மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் நாகம்மாள் கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தில் ஆடி வெள்ளியையொட்டி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்
முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், மஞ்சள், உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பல்வேறு மலர்களால் அலங்காரமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி முருகன், செய்திருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது..