கம்பம் அருகே ரேஷன் அரிசி வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் கைது 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் பூட் செல் போலீசார் அதிரடி நடவடிக்கை தேனி மாவட்டம் உத்தமபாளையம் புட் செல் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது இதன்படி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் சுருளிப்பட்டியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனர்

இதில் அந்த வீட்டில் 1050 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கம்பம் நகரைச் சேர்ந்த மாரிச்சாமி மகன் சதீஷ்குமார் வயசு 32 என்பவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்தி சென்று விற்பனை செய்வதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்

இதையடுத்து சதீஷ்குமாரை கைது செய்த உத்தமபாளையம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *