தமிழக அரசின் மருத்துவத்துறை , வருவாய் துறை, காவல்துறை உள்ளிட்ட 18 துறைகளில் பொதுமக்களின் குறைகளை மனுவாக பெற்று அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது மக்களுடன் முதல்வர் திட்டம்

இந்த திட்டத்தை கிராம ஊரக பகுதியிலும் விரிவடைய செய்யும் நோக்கத்தில் ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் ஊராட்சியில் துவங்கிய இந்த முகாம் பால்நல்லூர், காட்ரம்பாக்கம், எறையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிறப்பாக நடைபெற்றது இதில் 2000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்

இந்நிலையில் திருமங்கலம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையேற்று ஊரக பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை துவக்கி வைத்தார்

இந்த திட்ட முகாம் துவக்க விழாவில் திருமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேகா நரேஷ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உஷா கோதண்டன், ஆண்டனி வினோத், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *