம்பியன்ஷிப் 42 ஆவது தேசிய யோகா சாம்பியன்ஷிப் தேர்வு ஆகியவை மூலம் யோகாசன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன. தொடர்ந்து இந்நிகழ்வில் கரிகாலன் மற்றும் அரவிந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன. மேலும் இந்நிகழ்வில் அஜ்மத் அலி,செந்தில், பொன்.முருகானந்தம், மன்சூர்… Read more: பழனியில் மாநில அளவிலான யோகாசன சேம்பியன்ஷிப் போட்டி
  • கோவையின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள்
    கோவையில் நடைபெற்ற தெற்கு குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் அனைத்து போட்டிகளிலும் அதிக புள்ளிகளை பெற்ற கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது… பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள் கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.. இதன்,ஒரு பகுதியாக கோவை பாரதியார் பல்கலைகழக மைதானத்தில் தெற்கு குறு மையத்திற்கு உட்பட்ட பல ளிகளுக்கான தடகளம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.சுமார் 32 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட இதில், மாணவ – மாணவியருக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடைபெற்றது. தடகள போட்டிகளில்,100 மீட்டர் துவங்கி 200, 400, 1500,3000,தூரங்கள் கொண்ட ஓட்டப்பந்தயம்,மற்றும் குண்டு எறிதல், தடையோட்டம்,உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.. இதில் மாணவ,மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டி… Read more: கோவையின் பள்ளிக்கல்வித்துறை சார்பாக குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள்
  • வால்பாறையில் நடைபெற்ற ஐவர் கால்பந்துப் போட்டியில் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி
    கோவை மாவட்டம் வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக ஐவர் கால்பந்து போட்டி வால்பாறையிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்ட நிலையில் இறுதிப்போட்டியில் வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மூன்று கோல் அடித்து வெற்றி பெற்று முதல் பரிசு கோப்பையை தட்டிச் சென்றது இரண்டாவது பரிசை சோலையாறு அணை அணியும், மூன்றாவது பரிசை உருளிக்கல் அணியும், நான்காவது பரிசை ஸ்டான் மோர் அணியும் வென்றது இப்போட்டியை வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி பொறுப்பாளர்கள் எஸ்.சுபையர், ஆர்.பாலமுருகன், வி.மணிகண்டன், பாலவிக்னேஷ், குள்ளி என்கிற சதீஷ், மணிகண்டன், முருகன் ஆகியோர் சிறப்பாக நடத்தி வைத்தனர் இதில் சிறந்த விளையாட்டு வீரராக உருளிக்கல் அணியை சேர்ந்த முபஷீர்,சிறந்த கோல் கீப்பராக ஷியாள் ஆகியோர் அதற்கான விருதை பெற்றனர் வெகு சிறப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கால்பந்தாட்ட வீரர்களும் பார்வையாளர்களாகிய பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
  • கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள்
    கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள் கோவை சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது… கோயம்புத்தூர் சகோதயா சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கூட்டமைப்பின் சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள் கடந்த 30 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற்றன.. மாணவர்களுக்கான கால்பந்து போட்டியாக நடைபெற்ற இதில்,கோவை,திருப்பூர்,ஈரோடு,திண்டுக்கல் என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 64 சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் பள்ளிகளை சேர்ந்த 117 அணிகள் கலந்து கொண்டன.14,16,19 வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இதில் 1872 மாணவர்க கலந்து கொண்டனர். முன்னதாக போட்டிகள் ஜி.ஆர்.ஜி.குழுமங்களின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி ஆலோசணையின் பேரில்,சிவில் ஏரோட்ரோம்,டெக்ஸ் பார்க் சாலையில் உள்ள சந்திரகாந்தி பப்ளிக் பள்ளியில் போட்டிகள் நடைபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் முதல் இடத்தை திண்டுக்கல் பார்வதி அனுகிரஹா பள்ளி,இரண்டாவது இடத்தை கோவை சி.எஸ்.அகாடமி பள்ளி,மூன்றாவது இடத்தை அன்னூர்… Read more: கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சார்பாக 44 வது ஆண்டு கால்பந்து போட்டிகள்
  • இந்திய கூடைப்பந்து-ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு
    இந்திய கூடைப்பந்து அணியின் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று, ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு… 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்பிற்கான தெற்காசிய தகுதிச் சுற்று கூடைப்பந்து போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி,ஸ்ரீலங்காவில் நடைபெற்றது. இதில் ஸ்ரீலங்காவை வீழ்த்திய இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில் இதில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த ஆதவன் என்ற பள்ளி மாணவனும் இடம் பிடித்து விளையாடினார். கோவையிலிருந்து 16 வயதுக்கு உட்பட்ட இந்திய கூடைப்பந்து அணியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்ற மாணவன் ஆதவனிற்கு,அவர் பயின்று வரும் காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. குணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,பள்ளியின் தலைவர் சுகுணா… Read more: இந்திய கூடைப்பந்து-ஸ்ரீலங்காவை வீழ்த்தி கோவை திரும்பிய சேர்ந்த பள்ளி மாணவன் ஆதவனுக்கு உற்சாக வரவேற்பு
  • பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
    ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். பின்னர் நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது மேலும், மாணவர்களாகிய நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால் மட்டுமே படிக்க முடியும், குறிப்பாக பெண் குழந்தைகள் கட்டாயம் படித்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற முடியும். பெண்களுக்கு இன்றைய காலகட்டத்தில் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு போன்றவற்றை போக்க நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ தெரிவித்தார். கால்பந்து, ஹாக்கி, வலைபந்து, கைபந்து, கோ-கோ, கபடி, துரோபந்து, ஹேண்ட்பந்து, பால் பேட்மிட்டன், டேபில் டென்னிஸ், கேரம், டென்னிஸ் தடகளம் ஆகிய விளையாட்டுகளில்… Read more: பேரளம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2023-2024ஆம் ஆண்டிற்கான குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
  • மதுரையில் மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டி
    மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டி..வரம்பற்ற 2023 – திறமை மற்றும் ஒற்றுமையின் வெற்றி: மதுரையில் மதுரை மகளிர் வட்டம் எண் 8 மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. மதுரை பெண்கள் வட்டம் எண் 8 (எம்எல்சி 8), சமூக சேவையில் 52 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட புகழ்பெற்ற இலாப நோக்கற்ற அமைப்பானது, “வரம்பற்ற 2023” என்ற வெற்றிகரமான அமைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மைல் கல்லை எட்டியுள்ளது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தும் விளையாட்டுப் போட்டி தேவதாஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. “அறிவொளி பெற கல்வி” என்ற தலைப்பில், எம்.எல்.சி.8ஐ தொடர்ந்து கல்வி முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது, 35,000 க்கும் மேற்பட்ட பின் தங்கிய குழந்தைகளுக்கு அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக நாடு… Read more: மதுரையில் மாற்றுத் திறனாளி வீரர்களுக்கான கிராண்ட் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு போட்டி
  • சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்
    சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர். சென்னை கொளத்தூர் செய்தியாளர் அப்போட்டியில் ஏழு பேர் கலந்து கொண்டு அனைவரும் பதக்கங்களை வென்றனர்.அதில் 3 தங்கப்பதக்கங்களும், 1 வெள்ளி பதக்கமும், 3 வெங்கலப் பதக்கங்களும் பெற்றுள்ளனர். புழல் மத்திய சிறையில் பணியாற்றும் சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் 5 பதக்கங்களையும், மதுரை மத்திய சிறையில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகள் 2 பதக்கங்களையும் வென்றுள்ளனர். காவல்துறை இயக்குநர் அமரேஷ் பூஜாரி சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் பதக்கங்களை வென்ற சிறைப் பணியாளர்களின் வாரிசுகளை நேரில் அழைத்து பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சிறைத்துறை டி.ஐ.ஜி இரா .கனகராஜ், , சிறைத்துறை டி.ஐ.ஜி, ஆ .முருகேசன் ஆகியோரும் உடன் இருந்தனர். பயிற்சி அளித்த முதல் நிலை காவலர் எஸ்.ராஜரத்தினம், முதல் தலைமை காவலர், பி.மாரிசெல்வம், பயிற்சி ஆசிரியர் ராஜேஷ்வரன்… Read more: சிறைப் பணியாளர்களின் வாரிசுகள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றனர்
  • சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
    எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மேலச்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி ஏற்று நடத்தும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சீர்காழி குறுவட்ட தடகளப் போட்டிகள் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (தனியார்) விளையாட்டு மைதானத்தில் இன்றும் நாளையும் என இரு தினங்கள் நடைபெறும் போட்டிகளை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார் மாவட்ட கல்வி அலுவலர் அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 57க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். ஆண் பெண் என மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களையும்,பாரட்டு சான்றிதழ்களையும் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் வழங்கி பாராட்டினர்.இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அம்பேத்கார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள்… Read more: சீர்காழியில் குறுவட்ட அளவில் தடகளப் போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
  • ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடந்த விளையாட்டு போட்டி
    கோவை ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடந்த விளையாட்டு போட்டி *ஓட்ட பந்தயம், தொடர் ஓட்டம், ஃபுட் பால், பிரமீடு அமைத்தல், டிரில், நிறம் கண்டுபிடித்தல் உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று அசத்திய ஆட்டிசம் குழந்தைகள் நெகிழ செய்த மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் நுட்பமான விளையாட்டு திறன்.. உடல், மூளை ஒருங்கிணைந்து செயல்பட பயிற்சி வழங்கப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.. கோவையில் மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள ஆட்டிசம் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில், ஆட்டிசம் சிறார்கள் சிறப்பாக விளையாடி நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் அதிக உணர்ச்சிவசப்பட கூடியவர்களாகவும், அவர்கள் செய்யும் விடயங்களை அறியாதவர்களாகவும் இருப்பார்கள் . அப்படிப்பட்ட ஆட்டிசம் குழந்தைகள் 300க்கும் மேற்பட்டோர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கௌமாரம் பிரசாந்தி அகாடமி பள்ளிக்கூடத்தில் பயின்று வருகின்றனர். இவர்களை உற்சாகப்படுத்த, உடல் திறனை மேம்படுத்தி மனவலிமை பெறுகின்ற வகையிலே, விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. கடந்த மூன்று மாதங்களாக உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நேச்சுரோபதி… Read more: ஆடிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு நடந்த விளையாட்டு போட்டி
  • கோவையில் 57-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
    கோவையில் 57-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் ஆகஸ்ட் 26 முதல் 30 வரை நடைபெறுகின்றது கடந்த 56 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 57-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் 2023 ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகின்றது. இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திரு.எல். கோபால கிருஷ்ணன், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் திரு. பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது – இவ்வாண்டு 57-வது ஆண்கள் பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 26 ம் தேதி முதல் 30- ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக்… Read more: கோவையில் 57-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
  • சீர்காழியில் மாநில அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி.நெய்வேலி அணி வெற்றி
    எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழியில் மாநில அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி.நெய்வேலி அணி வெற்றி. சீர்காழியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெய்வேலி அணி வெற்றி பெற்று முதல்பரிசுதொகை மற்றும் கோப்பையை வென்றது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எல்.எம்.சி விளையாட்டு மைதானத்தில் அசோக்ராஜ்}மேனாதேவி கிரிக்கெட் கிளப் சார்பில் 2}ஆம் ஆண்டு மாநில அளவிலான இரவு,பகல் மின்னொளி கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்றது. போட்டியினை சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் , காவல்ஆய்வாளர் சிவக்குமார், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் அறிவுசெல்வன், துணை அமைப்பாளர் ஜெ.கே.செந்தில் தொடங்கிவைத்தனர். இந்த போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 40 அணிகள் பங்கேற்று விளையாடினர். இதன் இறுதிபோட்டியினை சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். இறுதி போட்டியில் நெய்வேலி அணியும்,பழையபாளையம் அணியும் மோதினர்.இதில் நெய்வேலி அணி வெற்றிபெற்றது. முதலிடம்பெற்ற நெய்வேலி அணிக்கு ரூ.40ஆயிரம் பரிசுதொகையும்,கோப்பையும் வழங்கப்பட்டது.இரண்டாம் இடம்பெற்ற பழைபாளையம்… Read more: சீர்காழியில் மாநில அளவிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி.நெய்வேலி அணி வெற்றி
  • தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியை துவக்கி வைத்த விஜய் பிரபாகரன்
    பெரியாம்பட்டி விளையாட்டு மைதானத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு கபடி போட்டியை துவக்கி வைத்த விஜய் பிரபாகரன் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டிதேமுதிக கிளை கழகம் சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியாம்பட்டி விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய் பிராபா கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபடி போட்டியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஒன்றிய, கிளை கழக நிர்வாகிள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
  • தேசிய அளவிலான வூசு போட்டியில் கோவை மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை
    தேசிய அளவிலான வூசு போட்டியில் கோவை மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை… பீகாரில் நடைபெற்ற தேசிய அளவிலான வூசு சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்… கோவையை சேர்ந்த பள்ளி,மாணவிகள், வேத ஸ்ருதி,பவதாரிணி,பாலஹர்சனி,லட்சுமி பிரபா,மாணவர்கள் ஆகாஷ்,அபிசாய் ஜெரோன் ஆகியோர் திண்டிவனத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வூசு போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், அண்மையில் பீகாரில் நடைபெற்ற 22 வது தேசிய ஜூனியர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.. தேசிய அளவில் நடைபெற்ற இதில்,மகாராஷ்டிரா,பஞ்சாப்,உத்தரபிரதேசம்,கேரளா,கர்நாடாகா,ஆந்திரா என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் சான்குவாங்,ஜியான்சு,குன்சு,நான்குவாங்,நன்குன்,நந்தாவ்,வின்சுங்,தாய்ச்சி என பல்வேறு பிரிவுகளாகவும் மேலும் குழு போட்டிகளும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவி வேத ஸ்ருதி தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும் மற்ற மாணவ,மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இந்நிலையில் கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு வூசு… Read more: தேசிய அளவிலான வூசு போட்டியில் கோவை மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை
  • கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான்
    கோவையில் ஆகஸ்ட் 20 ந்தேதி சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து ‘ரன் ஃபார் வீல்ஸ்’ மாரத்தான்… 4 வது பதிப்பாக நடைபெறும் இதில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ள உள்ளனர்… கோவையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. சிற்றுளி அறக்கட்டளை மற்றும் கங்கா மருத்துவமனை இணைந்து நடத்த உள்ள இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கங்கா முதுகுத்தண்டுவட முறிவு மறுவாழ்வு மைய அரங்கில் நடைபெற்றது. இதில் கங்கா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராஜசேகர்,மற்றும் சிற்றுளி அறக்கட்டளையின் தலைவர் குணசேகரன் ஆகியோர் பேசினர். ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் கோவையில் ரன் ஃபார் வீல் மாரத்தான் நிகழ்வை நடத்துவதாகவும்,இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி சாதாரண… Read more: கோவையில் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் வகையில்,ரன் ஃபார் வீல் எனும் மாரத்தான்
  • நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி
    நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் 750 யோகாசன வீரர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர் நாமக்கல் தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சேம்பியன்ஷிப் 2023 ஓப்பன் போட்டி இன்று 17.08 .2023 நாமக்கல் சுப்புலட்சுமி மஹாலில் நடைபெற்றது நாமக்கல் மாவட்ட யோகா அசோசியேசன் ஒருங்கிணைப்பாளர் கே. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த யோகாசன போட்டியில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 750 க்கும் மேற்பட்ட யோகாசன போட்டியாளர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.. இந்த போட்டியில் ஓவராலக தமிழ்நாடு அணி வெற்றி பெற்றதுஅதிக புள்ளிகள் எடுத்து வெற்றி யோகாசன சாதனையாளர்களுக்கு வெற்றி சான்றிதழ், வெற்றி கோப்பைகளை வழங்கினார்கள், 9 வயது முதல் 35 வயது வரையிலான ஆண்களும் பெண்களும் மொத்தம் 750 பேர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் இவர்களுக்கு ஆம்ஜூ இந்தியா பிரைவேட்… Read more: நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய அளவிலான ரேங்கிங் யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி
  • கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம்
    கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம் இந்நிகழ்வின் 11-வது பதிப்பு டிசம்பர் 17, 2023 அன்று நடக்க இருக்கிறது உலகம் முழுவதிலும் இருந்து 18,000 க்கும் அதிகமான ஓட்ட பந்தய வீரர்கள் கோயம்புத்தூர் மாரத்தானில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது கோயம்புத்தூர் 07, ஆகஸ்ட் 2023: கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் (CCF), வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தான் பவர்ட் பை எல்ஜி எக்விப்மெண்ட்ஸ் தொடங்குவதை அறிவித்தது . இந்நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2023 அன்று நடைபெறவுள்ளது. இந்த மாரத்தானின் 11 வது பதிப்பு, முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது., நாடு முழுவதிலிருந்தும் 18,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு மற்றும் அடிக்கருத்து “LET’S KO KOVAI” என்பதாகும். 2023 ஆம் ஆண்டு பதிப்புக்கான பதிவுகளை கோவை மாவட்ட உயர் அதிகாரிகள் தொடங்கி வைத்தனர். காவல்துறை ஆணையர் திரு.வி. பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்… Read more: கோயம்புத்துார் மராத்தான் போட்டிக்கான முன்பதிவு துவக்கம்
  • உலக சாம்பியன்ஷிப் போட்டி- கோவையை சேர்ந்த பள்ளி மாணவி நான்கு தங்க பதக்கங்கள் வென்று சாதனை
    உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையை சேர்ந்த பள்ளி மாணவி நான்கு தங்க பதக்கங்கள் வென்று சாதனை. ‘டேபிள் டென்னிஸ், ஸ்குவாஸ், லான் டென்னிஸ் மற்றும் இறகுபந்து ஆகிய நான்கு விளையாட்டுகளையும் உள்ளடக்கிய ராக்கெத்லான் உலக சாம்பியன்ஷிப் – 2023 ஆம் ஆண்டுக்கான போட்டி லண்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக கோவை அருகே உள்ள சூலூர் பகுதியில் உள்ள எம்.டி.என்., பியூச்சர் பள்ளியில் பயின்று வரும் ஆதித்,மற்றும் ஆதிரை,என இருவர் கலந்து கொண்டனர். அண்ணன்,தங்கையான இருவரும், லண்டன் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாடினர். இதில், லண்டனில் நடைபெற்ற, பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கான கலப்பு இரட்டையர் போட்டியில் ஆதித்,மற்றும் ஆதிரை ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளியும், இதே போல 16 வயதுக்கு உட்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் கிரேட் பிரிட்டன்… Read more: உலக சாம்பியன்ஷிப் போட்டி- கோவையை சேர்ந்த பள்ளி மாணவி நான்கு தங்க பதக்கங்கள் வென்று சாதனை
  • பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை
    கோவையை சேர்ந்த கவினிலவு என்ற பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.. கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன்,ரதிக் தேவி தம்பதியிரின் மகள் கவிநிலவு.. பத்து வயதான சிறுமி கவிநிலவு அதே பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் சிலம்பம் கற்று வருகிறார். சிறு வயது முதலே சிலம்பம் சுற்றுவதில் ஆர்வமுடைய இவர்,ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி சாதனை படைத்துள்ளார்.. சின்னவேடம்பட்டி,மகாலட்சுமி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற சாதனை நிகழ்வில், நடைபெற்றது..அதிகாலை ஆறு மணி முதல் மதியம் 12 மணி வரை தொடர்ந்து சிலம்பம் சுழற்றி செய்த இவரது இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகம்,அமெரிக்கன் உலக சாதனை புத்தகம் மற்றும் யுரோப்பியன் உலக சாதனை புத்தகம் என… Read more: பத்து வயது சிறுமி ஒற்றை கம்பு வீச்சில் அலங்கார சிலம்பத்தை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுழற்றி உலக சாதனை
  • கோவையில் அனைத்து கிளப்புகளையும் இணைத்து விரைவில் கால்பந்து போட்டி
    கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது..இதில் புதிய அஜித்குமார் லால் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிறப்பு அழைப்பாளராக,கோவை குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மருது பாண்டியன் சிறப்பு கலந்து கொண்டார் .தேர்தல் அதிகாரியாக வக்கீல் விஜய் ஆனந்த்,ஜேசுதாஸ்,சேதுபதி உள்பட பலர்கலந்து கொண்டனர். கோவை மாவட்ட கால்பந்து சங்கத்தின் புதிய தலைவராக அஜித்குமார் லால்.செயலாளராக கிருஷ்ணமூர்த்தி,உதவி தலைவர்களாகசண்முகநாதன் ஆர்.வி. ராமசாமி உதவி செயலாளராக சந்திரகுமார் பொருளாளராக சீனிவாசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் அதேபோன்று நிர்வாக குழு உறுப்பினர்களாக சரவணன் செந்தில் பிரபு ஆனந்தன்செல்வ சிங் ரவிக்குமார்ஆகியோர் அறிவிக்கப்பட்டனர் அதை தொடர்ந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோவை மாவட்ட கால்பந்து கழக தலைவர் அஜித்குமார் லால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தற்போது நடந்த75 ஆவது பொதுக்குழு கூட்டத்தில் 16ஆபீஸ் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கோவை மாவட்ட கால்பந்து கழகம்… Read more: கோவையில் அனைத்து கிளப்புகளையும் இணைத்து விரைவில் கால்பந்து போட்டி
  • மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா
    ஆர்.கண்ணன்,செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள ராஜகோடாங்கிப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்தாளம்மன், ஸ்ரீ காளியம்மன் கோயில் ஆடி மாத திருவிழா கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் நிகழ்ச்சியானது ஆலய திடலில் நடைபெற்றது.இந்த எருது ஓட்டத்திற்காக, திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ராஜகம்பளத்து நாயக்கர் இனமக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் தாங்கள் வளர்த்து வரும் எருதுகளுடன் வழிபாட்டு தளத்துக்கு அழைத்து வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அவர்கள் வளர்த்து வரும் எருதுகள் உரிமி மேளம், தாரைத்தப்பட்டை முழங்க ஆலயத்துக்கு அழைத்துவரப்பட்டு அங்கு மந்திரிக்கப்பட்ட புனித நீர் தெளிக்கப்படுகிறது. அதன்பின் எருதுகள் சுமார் 2 கிமீ மீட்டர் தொலைவிற்கு அழைத்துச்சென்று அங்கிருந்து வழிபாட்டு தளத்தை நோக்கி அனைத்து… Read more: மணப்பாறை அருகே ராஜகோடாங்கிபட்டியில் எருது ஓட்டம் என்னும் மாலை தாண்டும் திருவிழா
  • சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது.
    சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது. ‘ஏழாவது ஹீரோ ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி வரும், 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை சென்னையில் நடக்கவுள்ளது. போட்டியில், இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இந்நிலையில் இப்போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோப்பை பல்வேறு மாநிலங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கடந்த 19ம் தேதி சென்னையில் துவங்கி, பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நேற்று கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. கோப்பையை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் மற்றும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் வரவேற்று அறிமுகப்படுத்தினர். தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பில் சுகுணா பள்ளி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அறிமுக நிகழ்ச்சியில், கோவை… Read more: சென்னையில் நடக்கவுள்ள ஏசியன் சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிக்கான கோப்பை கோவைக்கு கொண்டுவரப்பட்டது.
  • கோவையில் ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது
    கோவையில் புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது! சனி, ஞாயிறு இரு நாட்கள் ரேஸ் பிரியர்களுக்கு விருந்தாக அமையப்போகிறது அனல் பறக்கும் ‘கோயம்புத்தூர் ராலி’ ! கோவையில் ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் 4 சக்கர வாகனங்களுக்கான புளூ பேண்ட் எப்.எம்.எஸ்.சி.ஐ. இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப்பின் 3ம் சுற்று ஜூலை 29 (சனி) மற்றும் ஜூலை 30 (ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த எப்.எம்.எஸ்.சி.ஐ. சாம்பியன்ஷிப் நிகழ்வுகளுக்கு கோவையில் செயல்படும் புளூ பேண்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வ புரோமொடேராக உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் சுற்றின் முதல் சுற்று சென்னையிலும் இரண்டாம் சுற்று இட்டாநகரிலும் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. கோவையில் நடைபெறும் 3ம் சுற்றின் துவக்க விழா இன்று (28.7.2023) கோவை ஜென்னிஸ் கிளப் வளாகத்தில் நடைபெறுகிறது. ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’பின் தலைவர் கார்த்திகேயன், பி.எஸ்.ஜி. கல்வி… Read more: கோவையில் ‘கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப்’ சார்பில் ராலி சாம்பியன்ஷிப்-ன் 3ம் சுற்று நடைபெறுகிறது
  • ரிஷிவந்தியம் அருகே மிதிவண்டியில் இருக்கையில் சிலம்பம் சுற்றியப்படி பத்து கிலோமீட்டர் தூரம் சென்று கல்லூரி மாணவர் சாதனை
    கள்ளகுறிச்சி மாவட்டம் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் சோழன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ்க்காக சாதனை முயற்சியாக இன்று காலை ரிஷிவந்தியம் அடுத்த திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தசங்கர் – கவிதா இவர்களின் மகனும் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று கல்லூரி படித்து வரும் மாணவன் வெங்கடேஷ் என்பவர் மாடாம் பூண்டி கூட்டு ரோட்டில் இருந்து மணலூர்பேட்டை வரையிலான பத்து கிலோமீட்டர் தூரத்தை மிதிவண்டியை மிதித்தபடி இரு கைகளிலும் சிலம்பம் சுற்றியவாறு 20 நிமிடத்தில் கடந்து சாதனை புரிந்தார், இந்நிகழ்ச்சியை மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ஹரிஹரன்,சோழன் உலக சாதனை அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சூரியமூர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியை கொடி அசைத்து வைத்து துவக்கி வைத்தனர், சாதனை படைத்த மாணவன் வெங்கடேசஷ்க்கு சால்வை அணிவித்து சாதனை முயற்சியை பாராட்டி “சோழன் உலக சாதனை விருது” சான்றிதழை வழங்கினார்கள்,இந்நிகழ்ச்சியில் சாதனை புரிந்த மாணவனுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த… Read more: ரிஷிவந்தியம் அருகே மிதிவண்டியில் இருக்கையில் சிலம்பம் சுற்றியப்படி பத்து கிலோமீட்டர் தூரம் சென்று கல்லூரி மாணவர் சாதனை
  • பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழா-மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம்
    பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு கணபதி பிரதர்ஸ் நடத்தும் முதலாம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம் 30 க்கும் மேற்பட்ட காளைகள், 60 க்கும் மேற்பட்ட குதிரைகள் சீரி பாய்ந்தன தஞ்சாவூர்மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீஅரியநாச்சியம்மன் ஆலய சந்தனகாப்பு உற்சவ திருவிழாவை முன்னிட்டு முதன்முறையாக கணபதி பிரதர்ஸ் நடத்தும் மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம் கீழகபிஸ்தலம் பவுண்டு நெடுஞ்சாலையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் செல்வ பாண்டியர் கலந்து கொண்டு கொடியசைத்து வைத்து பந்தயத்தை துவங்கி வைத்தார். இந்த பந்தயத்தில் 30 க்கும் மேற்பட்ட காளைகளும், 50. க்கும் மேற்பட்ட குதிரைவண்டிகளும் புயலை காற்றை போல சீரி பாய்ந்தன… 100 க்கும் காளைவண்டி, குதிரை வண்டி வீரர்களும் கலந்து கொண்டு எல்லைகோட்டை விரட்டி… Read more: பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் ஸ்ரீ அரிய நாச்சியம்மன் ஆலய திருவிழா-மாட்டுவண்டி, குதிரை வண்டி மாபெரும் எல்லை பந்தயம்
  • கீழக்கரை கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மைதானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்ட ஆய்வு செய்தார்
    அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த வகுத்து மலை அடிவாரம் கீழக்கரையில் 66 ஏக்கர் பரப்பளவில் ரூ 44 கோடியே 6 லட்சம் மதிப்பில், தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என சட்டமன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த மார்ச் மாதம் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மைதான கட்டுமான பணிகள் நிறைவடையும் என தெரிகிறது. இந்தப் பணிகள் நடைபெறுவதை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று காலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது,இந்ததிட்ட பணிகள் இந்த ஆண்டு முடிவில் நிறைவு பெறும் . தொடர்ந்து 4வது முறையாக வந்து இந்த மைதானத்தை பார்த்து ஆய்வு செய்யப்படுகிறது. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஜல்லிக்கட்டு கலாச்சாரம் – இந்த மைதானத்தில் 35 சதவீதம் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது. தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு, நுழைவு… Read more: கீழக்கரை கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு மைதானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்எ.வ.வேலு பார்வையிட்ட ஆய்வு செய்தார்
  • கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டி
    கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என அசத்தலாக விளையாடிய மாற்றுத்திறனாளி வீர்ர்கள் கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மாநில அளவிலான வீல் சேர் கூடைப்பந்து போட்டி, கோவை நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள, மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்தில் நடைபெற்றது.பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடைபெற்ற இதில், தமிழ்நாடு,பாண்டிச்சேரி,கேரளா,கர்நாடகா உள்ளிட்ட மாநில அணிகளை சேர்ந்த வீல் சேர் கூடைப்பந்து விளையாட்டு வீர்ர்கள் கலந்து கொண்டனர்..முன்னதாக போட்டிகளை துவக்கி வைத்த கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் மாற்றுத்திறனாளி வீர்ர்களுடன் கலந்துரையாடினார். மாற்று திறனாளிகளின் திறமைகளை மட்டும் வெளிக்கொண்டு வராமல் சக்கர நாற்காலி கூடைப்பந்து பற்றிய விழிப்புணர்வையும் விளையாட்டு உலகில் ஏற்படுத்தும் வகையிலும்,மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தி, விளையாட்டு துறையில் ஈடுபடுத்தும் நோக்கில்,நடைபெற்ற இப்போட்டிகளில்,கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர்கள் அசத்தலாக பந்தை லாவகமாக எடுத்து சென்று விளையாடினர்.. சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்… Read more: கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கூடைப்பந்து போட்டி
  • வால்பாறை 11 வது வார்டு பகுதி கால் பந்தாட்ட வீரர்களுக்கு பந்து மற்றும் கையுறை வழங்கி வாழ்த்து
    கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் உள்ள பச்சமலை எஸ்டேட் மற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வால்பாறை பந்து மற்றும் கையுறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நகர் மன்ற துணைத்தலைவரும் 11 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான த.ம.ச.செந்தில் குமார் சார்பாக 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜே.பி.ஆர் என்ற ஜே.பாஸ்கர், 8 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சி.இந்துமதி ஆகியோர் முன்னிலையில் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் ராஜ்கனி, குல்லி மற்றும் பலர் உடனிருந்தனர்
  • மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளும் கூடைப்பந்து போட்டி 28ம் தேதி துவங்குகிறது
    கோவை அனைவருக்குமான கூடைப்பந்து எனும் நோக்கத்தில் மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ள உள்ள கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள் கோவையில் வரும் ஜூன் 28 ஆம் தேதி துவக்கப்பட உள்ளது. இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு, கோவையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் செய்தியாளர் சந்திப்பில், ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிற்றுளி தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள்சுந்தர்ராஜ்,குணசேகர், பத்மநாபன்,சுரேஷ் ஆகியோர் கூறுகையில், மாநிலங்களுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து மற்றும் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாட்டு போட்டிகள்,கோவை நேரு ஸ்டேடியத்தில் வரும் ஜூன் 28 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்தனர். இதில் போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான மார்டின் குழுமம் . ராகா குழுமம், பொடாரன் குளிர்பான நிறுவனம், சரவணா ப்ளூ மெட்டல், மை ஸ்போர்ட்ஸ் ஃபேக்டரி, க்ராவிட்டி ஸ்போர்ட்ஸ் மற்றும் பாரத் ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களும் இப்போட்டிகளுக்கான ஆதரவாளர்களாக இருந்து போட்டிகளை நடத்த உள்ளதாகவும்,… Read more: மாற்றுத்திறனாளி அணிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்ளும் கூடைப்பந்து போட்டி 28ம் தேதி துவங்குகிறது
  • கிரேட் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
    பெயர்.சி.ஜான்வி, பிறந்த தேதி.23-5-2019. பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்னை.தந்தை பெயர்.ப.சிவா(முதுநிலை மேலாளர், வங்கியில் பணிபுரிகிறார்) தாயின் பெயர் ப.நித்யா(ஆசிரியை மற்றும் சமூக பணியாளர்). அண்ணன் பெயர் சி.அனிஷ் (11 வயது).3 வயதில்13 உலக சாதனைகள் படைத்தவர் ஆவார். தற்போது டி.ஏ.வி.பாபா வித்யாலயா பள்ளிகளில் எல்.கே.சி. படித்து வருகிறார்.1.இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (ஒரு நிமிடத்தில் கண்ணை மூடிக் கொண்ட குழந்தையால் நிகழ்த்தப்பட்ட சிலம்பத்தின் அதிகபட்ச சுழற்சி), 2.ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (ஒரு நிமிடத்தில் கண்ணை மூடிக் கொண்ட குழந்தையால் நிகழ்த்தப்பட்ட சிலம்பத்தின் அதிகபட்ச சுழற்சிகள்), 3. எவரெஸ்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்-நேபால் (ஒரு நிமிடத்தில் சிலம்பத்தின் அதிகபட்ச சுழற்சிகள் பானையின் மீது கண்களை மூடிக்கொண்டு ஒரு நிமிடத்தில் நிகழ்த்தப்பட்டது), 4. ஹோப் இன்டர்நேஷனல் வேர்ல்ட் ரெக்கார்டு (தமிழ் எழுத்துக்களை வேகமாகச் சொல்லுதல்) 5.ஃபாரெவர் ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், 6. கிரேட் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (குழந்தைகளின் தனித்துவமான… Read more: கிரேட் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்
  • வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்களுக்கு தேசிய போட்டியில் தங்கம்
    எல்.தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனர். சிலம்பாட்டம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்றவற்றில் தேசிய அளவிலான போட்டிகள் புதுடெல்லி குருகிராம் டோ தேவிலால் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். சிலம்பாட்டப் போட்டியில் தொடும்புள்ளி விளையாட்டில் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் கே.ராகுல், பி.ஆகாஷ், என்.பிரனேஸ்கார்த்திக், ஜே.ஹித்தேஸ்பாலாஜி, ஜி.வி.நதீஸ், எம்.எழிலன், எஸ்.பரத்குமார், பி.ராஜசேகர் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர். கே.அஸ்விக் வெள்ளிப்பதக்கம் பெற்றார். வில்வித்தைப் போட்டி ஜூனியர் பிரிவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த எம்.எழிலன் தங்கப்பதக்கம், சேலம் மாவட்டத்தை சேர்ந்த பி.ராஜசேகர் வெள்ளிப்பதக்கம் பெற்றனர்.ஸ்கேட்டிங் போட்டியில், சப் ஜூனியர் பிரிவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல், அப்துல்லா ஆகியோர்… Read more: வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்களுக்கு தேசிய போட்டியில் தங்கம்
  • கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ சாய் குரு பத்து மாதங்களில் 23 தேசிய,சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை
    கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரபாகரன்,கிருத்திகா.இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு.அதே பகுதியில் உள்ள ஸ்ரீ அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் ஸ்ரீ சாய் குரு,கடந்த பத்து மாதங்களாக கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள யோவா யோகா அகாடமியில், பிரபல யோகா சாதனை மாணவி வைஷ்ணவியிடம் யோகா பயிற்சி எடுத்து வந்துள்ளார். அகாடமியின் நிறுவனர் சரவணன் தீவிர முயற்சியால், யோகாவை விரைவாக கற்று கொண்ட சிறுவன்,யோகாவின் மிக கடினமான விருட்ச விருட்சிகம்,கண்ட பெருண்டம்,சப்த திம்பாசனம்,சக்ர பந்தாசனம் போன்ற ஆசனங்களை எளிதாக கற்றுள்ளார். ஆரம்ப கட்ட பயிற்சி நேரங்களிலேயே தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட சிறுவன் ஸ்ரீ சாய் குரு,இது வரை சுமார் 23 போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெரும்பாலும் முதல் பரிசையும் வென்று அசத்தியுள்ளார்.அண்மையில் துபாய் மற்றும் கம்போடியா நாடுகளில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் பதக்கங்கள் வென்றுள்ளார்.… Read more: கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஸ்ரீ சாய் குரு பத்து மாதங்களில் 23 தேசிய,சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை
  • சின்ன ஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே.சதீஷ்குமார் நினைவாக வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
    அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள சின்னஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே சதீஷ்குமார், நினைவாக வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியை சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தனராஜ், ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்து கலந்து கொண்ட அனைத்து ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மலர் மாலை மற்றும் கைத்தறி ஆடை அணிவித்தனர் பரிசுகளையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பெரியஊர் சேரி ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டியன், திமுக நிர்வாகிகள் தியாகு, அருள், மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தனகருப்பு, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்த், மேற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் பிரதாப், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 11 காளைகளும்.100 வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கும்… Read more: சின்ன ஊர்சேரி கிராமத்தில் மறைந்த எஸ்.கே.சதீஷ்குமார் நினைவாக வட மாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி
  • அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டத்தில் ஆடவர் பிரிவில் இன்கம் டேக்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது
    பரபரப்பாக நடந்த பெண்கள் பிரிவில் கேரளா மின்வாரிய அணி மகுடம் சூடினர் கோயம்புத்தூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள்” கோவையில் கடந்த மே 27-ம் தேதி துவங்கி இன்று (ஜுன் 1-ம் தேதி) வரை 6 நாட்கள் நடைபெற்றது. இதில் ஆடவர்கள் பிரிவில் 10 அணிகளும் மகளிர் பிரிவில் 8 அணிகளும் பங்கேற்றன. இன்று (01.06.2023) மாலை 4.15 மணிக்கு மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கான போட்டியில் ஆண்கள் பிரிவு போட்டியில் பாங்க் ஆஃப் பரோடா அணியை எதிர்த்து இந்தியன் இரயில்வே அணி விளையாடியது. இதில் இந்தியன் இரயில்வே அணி 81 – 71 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று இந்தியன் இரயில்வே அணி மூன்றாவது இடத்தையும், பாங்க் ஆஃப் பரோடா அணி நான்காவது இடத்தையும் பிடித்தது. மகளிர் பிரிவில் தென் மேற்கு இரயில்வே அணியை எதிர்த்து மேற்கு இரயில்வே அணி… Read more: அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டத்தில் ஆடவர் பிரிவில் இன்கம் டேக்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது
  • பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம்- ‘அவங்க முடிவு, நாம என்ன செய்ய முடியும்?’ பிரிஜ் பூஷன் சிங்
    மல்யுத்த வீரர், விராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்- மல்யுத்த வீரர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக அறிவித்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார். “டெல்லி காவல் துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருந்தால், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கும். இன்று தங்களது பதக்கங்களை கங்கையில் வீச அவர்கள் ஹரித்வார் சென்றனர். ஆனால், பதக்கங்களை அவர்கள் டிகைட்-இடம் ஒப்படைத்தனர். அது அவர்களது முடிவு, அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்று பிரிஜ் பூஷன் சிங் தெரிவித்தார். மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் பிரிஜ் பூஷன் சிங் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்று கிழமை… Read more: பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம்- ‘அவங்க முடிவு, நாம என்ன செய்ய முடியும்?’ பிரிஜ் பூஷன் சிங்
  • திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழா
    வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை விளையாட்டு மைதானத்தில் விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் காஸ்மஸ் லயன் சங்கம் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு மாநில அளவிலான மேரி மாதா ஐவர் கால்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் 40 அணிகள் பங்கேற்கின்றன. இறுதிப்போட்டியில் மதுரை அணியும் , திண்டுக்கல் அணியும் மோதின. இப்போட்டியில் முதல் பரிசை திண்டுக்கல் சேது எப்சி அணியும், இரண்டாம் பரிசை மதுரை சேவியோ எப் சி அணியும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கோப்பை மற்றும் ஊக்கத் தொகையினை மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா வழங்கினார். இதில் மாமன் உறுப்பினர் வெங்கடேஷ், சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜா மைதீன் மற்றும் லயன் சங்க நிர்வாகி திபூர்சியஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
  • ஐ.பி.எல்.இறுதி போட்டியில் கலந்து கொள்ளும் சி.எஸ்.கே.அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஐ.டி.சி.சன்ஃபீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பாக பேரணி நடைபெற்றது
    ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் ரசிகர் பட்டாளங்களை அதிகம் கொண்ட அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வருகிறது.தோனி தலைமையில் அதிக இறுதி போட்டிகளில் கலந்து கொண்ட அணி என்ற பெருமையை கொண்ட சி.எஸ்.கே.நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் விளையாட உள்ளது.இந்நிலையில் ஐ.டி.சி சன் ஃபீஸ்ட் சூப்பர் மில்க் பிஸ்கட் சார்பாக சி.எஸ்.கே.அணியை வாழ்த்தும் விதமாக ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேரணி நடைபெற்றது…“Strongaa whistle Podu” என்ற விளம்பரத்தில் இருந்து CSK-அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விசில் போடு ஆர்மியாக மஞ்சள் வண்ணம் ஆடை அணிந்த சிஎஸ்கே ரசிகர்களின் விசில் போடு பேரணி நடைபெற்றது… இதில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
  • கோவையில் நாளை துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
    கோவையில் மே 27 முதல் ஜுன் 1, வரை 6 நாட்கள் நடைபெறுகிறது 56 – வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை, 20 – வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கடந்த 55 ஆண்டுகளாக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 19 வருடங்காளாக பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள அணிகள் பெருமையுடன் கலந்து கொள்வார்கள். இப்போட்டிகள் 2023, மே 27 – ந் தேதி முதல் ஜுன் 1 – வரை 6 நாட்கள் கோவையில் நடைபெற உள்ளது.இதுகுறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும் கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான திரு. ஜி. செல்வராஜ், துணைத் தலைவர் பழனிசாமி, செயலாளர் திரு. ளு. பாலாஜி, பொருளாளர் திரு. ஆ. னுநநடியடய ஆகியோர் கூறியதாவது :- ஆண்கள் பிரிவில் இந்திய… Read more: கோவையில் நாளை துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
  • அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அஞ்சூர் ஜெகதேவி அரசு மேல்நிலைப்பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் கிரிக்கெட் கிளப் நடத்தும் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
  • அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் லோனவாலா இந்திய கப்பற்படை அணி வெற்றி
    தேனி மாவட்டம் பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் அமரர் பி.டி சிதம்பர சூரிய நாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 62 வது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி கடந்த 15ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்று அதில் வெற்றி பெற்ற அணிகள் லீக் சுற்றுக்கு தகுதி பெற்று கடந்த இரண்டு நாட்களாக லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இந்நிலையில் லீக் போட்டிக்குநான்கு அணிகள் தகுதி பெற்று லீக் போட்டிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து லீக் போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் இறுதி போட்டி மற்றும் மூன்று , நான்காம் இடத்திற்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் நடைபெற்ற முதல் போட்டியாக மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் பெங்களூரு பேங்க் ஆப் பரோடா அணியும் புதுடெல்லி இந்திய விமானப்படை அணியும் மோதியதில் 74 க்கு 62 என்ற புள்ளிகள் அடிப்படையில் புதுடெல்லி இந்திய… Read more: அகில இந்திய கூடைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில் லோனவாலா இந்திய கப்பற்படை அணி வெற்றி
  • உலக சாதனையில் பங்கேற்ற மாணவர்களை எம்எல்ஏ பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
    இந்திய சாதனைப் புத்தகத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சிக்காக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறையை வலியுறுத்தும் விதமாக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி லாசுப்பேட்டை தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 3000 பேர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் ராம் சிங் நகர் எம்ஜிஆர் வீதியில் உள்ள மருது சகோதரர்கள் வீர சிலம்பாட்ட குழுவினர் இந்த ஆண்டு கலைமாமணி விருது பெற்றஅதன் தலைவர் வேல்முருகன் மற்றும் பயிற்சி ஆசிரியர் மற்றும் செயலாளர் கலை மாமணி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு வகையான தற்காப்பு பயிற்சி முறையினை ஒரு மணி நேரம் ஒரு நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி உலக சாதனை புரிந்து அதற்கான சான்றிதழ் மற்றும் மடல்களை பெற்றனர்.இவர்கள் அனைவரும், மருது சகோதரர்கள் வீர சிலம்பாட்ட குழுவின் கௌரவ தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பாஸ்கர்… Read more: உலக சாதனையில் பங்கேற்ற மாணவர்களை எம்எல்ஏ பாராட்டி சான்றிதழ் வழங்கினார்