திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள திருவோணமங்கலம் ஊராட்சி கீழ அமராவதி பகுதியில் தற்காலிக நெல் குடோன் உள்ளது.
அந்தப் பகுதியில் லாரி களை வாகன ஓட்டிகள் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக லாரியின் பேட்டரிகள் மற்றும் வயர்கள் திருட்டு போவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் வலங்கைமான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் முதல் நிலைக் காவலர் கல்யாண சுந்தரம் மற்றும் இரண்டாம் நிலை காவலர் ஆரிய பகவான் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்று உள்ளனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த நபர் வலங்கைமான் அருகே உள்ள மேல விடையல் ஊராட்சி ஆண்டாங்கோவில் மாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (37) என்பது தெரிய வந்தது. அவரைப் பிடித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் தற்காலிக நெல் குடோன் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரிகளிலிருந்து வயர்களை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து மாரிமுத்து மீது வலங்கைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.