செங்கத்தில் தவறவிட்ட இரண்டு 2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செங்கம் போலீசார் அதிரடி நடவடிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பெங்களூர் சாலையில் உள்ள தனியார் எலக்ட்ரிகல்ஸ் உரிமையாளர் வங்கியில் செலுத்துவதற்காக சுமார் 2 லட்சம் ரூபாய் தொகையை
கைப்பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றபோது காலை 9.30 மணியளவில் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே தவறவிட்டதாக செங்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட சுமார் 4 மணி நேரத்தில்
செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் தலைமையிலான தனிப்பிரிவு போலீசார்
துரித நடவடிக்கை மேற்கொண்டு அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது தவறவிட்ட இரண்டு லட்ச ரூபாய் பணத்தை அவ்வழியாக சென்ற தனியார் தாபா ஊழியர் எடுத்தது தெரியவந்துள்ளது
இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்