தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி
இன்று (18/06/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவர்களை நேரில் அழைத்துப் பாராட்டி, கல்வி ஊக்கத்தொகையை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
முதல் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 25 ஆயிரம், இரண்டாவது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 15 ஆயிரம், மூன்றாவதாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மற்றும் புத்தகப் பையைக் கனிமொழி எம்.பி வழங்கினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உடனிருந்தார்.