நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கைபரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகிய இருவரை குறித்து திருச்சி பாஜக வைச்சேர்ந்த சூர்யா என்பவர் கடந்த மே-28 ஆம் தேதி தனியார் யூடியூப் சேனலில் அவதூறாகப் பேசியதைத் தொடர்ந்து அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பாலகுரு தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நிகழ்வில் வடக்கு தொகுதி செயலாளர் ராஜேந்திரன், மேற்கு தொகுதி இணைச் செயலாளர் சதிஸ்குமார், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் செல்லம்மாள், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் விஜய் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் ,வடகரை ராஜேந்திரன் ,ஜெயச்சந்திரன் மற்றும் சதிஸ்குமார் உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *