திண்டுக்கல்லில் விலங்குகள் நல வாரிய கண்காணிப்பு அலுவலர்கள் ஆய்வு.

திண்டுக்கல் விலங்குகள் நலவாரிய கண்காணிப்பு அலுவலர்கள் மருத்துவர்கள் சுரேஷ் கிறிஸ்டோபர், விஜயகுமார், சரவணகுமார் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் திண்டுக்கல் மாவட்ட சிறை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நாய்களுக்கான கருத்தடை செய்யும் இடத்தினை ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய உதவி செய்வதாகவும், நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய கால்நடை மருத்துவமனை மூலமாக கால்நடை மருத்துவர் ஒருவர் ஓர் ஆண்டு காலத்திற்கு இலவசமாக பணியாற்ற அனுப்பி வைப்பதாகவும் விலங்குகள் நல வாரிய கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *