திருக்கழுக்குன்றம் ஜூலை 30
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 86 வது பிறந்த நாளை தொடர்ந்தும், வன்னியர் சங்கம் துவங்கி 47 வது ஆண்டு துவக்கமும், பாட்டாளி மக்கள் கட்சியின் 36 வது ஆண்டு தொடக்கம் என முப்பெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் பாமகவினர் வன்னியர் சங்கம் மற்றும் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய மேலேரிப்பாக்கம் நெய்குப்பி நரசங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கொடி ஏற்று விழா செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூர் ஆறுமுகம் கலந்து கொண்டு ஒன்றிய பகுதிகளில் கட்சி மற்றும் சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார் நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அமைப்பு தலைவர் பி வி கே வாசு வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஈ சி ஆர் சோலை த முனுசாமி துணை செயலாளர் எஸ் ஏ டி சுந்தரமூர்த்தி திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் சுந்தர் துணை தலைவர் மேனேஜர் சரவணன் நிர்வாகிகள் எடையாத்தூர் சுரேஷ் ஜனார்த்தனன் அருள் தாடி ஏழுமலை நெய்குப்பி டில்லி, வெங்கடேசன் கரியச்சேரி தர்மன், வெங்கப்பாக்கம் ஏழுமலை நத்தம் அரசு, நரசங்குப்பம் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் வன்னியர் சங்க பொறுப்பாளர்கள் என பலர் உடனிருந்தனர்.