பெரியகுளம் அருகே ரூபாய் 10 லட்சம் மோசடி செய்ததாக ராணுவ வீரர் வீடு முன்பு குடும்பத்துடன் தர்ணா
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமி புரத்தை சேர்ந்தவர். வெங்கடேசன் மனைவி சத்திய பாமா ஆகிய தம்பதிகளிடம் இதே ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பெருமாள் சாமி அதிகம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டு வட்டி தராமலும் பணத்தை திருப்பி தராமலும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பெருமாள் சாமியிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்து பணத்தை திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதால் அவர் வீட்டு முன்பு அமர்ந்து சத்தியபாமா வெங்கடேசன் தம்பதியினர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது