மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி 72 வது ஆண்டு வைகாசி உற்சவ திருவிழா…

மதுரை வீரகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா, 15 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்” பிரமிக்க வைத்த பறவை காவடி , தேர் காவடி உள்ளிட்டவைகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் உள்ளது, மிகப்பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில். இந்த கோவிலின் 72 வது ஆண்டு வைகாசி உற்சவ விழா கொடியேற்றம் மே17 ம் தேதி நடைபெற்றது.

தனை தொடர்ந்து 24ம் தேதி காப்பும் கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் அலகு குத்தியும்,பால் குடம் சுமந்துவந்தும், வேல் குத்தியபடியும், பறவை காவடி எடுத்தபடியும் ஊர்வலமாக வைகை ஆற்றிற்கு சென்று அங்கு அம்மனுக்கு பூஜை செய்தனர்.

இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேல் குத்தியபடியும், 50க்கும் மேற்பட்டோர் 5 அடுக்கு, 3 அடுக்கு என 50 அடி முதல் 30 அடி வரை பறவை காவடி, தேர்காவடி, பால்காவடி, எடுத்தும் தங்களது நேர்த்திகடன்களை செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஊர்வலமாக சென்றதால் மாநகரிலுள்ள சாலைகள் முழுவதிலும் திருவிழா கோலம் பூண்டது.
காவடி எடுத்துசெல்லும் பக்தர்கள் தங்களது குழந்தைகள், உறவினர்களின் குழந்தைகளை கையில் எடுத்து ஆசிர்வதிக்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம் , 3 ம்தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறும்.
இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அலகு குத்தியும், மீனாட்சியம்மன், கருப்பசாமி, பத்திரகாளி வேடமணிந்தபடியும் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் பக்தி கோஷம் முழங்கியபடி காவடி எடுத்து வந்தனர்.
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *