புவனகிரி மே 31

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஆர் வி பி மருத்துவமனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கம்யூனிட்டி கல்லூரி இணைந்து புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மருத்துவமனை தலைமை மருத்துவர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது

இந்த பேரணியை முன்னாள் ராணுவ வீரர் நெடுமாறன் கொடியசைத்து துவக்கி வைத்தார் மருத்துவர் சுனிதா கதிரவன் வரவேற்றார் கல்லூரி தாளாளர் சுதா கன்னியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் புரட்சியார் மருத்துவர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த பேரணியானது மருத்துவமனையில் துவங்கி புவனகிரி பேருந்து நிலையம் வழியாக கீரப்பாளையம் சென்று அங்கிருந்து மீண்டும் புவனகிரி கடைவீதி வழியாக வந்து மீண்டும் மருத்துவமனையில் முடிவுற்றது இதில் மருத்துவமனை பணியாளர்கள் கல்லூரி செவிலிய மாணவர்கள் கல்லூரி ஆசிரியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் மருத்துவர் மங்களேஸ்வரன் நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *