திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024 தொடர்பாக அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது

இக்கூட்டத்தில், ஆட்சியர் பூங்கொடி, தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லுாரி வளாகத்தில் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024 நடைபெறவுள்ளது.

இந்த 2 நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொதுமக்கள், பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அலுவலர்கள் என ஏராளமானோர் பழனி நகருக்கு வருகைபுரியவுள்ளனர்.

எனவே, பழனி செல்லும் சாலைகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மாநாடு நடைபெறுவதையொட்டி 21-ம் தேதி முதல் 25 தேதி வரை தடையற்ற மின் விநியோகம், திருக்கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் எவ்வித இடையூறுமின்றி மின் விநியோகம் செய்திட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *