அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை வியாழக்கிழமை தொடக்கி வைத்து அவர் மேலும் பேசுகையில், விளையாட்டு உங்களை உற்சாகப்படுத்தும், தன்னம்பிக்கை வளர்க்கும் . தோல்வியைக் கூட கடுமையான பயிற்சிகள் மூலம் வெற்றியாக மாற்ற முடியும். விளையாட்டின் மூலமும் உயர்ந்த இலக்கை அடைய முடியும் என்றார்.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலவலர் லெனின், பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினர். முன்னதாக உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் வரவேற்றார். நிகழாண்டு குறுவட்ட போட்டிகளுக்கான ஏற்பாடுகளை குறுவட்ட செயலரும், சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான சின்னதுரை மற்றும் உடற்கல்வி ஆசிரியர் செய்துள்ளனர்.

போட்டி நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் அந்தோணிசாமி, இளவரசன், வீரபாண்டியன் உள்ளிட்டோர் செயல்படுகின்றனர்.

தடகளம், பூ பந்து, வளைகோல், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் அரியலூர் வட்டத்துக்குள் உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். இந்த குறுவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றிப் பெறுவோர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வியாழக்கிழமை குறுவட்ட அளவிலான போட்டிகளை தொடக்கி வைத்து பேசிய மாவட்ட கல்வி அலுவலர் நேசபிரபா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *