மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சி – செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள் பற்றிய கருத்தரங்கு

ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை வரும் செப்டம்பர் 22ம் தேதி ‘செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோடிக் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தற்போதைய புதிய கருத்துகள்” பற்றிய கருத்தரங்கை ஹோட்டல் ரெசிடென்சி டவரில் நடத்துவதில் பெருமை கொள்கிறது.

இந்த கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள். மற்றும் ஆராய்ச்சியாளர்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொள்கிறார்கள். தங்களுடைய அறிவு, அனுபவம் மற்றும் இதில் உள்ள முன்னேற்றங்கள் பற்றி கலந்துரையாட உள்ளனர்.

கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகள்

*விரிவுரைகள் : ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பற்றி வெளிநாட்டு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களின் விரிவுரைகள்.

  • நேரடி ஒளிபரப்பு : செயற்கை நுண்ணறிவு பெற்ற ரோபோ செய்யும் முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சையின் நேரடி ஒளிபரப்பு.

*குழு கலந்துரையாடல் : தற்போது மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் உள்ள தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் நுட்பங்கள் பற்றி கலந்துரையாடல்.

கண்காட்சி: எலும்பியல் துறையில் உள்ள புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய கண்காட்சி. ரோபோடிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சையால் நோயாளிகள் அதிவிரைவாக, வலியின்றி குணம் அடைவதை காணலாம். சாதாரண மனிதர்களும் எளிதில் புரிந்து கொண்டு, விவாதித்து சரியான சிகிச்சை முறையை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புரிதலை சமூகத்தில் உள்ள அனைத்து மக்களும் அறிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் முக்கிய நோக்கமாகும் என்று ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைமை எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ரெக்ஸ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *