மேலூர் செய்தி; நிருபர் சம்பத்.
மேலூர் பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வண்ணாம்பாறைபட்டியில் நடைபெற்றது
. பாரத ஸ்டேட் வங்கி மதுரை துணை பொது மேலாளர் ஆனந்த் மற்றும் மண்டல மேலாளர் ஹரிணி ஆகியோர் தலைமை தாங்கினார்.
மதுரை மகளிர் திட்ட இயக்குனர் காளிதாஸ், மதுரை மகளிர் உதவி திட்ட இயக்குனர் மரியாமதேலம்மாள் ஆகியோர் மகளிர் சுய உதவி குழுவினருக்கு வங்கியின் பல்வேறு சலுகைகள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார்.வண்ணாம் பாறைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பூமாரி மகாராஜன், சக்தி சர்க்கரை ஆலை பொது மேலாளர் உத்தண்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள 26 மகளிர் சுய உதவி குழுவிற்கு 10 லட்சம் வீதம் ரூபாய் 2 கோடியே 50 லட்சம் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் வழங்கப்பட்டது. கறவை மாடு லோன் 16 பேருக்கு மொத்தம் 16 லட்சம் வழங்கப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 5 பேருக்கு 14 லட்சத்து 22,000 வழங்கப்பட்டது.
வேளாண் கருவிகள் வாங்குவதற்கு மூன்று நபர்களுக்கு 6 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டது.இதர திட்டத்தின் கீழ் 8 பேருக்கு 12 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மேலூர் வங்கி கிளை முதன்மை மேலாளர் சரவணன், மதுரை முதன்மை வங்கி மேலாளர் ராம் பிரசாத் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்திருந்தனர்
. நிகழ்ச்சியில் ஒத்தக்கடை வங்கி மேலாளர் மாரியப்பன், தெற்கு தெரு வங்கி மேலாளர் குணவதி, மேலூர் டவுன் கிளை வங்கி மேலாளர் வருண்குமார், பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள், மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ராதா, சண்முகப்பிரியா, லட்சுமி, இந்திரா, பாண்டீஸ்வரி, சுதா மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமிகள் நடன நாட்டிய கலை நிகழ்ச்சி, சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.