மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் பெற்ற குழந்தைகளை மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், மாநில அளவில் நடைபெற்ற மாவட்டங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகளில் மதுரை மாநகர தல்லாகுளம் காவல்நிலைய சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றம் சார்பாக, பங்கேற்ற 12 வயதுக்குட்பட்டோருக் கான 200 மீ மற்றும் 400 மீ தடகளப் போட்டியில் தங்கப்பதக்கங்கள் பெற்ற தயாளினி, அமல்ராஜ் மற்றும் 14 வயதுக்குட்பட்டோருக் கான 400.மீ தடகளப் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்ற கவின் ராஜ் ஆகியோரை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரில் அழைத்து பாராட்டினார். நிகழ்ச்சியில் தல்லாகுளம் போலீசார் மற்றும் தடகள போட்டியின் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *