ஆசிரியர் தினத்தையொட்டி
முதல்வர் ஸ்டாலின்
பகுதிநேர ஆசிரியர்களை பணநிரந்தரம் செய்ய வேண்டும் :
12 ஆயிரம் குடும்பங்கள் நலன் காக்க இதை செய்ய வேண்டும் :
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் வேண்டுகோள்:
திமுக தேர்தல் வாக்குறுதி 181ஐ நிறைவேற்றி
பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரையும்
முதல்வர் ஸ்டாலின்
பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி வருகிறது.
இந்த நேரத்தில் கலைஞர் அவர்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்து இருந்த பணி நிரந்தரம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
கலைஞர் போலவே, முதல்வர் ஸ்டாலினும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வாக்குறுதியை கொடுத்தார்.
உங்கள் தொகுதி ஸ்டாலின் என்ற விடியல் தர போறாரு ஸ்டாலின் நிகழ்ச்சி நடந்த தருமபுரி மயிலாடுதுறை கன்னியாகுமரியில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் பணி நிரந்தரம் செய்வேன் என்றார்.
இந்த வாக்குறுதியை நம்பிதான் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களும் காத்துள்ளோம்.
ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வந்த பகுதிநேர ஆசிரியர்களுக்கு,
பணிநிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்துல் திமுக ஆட்சியில் இந்த 2024 ஆம் ஆண்டு வழங்கிய 2500 ரூபாய் சம்பள உயர்வால் கிடைக்கின்ற,
தற்போதைய 12,500 ரூபாய் சம்பளம் இந்த காலத்தில் குடும்பத்தை நடத்த போதாது என்பதை,
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாரு 30 ஆயிரம் ரூபாய் சம்பளமாவது வழங்க வேண்டும்.
மே மாதமும் சம்பளத்துடன், அனைத்து வேலை நாட்களிலும் முழு நேர வேலை வழங்கி 13 ஆண்டுகளாக செய்கின்ற இந்த வேலையை முறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர்களுக்கு உரிய அங்கீகாரத்தை
பகுதிநேர ஆசிரியர்களாக
உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் அனைவரையும்
பணிநிரந்தரம் செய்து வழங்க வேண்டும்.
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
செல் : 9487257203