- திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்-திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ், தகவல் கூறினார்வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை/ வெயிலில்இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள்.உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும் .ஒ.ஆர்.எஸ்(ORS), எலுமிச்சை ஜூஸ், இளநீர், நீர் மோர் மற்றும் பழச்சாறுகள் பருகி…
Read more: திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்-திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
- இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்-ஏ.பி முருகானந்தம்
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான ஏ.பி முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சிக்கு முதல் வெற்றி குஜராத்தில் தொடங்கியுள்ளது. சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும். தமிழகத்தில் பாஜக தலைவர்கள் முதல் பிரதமர் மோடி தொடங்கி அண்ணாமலை வரை அனைவரின் சுற்றுப்பயணம் தமிழகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது 39…
Read more: இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்-ஏ.பி முருகானந்தம்
- வலங்கைமானில் பல ஆண்டாக மூடப்பட்ட உழவர் சந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1999 -ம் ஆண்டு உழவர் சந்தைகள் தொடங்கப்பட்டது. கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்றனர். 1999 -ம் ஆண்டு முதல்வராக இருந்தால் கருணாநிதி நினைவில் உதித்தது தான் உழவர் சந்தை திட்டம். 1999 -ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி நேரு…
Read more: வலங்கைமானில் பல ஆண்டாக மூடப்பட்ட உழவர் சந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
- மது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு
மது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு திருநங்கைக்கு தலையில் வெட்டு.. ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு… திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னையா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹாரூன் பாஷா. இவர் கோவை உக்கடத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு ஹாரூன் பாஷா தனது நண்பன் காளிதாஸ் என்பவருடன் மது போதையில் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அங்கு வந்த ஹம்சா என்ற திருநங்கையும் மது போதையில் ஹாரூன் பாஷா உடன்…
Read more: மது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு
- இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்
இராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு, மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், நீதிமன்றங்களில் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் படியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.மேலும், இக்கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள்…
Read more: இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்
- தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லா மாவட்டமாக உருவாக்க அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இரவு, பகல் பாராமல் தீவிர ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள்,…
Read more: தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்
- நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு
கோவை நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு… கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற முதியோர்கள் வசிக்கும் குடியிருப்பின் பயன்பாட்டிற்காக விதிமீறல் செய்து முறைகேடாக எடுத்து செல்வதாகவும், இது குறித்து குடியிருப்பு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் உண்மை நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தர வேண்டி ஆட்சியரிடம் புதுக்காட்டு வாய்க்கால் நீர் பாசன விவசாயிகள் நல சங்கத்தினர் மனு அளித்தனர். இது குறித்து பேசிய…
Read more: நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல்-2024 முடிவுற்ற நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்து அடுக்கு பாதுகாப்பு பணியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.V கிரண் ஸ்ருதி ஆய்வு செய்து அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்திட்டார். மேலும் அங்கு பணியில் உள்ள காவலர்களிடம்…
Read more: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வு
- கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளை-விரைந்து கண்டுபிடிக்க கோரி விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு
கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு வழங்கினார்.. கோவை செல்வபுரம் அருள் கார்டனைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் சாந்தகுமார் அதே பகுதியில் தங்க நகை தொழில் செய்து வருகின்றனர்.. இருவரும் கோவையிலிருந்து விழுப்புரத்திற்கு தங்க நகைகளை எடுத்து சென்று அங்கு உள்ள நகை கடைகளுக்கு விற்பனை…
Read more: கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளை-விரைந்து கண்டுபிடிக்க கோரி விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு
- பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் நேற்று தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பயிற்சியாளர் நித்யானந்தம் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி பற்றிய அடிப்படை விதிகளை விளக்கினார். மேலும் பெண்களுக்கு மிகவும் அவசியமானது கராத்தே பயிற்சி என்று வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா.…
Read more: பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே
- அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர் மோர், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளரிப்பிஞ்சு, தண்ணீர்பழம், சர்பத், இளநீர், உள்ளிட்டவைகளை வழங்கினார். அருகில் தேனி நாடாளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி, நகர இணை செயலாளர் புலியம்மாள் பேரூராட்சி கவுன்சிலர் சுந்தர்ராஜன் வார்டு செயலாளர்கள் வெள்ளைகிருஷ்ணன் கேபிள்பாஸ்கரன், சுந்தர்…
Read more: அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை
திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை… மதுரை மாவட்டம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.இதனை தடுக்கும் விதமாக திருமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார். தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கப்பலூர் சுங்கசாவடி மற்றும் கூத்தையார் குண்டு,சிவரக்கோட்டை,குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் பேரிக்கார்ட் தடுப்பு அமைத்து அதில் அதிநவீன சோலார் லைட் பொருத்தி விபத்துகளை தடுக்கவும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்.இன்று திருமங்கலம் ரோந்து வாகன போலீசார் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில…
Read more: திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை
- கமுதி பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரியில் உணவுத் திருவிழா
கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் தங்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்தினார். கல்லூரி தாளாளர் அகமது யாசின், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலக பொறியாளர் ரமாபிரபா உள்ளிட்டோர் உணவுகளை பார்வையிட்டு ருசித்து மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
- ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும்- தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்
ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் சிறுவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சிக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குப்பைகளை கொட்டி தீ வைத்து எரித்து வருவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை குப்பை எரிக்கப்படும் இடம் அரிகிலேயே மக்கும் குப்பை மக்காத குப்பை இடம் செயல்பட்டு வருகிறது அங்கு அதனை பயன்படுத்தாமல் குப்பைகளை எரித்து வருகின்றது…
Read more: ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும்- தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்
- கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது.இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, கீழக்கரை 500 ப்ளாட் தெரு மற்றும் அதனருகில் சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுவதாக கீழக்கரை காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் மேற்படி இடத்திற்கு சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த முகம்மது நசுருதீன் மற்றும் அகமது அசாருதீன் ஆகிய சகோதரர்களை விசாரித்து அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் அவர்களின் வீட்டிலிருந்து 31…
Read more: கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது
- மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பிரிவில் நகரி செல்லும் சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு நீர்மோர், மற்றும் தண்ணீர்பழம், திராட்சை, கொய்யாப்பழம், வெள்ளைபிஞ்சு,…
Read more: மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மாவட்ட ஆட்சியர் :- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் ச.வளர்மதி இஆப. தமிழ் அறிஞர் டாக்டர் மு வரதராசனார் அவர்களின் 113 வது பிறந்த தினத்தை ஒட்டி ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் மு வரதராசனார் அவர்களின் திருவுருவ சிலை உடன்கட்டப்பட்டுள்ளகுவி மாட அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த அறிஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மாவட்ட ஆட்சித் தலைவர். செய்தி…
Read more: தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்
அதிமுக சார்பில் மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் பங்கேற்று திறந்து வைப்பு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக அஇஅதிமு கழகப் பொதுச் செயலாளர்சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க தமிழகத்தில் கடும் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் பொருட்டு, கழகத்தின் சார்பில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை உடனடியாக அமைத்து, மக்களின் தாகம் தணித்திட கழக பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக…
Read more: அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்
- காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கோடை வெயிலை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.
கோடை வெயிலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைகினங்க காஞ்சிபுரம் பேருந்து நிலையம் பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி சோமசுந்தரம் ஏற்பாட்டில் கழக மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வளர்மதி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து இளநீர், தர்பூசணி, மோர்,…
Read more: காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கோடை வெயிலை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ் . கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு அவர்கள் தலைமையில் (25.04.2024) அன்று நடைபெற்றது. உடன் நலப்பணிகள் இணை இயக்குநர் மரு.தர்மர், அரசு மருத்துவக்கல்லுாரி முதல்வர் மரு.பூவதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ஜி.ரமேஷ்குமார், ஓசூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு. பிரபாகரன் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளனர்.
- மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம்
செய்தியாளர் கே பாலமுருகன் மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய ஏரி நடு ஏரி தற்போது ஊராட்சி சார்பில் அந்த ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டு வருகிறது அந்த ஏரியை அருகில் இருக்கும் பிரபல தொழிலதிபுரம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கவுன்சிலர் மாண எம் எஸ் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான கடையின் பின்புறமாக உள்ள இடத்தில் ஏரியின் மண்ணை உயரமாக கொட்டி…
Read more: மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம்
- தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.
வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்ட்டி பேரூராட்சியில் 8.வது வார்டு அதிமுக செயலாளராக திருப்பதி என்பவர் செயலாற்றி வருகின்றார். மேலும் முன்னாள் பேரூர் அதிமுக கவுன்சிலரான இவர் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40. பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி நேற்று காலை வாடிப்பட்டிலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டார் அப்போது முன்னாள் அமைச்சரும் எதிர் கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி உதயகுமார் நடை பயணம் மமேற்கொண்ட. தொண்டருக்கு ஆசி…
Read more: தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.
- அவிநாசி பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு
தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 அவிநாசி பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு.. திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கவுண்டன் பாளையம் வெட்டுகாடு தோட்டம் அருகில் உள்ள பிஏபி வாய்க்கால் மதகு அருகில் பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு.. இந்தப் பிரேதம் திருப்பூர் பெரிய கடை வீதி மஞ்சு டெக்ஸ்டைல்ஸ் என்ற பையில்…
Read more: அவிநாசி பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு
- வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி
வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி. வாடிப்பட்டி வாடிப்பட்டியில் கிராமபுற வேளாண் திட்டத்தின் கீழ்மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் சேது பாஸ்கரா வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் நான்காம் ஆண்டு படிக்கும். மாணவிகள் வாடிப்பட்டி அருகே மண்புழு உரம் தயாரிக்கும் எஸ். எஸ் மண்புழு உரத் தொழிற்சாலைக்கு சென்ற அங்கு மண்புழு உரம், வளப்படுத்தப்பட்ட மண்புழு உரம், சூப்பர் கலவை, தொழு உரம், ஆட்டு எர,…
Read more: வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி
- வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு
வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு. வாடிப்பட்டி வாடிப்பட்டியில் அதிமுக ஒன்றிய மற்றும் பேரூர் சார்பில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி ஆணைங்கிணங்க கோடைகால வெயில் தாக்கத்தினால் ஏற்படும் பொதுமக்கள் தாகம் தணிக்க. பேரூந்து நிலையம் முன்பு மற்றும் சந்தை கேட் எதிரே உள்ளிட்ட இடங்களில் நீர், மோர் பந்தலை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர்…
Read more: வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு
- வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன்- பிடாரி அம்மன் ஆலய தேர் திருவிழா
வலங்கைமான்கீழத்தெரு பொன்னியம்மன் என்கிற பிடாரி அம்மன்ஆலயதேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத்தெருவில் பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இவ்வாண்டு கடந்த 16-ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்த்தியுடன்தொடங்கி, தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. விழாவில் நேற்று முன்தினம் (23-ம் தேதி) பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில்…
Read more: வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன்- பிடாரி அம்மன் ஆலய தேர் திருவிழா
- பிறந்த நாள் விழா-வாழ்த்து
வாழ்த்து” வழக்கறிஞர் பிரியதர்ஷினி உடைய மகள் குழந்தை நட்சத்திரம் லியானாவிற்கு பிறந்த நாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் அவர்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- பாராளுமன்ற பொதுத்தேர்தல்-கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை
கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு,அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி ஆஷா அஜித், தகவல். சென்னை முதன்மைச் செயலாளர் / தொழிலாளர் ஆணையர் அவர்களின்…
Read more: பாராளுமன்ற பொதுத்தேர்தல்-கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை
- வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு, முக்கனிகள் வழங்கி அசத்தினர். திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறுவதை ஒட்டி முக்கனிகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடந்த முகாம் நிறைவடைந்தது. இதை ஒட்டி பணியை சிறப்பாக மேற்கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், வலங்கைமான் ஒன்றியம் தென்குவளை வேலி…
Read more: வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
- பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் நீர்மோர்,சர்பத், தர்பூசணி பழம் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் பொழுது தேனி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் முருக்கோடை ராமர், பெரியகுளம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்னபிரகாஷ், தேனி நகர் கழகச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர் ராஜகுரு, மாவட்ட இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட விவசாய அணி…
Read more: பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்
- கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது கிருஷ்ணகிரி அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க பொதுமக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தனித்துக்கொள்ள தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்க வலியுறுத்தினார். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி நகராட்சி, புதிய பேருந்து நிலையம் அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி நகர செயலாளர் கேசவன் தலைமையில் கழகத் துணைப் பொதுச் செயலாளரும் வேப்பனஹள்ளி…
Read more: கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா
சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனி ஊராட்சிக்கு உட்பட்ட மாவட்ட எல்லை பகுதியில் அமைந்திருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் பைப்பில் நீர்வரத்து தினசரி வந்து கொண்டிருந்தது, தற்போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் அலுவலர்கள் தண்ணிர் வீணாவதாக முழுவதுமாக அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் நாள்தோறும் குடிதண்ணீராக, துணிதுவைக்க, குழிக்க இதைத்தான் பயன்படுத்தி வருகிறோம், அதனால் கொஞ்சமாக…
Read more: கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா
- பொள்ளாச்சி உடுமலை சாலையில் போக்குவரத்து மாற்றம்
திருப்பூர் பல்லடம் நால்ரோடு சிக்னல் முன்பு பொள்ளாச்சி உடுமலை சாலையில் நெடுஞ்சாலை துறையால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது
- பெரம்பலூரில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்
பெரம்பலூரில் அ தி மு க கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோடைகால நீர், மோர் பந்தலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் இளம்பை.இரா. தமிழ்செல்வன் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வரகூர். அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் சிதம்பரம் நாடாளுமன்ற வேட்பாளர் சந்திரகாசன், முன்னாள்…
Read more: பெரம்பலூரில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்
- கோடை வெயிலின் வெப்பத் தாக்க தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நமது ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலையின் அளவு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில் முதலிடமும் வகிக்கிறது. மனித உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். சுற்றுப்புற சூழல் வெப்பநிலை அதிகமாகும் போது அதிகமான வியர்வை வழியாக உப்பு மற்றும் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறுகிறது.• கோடை வெப்ப தாக்கத்தினால் அதிக தாகம், தலைசுற்றல், கடுமையான தலைவலி, தசைப் பிடிப்பு, உடல் சோர்வடைதல்,…
Read more: கோடை வெயிலின் வெப்பத் தாக்க தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
- காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல்
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாண்டி அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் அரசு பொதுமக்கள் தேவையின்றி ஒரு மணியிலிருந்து நான்கு மணி வரை வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள்…
Read more: காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல்
- திருவாரூரில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் திறந்து வைத்தார்
திருவாரூரில் அதிமுக தலைமைக் கழக அறிவிப்பின்படி பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அதிமுக தலைமை கழக அறிவிப்பின்படி, வெயில் வாட்டி வதைத்து வரும் வேளையில் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதமாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் பனகல் சாலையில் அமைந்துள்ள நகர கழக அலுவலகத்தில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்காக இன்றைய தினம்…
Read more: திருவாரூரில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் திறந்து வைத்தார்
- தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி நிறுவன ஊழியர்களின் ரகசிய தகவலின் பெயரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ்யின் உத்தரவின் பேரில் காரைக்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் R. பிரகாஷ் மேற்பார்வையில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளவரசு தலைமையில் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு சார்பு…
Read more: தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது
- கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிகழ்விற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் 3,000 தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை அரியலூர் Automatically செ.ஜெயராமன் தலைமையில் மாவட்டச்செயலாளர் .ஆ.சண்முகம்அவர்களுடன் இந்நிகழ்வில்மாவட்ட துணைத் தலைவர்.மு.சந்திரசேகர்மாவட்ட பொருளாளர்.இ.எழில் மேனாள் தலைவர்அ.நல்லப்பன் துணைப் புரவலர் சகானா _து.காமராஜ்நியமன துணைத் தலைவர்.க.செல்வராஜ் வழக்கறிஞர்ஆயுள் உறுப்பினர்சக்கரவர்த்தி உள்ளிட்ட ரெட் கிராஸ் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து…
Read more: கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா
- சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் முதியோர் பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஇஅதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நீர் மோர் பந்தலை திறக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சிவகங்கை அஇஅதிமுக நகர்…
Read more: சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்
- பெரம்பலூரில் அதிமுக சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல்
கோடைகாலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழகமெங்கும் அஇஅதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்கள் அமைத்திட வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் அக்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இதன்படி ஏப்ரல் – 25 ஆம் தேதியான இன்று காலை – 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் ,பெரம்பலூர் நகர அஇஅதிமுக சார்பாக ,பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர், மோர் பந்தல்…
Read more: பெரம்பலூரில் அதிமுக சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல்
- காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு!
காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100 சதவீதம் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் விதமாக, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மிளகு சாகுபடி கருத்தரங்கு ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் தமிழ்நாட்டில் 4 இடங்களில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டையில் நடைபெறும் கருத்தரங்கை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் சிறப்பு…
Read more: காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு!
- ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில்- கரும்பு பயிர்கள் கருகி நாசம்!
ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில் அடிப்பதால் கரும்பு பயிர்கள் கருகி நாசம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது. வரலாறு காணாத அளவிற்கு வெயில் அடிப்பதால் கால்நடைகள் மிகவும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றன. கிடை மாடுகள் படும் பாடு சொல்லி மாளாது. ஆயிரக் கணக்கில் அவை மேய்ந்து வருவதால் உரிய தண்ணீர் இல்லாத நிலையில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே…
Read more: ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில்- கரும்பு பயிர்கள் கருகி நாசம்!
- சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி
டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும் கைது செய்ய வாய்ப்பு. சிவகங்கையில் எச். ராஜா பேட்டி. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மஹாலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச் ராஜா, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினை கவர்வதற்காக, பெரும்பான்மையினரை வஞ்சிக்கும் விதமாக, பிரித்தாளும் தனது தேர்தல் சித்து விளையாட்டை…
Read more: சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் காதர் மொகிதீன் சந்திப்பு
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் சந்திப்பு……. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிறகு ஒதுக்கீடு செய்தமைக்காகவும், நமது வேட்பாளர் நவாஸ்கனி அவர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ததோடு, 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி கட்சியினரை அரவணைத்து, வெற்றிக்கு மிகச் சிறப்பாக வியூகம் அமைத்து அயராது உழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
Read more: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் காதர் மொகிதீன் சந்திப்பு
- மலைவாழ் பழங்குடியினப் பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சைக்காக இரத்த தானம் வழங்கிய மருந்தாளுநர்
மலைவாழ் பழங்குடியினப் பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சைக்காக இரத்த தானம் வழங்கிய மருந்தாளுநர் தேனி தேனி மாவட்டம் தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடும்பாறை அருகே உள்ள தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் மகப்பேறு சிசைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு இரத்தம் தேவைப்பட்டது. ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் தன்னார்வலர்களுடன் இரத்தம் வழங்கினார்.இதில் மருந்தாளுநர் ரஞ்சித்குமார் 44 வது முறையாக குருதிக்கொடை வழங்கினார்.மூன்று மாதத்திற்கு ஒரு முறை குருதியைக்…
Read more: மலைவாழ் பழங்குடியினப் பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சைக்காக இரத்த தானம் வழங்கிய மருந்தாளுநர்
- கள்ளக்காதலன் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஆனந்தூர் வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னமுத்து – சீதா தம்பதியினர். நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும், மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். மாந்தோப்பில் காவல் பணி செய்து வரும் இவர்கள், குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சீதா கீழ்செங்கம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது சித்தப்பா…
Read more: கள்ளக்காதலன் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் படுகாயம்
- போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குவியும் குப்பைகள் – குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிறுதோரும் கூடும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தையாக விளங்கி வருகிறது. தக்காளி முதல் தங்கம் வரை விற்கப்படும் இந்த வாரச்சந்தை, பேருந்து நிலையம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களால் சந்தை சுருங்கி காணப்படுகிறது. இந்நிலையில் சந்தை வளாகத்திற்குள் வணிக கடைக்காரர்கள் குப்பைகளை கொட்டி விட்டு செல்வதால் குப்பை கூடரமாக காட்சியளிக்கிறது. போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்த வாரச்சந்தையை தூய்மைப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலகமோ, ஊராட்சி நிர்வாகமோ எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்நிலையில் வாரச்சந்தைக்குள்…
Read more: போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குவியும் குப்பைகள் – குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு
- மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்க தண்ணீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்வது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் அதிமுக மணப்பாறை நகர கழகம் சார்பில் மணப்பாறை பெரியார் சிலை அருகே அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…
Read more: மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
- கபிஸ்தலத்தில் அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மேல கபிஸ்தலம் , கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தனசாமி துவக்கி வைத்தார்….. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பாலக்கரையில் மேல கபிஸ்தலம் ஊராட்சி ,கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் விழாவினை தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி பழங்கள் வழங்கினார். இதில்…
Read more: கபிஸ்தலத்தில் அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்
- தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
இலக்கியம்பட்டியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் இலக்கியம்பட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கோவிந்தசாமி எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, இளநீர் மற்றும் நீர் மோர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை. ரவி,…
Read more: தர்மபுரி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- வெள்ளோடு ஊராட்சி, நரசிங்கபுரம் கிராமத்தில் பிரண்ட்ஸ் ஆப் பார்மர் டிரஸ்ட் மூலம் இயற்கை விவசாய பயிற்சி
வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் அருகே இயற்கை விவசாய பயிற்சி நடைபெற்றது. திண்டுக்கல் வட்டாரம், வெள்ளோடு ஊராட்சி, நரசிங்கபுரம் கிராமத்தில் பிரண்ட்ஸ் ஆப் பார்மர் டிரஸ்ட் மூலம் இலவச பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு சுரேஷ் மற்றும் கவுசல்யா கலந்து கொண்டனர். மேலும் இயற்கை விவசாய ஆலோசகர் குமார் கலந்து கொண்டு, தென்னை மரத்தை தாக்கும் காண்ட மிருக வண்டு, சிவப்பு கூன் வண்டு கட்டுப்படுத்தும் முறை பற்றி எடுத்து கூறினார். மேலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான இயற்கை…
Read more: வெள்ளோடு ஊராட்சி, நரசிங்கபுரம் கிராமத்தில் பிரண்ட்ஸ் ஆப் பார்மர் டிரஸ்ட் மூலம் இயற்கை விவசாய பயிற்சி
- கடந்த 45 நாட்களாக சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும்-ஜவாஹிருல்லா எம். எல்.ஏ
மக்களை பிளவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடியை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்து தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில்…
Read more: கடந்த 45 நாட்களாக சட்டமன்ற அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை அகற்ற வேண்டும்-ஜவாஹிருல்லா எம். எல்.ஏ
- கோடை வெயில்-திருப்பூர் டாஸ்மார்க் கடைகளில் பீர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் 226 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன இந்த கடைகளில் தினமும் சராசரியாக 2 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் தீபாவளி பொங்கல் ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நேரத்தில் இந்நிலையில் தமிழக முழுவதும் கடந்த மாதம் முதல் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் பீர் விற்பனை அதிகரித்துள்ளது அதாவது பிராந்தி போன்ற மதுவைகளை காட்டிலும் பீர் வகைகளை மது பிரியர்கள் அதிக…
Read more: கோடை வெயில்-திருப்பூர் டாஸ்மார்க் கடைகளில் பீர் விற்பனை 30 சதவீதம் அதிகரிப்பு
- கூடலூர் சாய்பாபா திருக் கோவிலில் சம்வத் ஸ்ராபிஷேகம் விழா
கூடலூர் சாய்பாபா திருக் கோவிலில் சம்வத் ஸ்ராபிஷேகம் விழா தேனி மாவட்டம் கூடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் சம்வத்ஸ்ராபிஷேகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் கோவில் வளாகத்தில் உள்ள கும்பங்களில் புனித நீர் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன இதனை தொடர்ந்து பூ ஜிக்கப்பட்ட கும்பங்க ள் நகரின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் கோவில் கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபா ராதனைகள்…
Read more: கூடலூர் சாய்பாபா திருக் கோவிலில் சம்வத் ஸ்ராபிஷேகம் விழா
- ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை அணைக்கட்டு ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜா (44) இவரது மகள் அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்த இவர் பொதுத்தேர்வு எழுதி முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள படுக்கை அறையில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல்…
Read more: ஒடுகத்தூர் அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை
- புழல் சாலை சந்திப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 24 வது வார்டு அண்ணா நினைவு நகரில் தனியாருக்கு சொந்தமான வண்ண மீன் வளர்ப்பு பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில் நீர் தேக்க தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி வண்ண மீன்களை வளர்ப்பது வழக்கம் . அந்தப் பண்ணையில் அங்கு ஏற்கனவே நான்கு ஆழ்துளை கிணறுகள் இருப்பதாக கூறப்படுகிறது . நேற்று இரவு 11 மணி அளவில் அவ்விடத்தில் மேலும் ஒரு ஆழ்துளை கிணறு…
Read more: புழல் சாலை சந்திப்பில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல்
- மதுரை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியரின் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம்
அரசு மருத்துவமனை முதல்வர் பாராட்டு மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் ரேடியாலஜி துறை உதவி பேராசிரியர் செந்தில்குமாரது கண்டுபிடிப்பான, கதிரியக்க சிகிச்சையை துல்லியமாக அளிக்க உதவும் “புளோரசன்ஸ் மார்க்கருக்கு” இந்திய அரசு காப்புரிமை வழங்கி சிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, உதவி பேராசிரியரை, அரசு மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் பாராட்டினார்.’ இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், “புற்றுநோயை குணப்ப டுத்துவதில் கதிரியக்க சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு, கதிரியக்க சிகிச்சையானது, தொடர்ந்து 30 முதல்…
Read more: மதுரை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியரின் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம்
- விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு குட்டையின் அவல நிலை!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா பழைய விராலிப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு குட்டையின் அவல நிலை! புதர்கள் மண்டி, கசிவு நீர் மதகு பழுதடைந்து உள்ளது. இதனால் குட்டைக்கு வரும் தண்ணீர் சேமிக்க முடியாமல் வெளியேறி விடுகிறது! குட்டையை ஆழப்படுத்தி மதகை பழுது நீக்கி கொடுத்து கரை சுற்றிலும் மரக்கன்றுகள் வைத்து பராமரிக்க வேண்டும் என்பதுஇந்தப் பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.அரசு தலையிடுமா?
- பெரியகுளம் அமைந்துள்ள A G சபை புதிய ஜெப ஆலயம் திறப்பு விழா
பெரியகுளம் அமைந்துள்ள A Gசபை புதிய ஜெப ஆலயம் திறப்பு விழா வருகை தந்து இந்த புதிய ஜெப ஆலயம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஸ்டீப் ஜெயராஜ் தலைவர் மற்றும் பெரியகுளம் சபை போதகர் சாமுவேல் சபையின் ஊழியக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஜெப ஆலய திறப்பு விழாவுக்கு வருகை தந்துள்ளார் தேனி மாவட்டம் AG சபை போதகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
- மதுரை ஐகோர்ட்டு அதிரடிஉத்தரவு- படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும்
மதுரை ஐகோர்ட்டு அதிரடிஉத்தரவு படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும்….. படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானி யங்கி கதவு அமைக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அறிவுறுத்தினர். தமிழகத்தில் பள்ளி நேரத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் இந்த விவகாரம் குறித்து மதுரை ஐகோர்ட்டு தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இது…
Read more: மதுரை ஐகோர்ட்டு அதிரடிஉத்தரவு- படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பஸ்களில் தானியங்கி கதவுகள் அமைக்க வேண்டும்
- பாபநாசம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்.. 1000-ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகும் அபாயம் உள்ளதால், வேதனையில் விவசாயிகள்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அண்டக்குடி, தியாகசமுத்திரம், அலவந்திபுரம், புள்ளபூதங்குடி, கூனஞ்சேரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் மும்முனை மின்சாரத்தை நம்பி சுமார் 1000-ஏக்கரில் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் மும்முனை மின்சாரம் சரிவர வழங்காததால் பயிரிடப்பட்டு…
Read more: பாபநாசம் அருகே மும்முனை மின்சாரம் வழங்காததால் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்
- காங்கேயம் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டிக்குள் வேல் வைத்து பூஜை
தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலை புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் உள்ளது. மற்ற எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பு அம்சங்கள் சிவன்மலை முருகன் கோவில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் ஏதாவது ஒரு பொருள் வைத்து சிறப்பு பூஜை செய்து வழக்கம் பின்னர் அந்த பொருள் கோவில் மூலவர் அறைக்கு முன்பாக கற்தூணில் உள்ள கண்ணாடி பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைப்பார்கள். இந்தக் கண்ணாடி…
Read more: காங்கேயம் சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டிக்குள் வேல் வைத்து பூஜை
- கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
“உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன்… “தமிழ்நாடு அரசு நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடர்தான் எனக்கு கேண்டிடேட்ஸ் தொடருக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை வழங்கியது….” “சென்னை கிராண்ட் மாஸ்டர் தொடரை நடத்திய தமிழ்நாடு அரசுக்கு குகேஷ் நன்றி… கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்று தாயகம் திரும்பிய தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய வீரர் குகேஷுக்கு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது…. இந்திய…
Read more: கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- பாபநாசம் அருகே மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்
பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகள். அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்பு.. அச்சுறுத்தும் குரங்குகளை, வனத்துறையினர் பிடித்து செல்ல குடியிருப்பு வாசிகள் கோரிக்கை.. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை அருகே மேலவழுத்தூர் ஹாஜியார் தெரு சுற்றியுள்ள, குடியிருப்பு பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளின் உள்ளே ஏராளமான குரங்குகள் புகுந்து சமைத்து வைத்த பொருட்களை தின்று…
Read more: பாபநாசம் அருகே மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் குரங்குகள்
- தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பாஸ்கரன் செய்தியாளர் கம்பம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம். தேனி மாவட்டம் கம்பம் நகரில் 33 வார்டுகள் உள்ளன. நாளுக்கு நாள் மக்கள் பெருக்கத்தை அடுத்து நகரம் விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகின்றன. இதன்படி நகரின் இதய பகுதியான வேலப்பர் கோவில் தெருவில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளால் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன. இது குறித்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவனுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதன்…
Read more: தேனி மாவட்டம் கம்பம் நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- மதுரை சித்திரைத் திருவிழா- விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி
மதுரை சித்திரைத் திருவிழா விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி. மதுரை ஆழ்வார்புரம் மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்தில் நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய நடந்த இந்நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் உள்ளிட்ட அவதாரங் களில் அழகர் காட்சி தந்தார். அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். (வியாழக்கிழமை) காலை மோகினி அவதாரத்தில் கள்ளழகர் வீதி உலா வந்தார். பகல்…
Read more: மதுரை சித்திரைத் திருவிழா- விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி
- பூம்புகாரில் புனிதநீர் எடுக்கும் வரலாற்று சிறப்பு நிகழ்வு
சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகி அம்மன் பிறந்த இடமான பூம்புகாரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை கிளை நிர்வாகிகளும் வரலாற்று ஆர்வலர் குழுவினர்களும் சித்திரை முழுநிலா நாளில் 23-04-2024 அன்று மங்கலதேவி கண்ணகி அபிஷேகத்திற்கு பூம்புகார் காவிரிபூம்பட்டினத்தில் கண்ணகிக்கு பிறந்தவீட்டு சீதனமாக காவிரியில் புனிதநீர் எடுக்கும் வரலாற்று சிறப்பு நிகழ்வு மற்றும் கம்பம் நகரில் மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை நிர்வாகிகள் வசம் புனிதநீர் கொடுத்த நிகழ்வுகளும் நிகழ்ச்சியில் தமிழக கேரள பகுதிகளை அரசாண்ட மங்கலதேவி கண்ணகி கோவிலை 800…
Read more: பூம்புகாரில் புனிதநீர் எடுக்கும் வரலாற்று சிறப்பு நிகழ்வு
- பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த மாணவன்-உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த +2 மாணவனை ஒரு மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள். பாலக்கோடுதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மூங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நஞ்சுண்டன் மகன் மதன் சக்கரவர்த்தி 17 வயது இவர் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலக்கோட்டுக்குச் சென்று மீண்டும் இரவு 8மணி அளவில் சொந்த கிராமமான மூங்கப்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து…
Read more: பாலக்கோடு அருகே இருசக்கர வாகனத்துடன் கிணற்றில் விழுந்த மாணவன்-உயிருடன் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள்
- பாலக்கோடு-குடிப்பழக்கத்தை கைவிட கூறியதால் விரத்தியில் விவசாயி தற்கொலை-போலீசார் விசாரணை
பாலக்கோடு போல பகுத்தனஅள்ளி கிராமத்தில் குடிப்பழக்கத்தை கைவிட கூறியதால் விரத்தியில் விவசாயி தற்கொலை. பாலக்கோடு-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த போல பகுத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி குப்பன் 45 வயது இவரது மனைவி கற்பகம் இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள். 14 வயதில் ஒரு மகன் உள்ளனர்.குப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் மது குடித்து வந்தார். இதனால் வயிற்றில் புண் ஏற்பட்டு அல்சர் பிரச்சினையால் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி கற்பகம் இனி மது…
Read more: பாலக்கோடு-குடிப்பழக்கத்தை கைவிட கூறியதால் விரத்தியில் விவசாயி தற்கொலை-போலீசார் விசாரணை
- கீழக்கரையில் மது பழக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பிரச்சாரம்
கீழக்கரை. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட புது கிழக்கு தெரு பகுதியில் பொதுமக்கள் பெரியவர்கள் இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பகுதியின் தற்காலிக தலைவர் சீனி முகமது அவர்கள் தலைமையிலும், செயலாளர்பீர்பகுருதீன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் நகர் பகுதியில் மதுப்பழக்கத்தையும் மதுவையும் முற்றிலும் ஒழிக்கும் தெருமுனைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நகர் பகுதியில் வாழும் இளைஞர்கள் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையான அனைவரும் அந்த பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு தங்கள் குடும்ப நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் வாழ முன்வர…
Read more: கீழக்கரையில் மது பழக்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பிரச்சாரம்
- தென்காசி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோயை தடுத்திடும் விதமாக முகாம்
தென்காசி மாவட்டத்தில் பறவைக்காய்ச்சல் நோயை தடுத்திடும் விதமாக மேக்கரையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடி மற்றும் பறவைக்காய்ச்சல் நோய் தடுப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- பாபநாசம் அருகே மும்முனை மின்சார கம்பத்தை முறித்து கொண்டு கடையின் உள்ளே புகுந்த டேங்கர் லாரி
பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே மும்முனை மின்சார கம்பத்தை முறித்து கொண்டு கடையின் உள்ளே புகுந்த டேங்கர் லாரி.. ஓட்டுநர் உள்பட லாரியில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே குறிச்சி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (41) என்பவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. டேங்கர் லாரியை கும்பகோணம் அருகே பூந்தோட்டம்…
Read more: பாபநாசம் அருகே மும்முனை மின்சார கம்பத்தை முறித்து கொண்டு கடையின் உள்ளே புகுந்த டேங்கர் லாரி
- தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது மக்களுக்கு இணையதளவசதி ஏற்பாடு
தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது மக்களுக்கு இணையதளவசதி ஏற்பாடு தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொதுமக்கள் தொற்றுநோய் குறித்த விவரங்களை தெரிவிப்பதற்காக இணையதளவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவிப்பு. தென்காசி மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் காய்ச்சல் இருமல்/ சளி / வயிற்றுப்போக்கு வாந்திபேதி தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை, வெறிநாய்கடி, மனிதர்கள்/ பறவைகளுக்கு ஏற்படும் அசாதாரணமாக உயிரிழப்புகள்…
Read more: தென்காசி மாவட்டத்தில் தொற்று நோய் பரவலைத் தடுக்க பொது மக்களுக்கு இணையதளவசதி ஏற்பாடு
- துர்நாற்றம் வீசுகின்றது – திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார்
ஜெ.ஜெயக்குமார் திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டம் 9942512340 திருச்செங்கோடு ஒன்றியம், சிறுமொளசி ஊராட்சி,அத்திப்பாளையம் ஊர் எல்லையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பிளாஸ்டிக் உருக்கும் தொழிற்சாலையில் ஏதோ ஒரு துர்நாற்றம் வீசுகின்றது என்று ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் திருச்செங்கோடு ஒன்றிய துணை பெருந்தலைவர் ராஜபாண்டி ராஜவேலுவிடம் புகார் கொடுத்தனர் உடனடியாக அவர் இரவு நேரத்தில் பிளாஸ்டிக் ஆலையை ஆய்வு செய்தார். பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பாதேவி தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரி கனவு என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி உயர்கல்வி கல்வி படிப்பை தேர்வு செய்ய ஏதுவாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு…
Read more: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது
- மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர்ஏப்ரல்.25 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று மாதவரம் தொகுதியில் கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் பாண்டியராஜன் உத்தரவில் புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவன் தலைமையில் சுமார் 200 க்கு மேற்பட்ட போலீஸார்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . இந்நிலையில், மாதவரம் மந்தைவெளி பகுதியில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி…
Read more: மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு
- கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் , கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள…
Read more: கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்
- கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.. கோவையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று நடைபெற்ற வாக்கு பதிவில்,காலை முதலே மக்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களிக்க துவங்கினர்…..,இந்நிலையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி ,கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்கு சட்டமன்ற தொகுதி சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை…
Read more: கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்..
- சின்னஊர்சேரிகிராமத்தில்ஸ்ரீ சக்திவிநாயகர்,ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமிஸ்ரீ பெருமாள்ஸ்ரீ உறங்காபுலிஆகிய தெய்வங்களுக்கு உற்சவ விழா
சின்னஊர்சேரிகிராமத்தில்ஸ்ரீ சக்திவிநாயகர்,ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமிஸ்ரீ பெருமாள்ஸ்ரீ உறங்காபுலிஆகிய தெய்வங்களுக்கு உற்சவ விழா அலங்காநல்லூர்.ஏப்.25- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்னஊர்சேரி கிராமத்தில்ஸ்ரீ சக்தி விநாயகர்ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமிஸ்ரீ பெருமாள் ஸ்ரீ உறங்காபுலிஆகிய தெய்வங்களுக்கு சித்திரை மாத உற்சவ விழா கடந்த 11ஆம் தேதி வியாழக்கிழமை முகூர்த்த கால் ஊன்றும் பணியுடன் தொடங்கியது அதனை தொடர்ந்து காப்பு கட்டுதல் நடைபெற்றன 16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முளைப்பாரி போடுதல் பெண்கள் காப்பு கட்டுதல் அதனை தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகருக்கு…
Read more: சின்னஊர்சேரிகிராமத்தில்ஸ்ரீ சக்திவிநாயகர்,ஸ்ரீ ஜோதிசித்தி கருப்புசாமிஸ்ரீ பெருமாள்ஸ்ரீ உறங்காபுலிஆகிய தெய்வங்களுக்கு உற்சவ விழா
- நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை :- ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச.வளர்மதி இஆப தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்டத்தில் நியாய விலை கடைகளின் செயல்பாடுகளை குறித்து அதன் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனைகளும் அறிவுரைகளும் கூட்டத்தில் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி கூட்டுறவுத் துறை இணை பதிவாளர் சிவகுமார் மற்றும் துறை…
Read more: நியாய விலை கடை செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை
- வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமானச. வளர்மதி இஆப நேற்று வாக்கு என்னும் மையமான வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 07.அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரக்கோணம் சோளிங்கர் ராணிப்பேட்டை ஆற்காடு காட்பாடி திருத்தணி ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு பதிவேடுகளில்…
Read more: வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3அடுக்கு பாதுகாப்புடன் இருப்பதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
- திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு
வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு. திண்டுக்கல்லில் நாளுக்கு நாள் வெயில் உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உஷ்ணம் தாளாமல் பெரும் அவதிபடுகின்றனர். தாகத்தை தீர்ப்பதற்க்காக இங்கும், அங்கும் அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத…
Read more: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு
- நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளித்தது
திருப்பூர் மாவட்டம்,24-04-2024, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட கேத்தனூரில் சித்ரா பௌர்ணமியின் மறு தினமான இன்று இயற்கையின் வடிவாகிய நிலவு சிவந்த நிறத்தில் காட்சியளித்தது இதை ஏராளமான பொதுமக்கள் ஆச்சரியத்துடன் சிறிது நேரம் வேடிக்கை பார்த்தனர் பல்லடம் செய்தியாளர் கே தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20
- மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்ததற்கு மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சி கீழத்தெரு பகுதியில் சுமார் 75 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்த மின்னழுத்தமே நிலவி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது. குறைந்த…
Read more: மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
- தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா
தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா… தாராபுரம், ஏப்ரல் 25- திருப்பூர் மாவட்ட தாராபுரம் தெக்காலூர் பகுதியில் பிரபலமான மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் விளக்கு ஏற்றி வைத்து ஒளி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி செயலாளர் சுலைமான் கூறுகையில், மாணவியர் மாணவியர் தங்கள் பயின்ற கல்வியை தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தி நல்ல வேலை வாய்ப்பை பெற்று தான் படித்த கல்லூரிக்கும்…
Read more: தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா
- திருவாரூருக்கு புதிய ரயில்கள்
திருவாரூருக்கு புதிய ரயில்கள்: 1) 2.5.24 முதல் வண்டி எண் 06877 தினமும் விழுப்புரத்தில் மாலை 6.25 க்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறை, பேரளம் பூந்தோட்டம் நன்னிலம் வழியாக இரவு 10:45 மணிக்கு திருவாரூர் வந்து சேரும். 2) 03-5-24 முதல் வண்டி எண் 06690 தினமும் காலை 5 10 மணிக்கு திருவாரூரில் புறப்பட்டு விழுப்புரம் 9. 15 மணிக்கு சென்றடையும்.இது பல்லவனுக்கு இணைப்பாக அமையக்கூடும். 3) 02-5-24 முதல் இரவு 8:25 மணிக்கு திருச்சியில்…
Read more: திருவாரூருக்கு புதிய ரயில்கள்
- மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சாமி திருக்கோவில் திருத்தேர் விழா
ஆத்தூர் கள்ளக்குறிச்சி ராசிபுரம் சின்னசேலம் தர்மபுரி,திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிற இறைய மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சாமி திருக்கோவில் திருத்தேர் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 14ஆம் தேதி சித்திரை 1-ஆம் நாள் அன்று சிறப்பு பூந்தேரோட்டம் அதனைத் தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருத்தேர்விழா நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த 21 ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவின் முக்கிய…
Read more: மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சாமி திருக்கோவில் திருத்தேர் விழா
- பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்
பிரபல யோகா குரு பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. கடந்த மாதம் ‘பதஞ்சலி’ நிறுவனம் மீது தவறான விளம்பரங்கள் வெளியிடுவதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பதஞ்சலி விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடக்கூடாது என்று எச்சரித்த சுப்ரீம் கோர்ட்டு, பதிலளிக்க கோரி அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து நோட்டீசுக்கு பதிலளிக்காததால், அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் பாபா ராம்தேவை நேரில் ஆஜராக…
Read more: பொதுமன்னிப்பு: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்
- தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வயநாடு தொகுதியில் கடந்த முறை 4.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இந்த முறை ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற இருக்கிறார். வயநாடு தொகுதியில் இருந்து பாசிசத்தை ஒழிக்க தீப்பொறி கிளம்பி இருக்கிறது. தோல்வி பயத்தில் அச்சத்தில் மோடி பிரதமர், தலைவர் என்ற தகுதியை மீறி தேசிய கட்சி என்பதை மீறி மிகவும் கீழ்த்தரமான…
Read more: தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் மோடி மீது நடவடிக்கை இருக்காது- செல்வ பெருந்தகை பேட்டி
- குமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் HAWK EYE வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு
குமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் HAWK EYE வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த HAWK EYE வாகனத்தில் மொத்தம் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு திசையும் நோக்கி இருக்கும் நான்கு கேமராக்கள் 100 மீட்டர் வரைக்கும் உள்ள பகுதியில் நடப்பவற்றை துல்லியமாக படம்பிடித்து பதிவு செய்யும் ஆற்றல் உடையது. மேலும் உள்ள ஒரு 360 டிகிரி கேமரா வாகனத்தின் உள்ளிருந்து இயக்கும் வகையில்…
Read more: குமரி மாவட்டத்தில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் HAWK EYE வாகனத்தின் சிறப்பு செயல்பாடுகளை ஆய்வு
- குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை, உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை, இல்லாத நிலையில், சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள கூட அனுமதி தரவில்லை. பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக்களுக்கானகழிப்பிடங்கள்,வழக்கறிஞர்களுக்கான ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து ஏப். 15 முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்…
Read more: குமாரபாளையத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு
தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன்-9524042072 தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு.பொதுமக்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் அவதி. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் செல்லும் சாலையோரம் உப்பனாற்றின் கரை பகுதியில் இரவு நேரங்களில் தனி நபர்கள் இறைச்சிக் கழிவுகளை மூட்டை மூட்டையாக கொட்டிச்செல்கின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கோடு ஏற்பட்டுள்ளது. இந்த துர்நாற்றத்தை கடந்தே பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம்,அரசு மருத்துவமனை,காவல் நிலையம் என அத்திவசிய தேவைகளுக்கு சென்று வரும்…
Read more: தரங்கம்பாடி உப்பனாற்றின் கரையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் சுகாதார சீர்கேடு
- ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராம்கோ தொழில் நிறுவனர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா 130 வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்னாரது திருவுருவப்படத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு ராம்கோ சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்
தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது…தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் பேட்டி….! தூத்துக்குடி வாகை குளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது. குறிப்பாக, ஒரு வாரத்தில் நான்கு மாவட்டங்களில் பல சம்பவங்கள் நடந்து இருப்பதை தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும் பார்த்து வேதனையாக இருக்கின்றது… போதை பொருள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக செயல்பட…
Read more: தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து கொண்டு இருப்பது கவலை அளிக்கின்றது-ஜி கே வாசன்